Wednesday, November 27, 2013

அழாதே... அழகு குறையும்..!

அழாதே... அழகு குறையும்..!
 
அழுகையைப் பற்றி நம்ம ஞானிகள் நிறைய சொல்லியிருக்காங்க... கண்ணீர் ஊற்றால் உடல் நனைய அழுது இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்று வள்ளலார் கூறுவார். மாணிக்கவாசகரும் இறையருளை ‘அழுதால் பெறலாமே’ என்று கூறுவார். திருமங்கை ஆழ்வார் மட்டும் சளைத்தவரா? ‘உடம்பெலாம் கண்ண நீர் சோர நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்’ என்பார். நிலையான இறை அருளைப் பெற அழுவது முறை. ஆனால், அழியும் பொருளைப் பெறவும் அதேபோல அழுவது எப்படி முறையாகும். பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இந்த அழுகை. கணவன் போடும் தும்மலில் தொடங்கி கடையில் வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் பெண்கள் குணம் என்று குற்றம்சாட்டுவார்கள் ஆண்கள்.
 
வள்ளுவன் கண்ட பெண்கள் முதல் வலைத்தளம் கண்ட பெண்கள் வரை அழுகின்ற இந்நிலையில் மாற்றம் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை.  சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுகைப் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்தக் குழுவில் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.
 
பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகைக் காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணி நேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரைச் சோதனைக் குழாயில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரைத் தயார் செய்தனர்.பின்னர் கண்ணீர் வடித்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்பு நீரையும் பேஷியல் செய்வதுபோல் பூசினர். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்குப் பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்தப் பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களைத் துல்லியமாகப் பதிவு செய்தனர். கூடவே காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருவரின் உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனராம். ஆய்வின் முடிவில் அழுவதால் ஹார்மோன்களில் மோசமான மாற்றம் ஏற்பட்டு பெண்களின் அழகு குறையும் என்று தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

எழுமின்... விழிமின்!

எழுமின்... விழிமின்!
ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்... அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமிஜிதான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ... தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.

 

அதுமட்டுமல்ல... ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார். அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ''அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்'' என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன. அதைப் பார்த்த சுவாமிஜி, ''நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்'' என்றார்.சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். 'பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார் என்பதை எண்ணும்போது, சுவாமிஜியின் பெருமை விண்ணையெட்டி நிற்பது புரிகிறதல்லவா?!

Saturday, November 23, 2013

பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்ன ?

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 24 வருட ஆட்டத்துக்குப் பிறகு ஓய்வெடுக்க முடிவு செய்ததும் அவருக்குப் பாரத் ரத்னா என்ற இந்திய அரசின் உயரிய விருதை அரசு அறிவித்திருக்கிறது. கூடவே சி.என்.ஆர்.ராவ் என்கிற மக்கள் யாரும் அறிய வாய்ப்பில்லாத ஒரு மூத்த விஞ்ஞானிக்கும் விருதை அறிவித்துள்ளது.சச்சின் நல்லவர்தான். ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே ஆடினார். அவருக்கு எதற்கு விருது என்று ஐக்கிய ஜனதா தளப் பிரமுகர் ஒருவர் கேட்டிருக்கிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களுக்கு விருது தரக் கூடாது என்றால் விஞ்ஞானியும் தகுதி இழந்துவிடுவார். அவர் மட்டுமல்ல, இதற்கு முன்பு பாரத் ரத்னா விருது வாங்கியவர்களில் எம்.ஜி.ஆர், எம்.எஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, விருது பெற்ற பல குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் சம்பளம் வாங்கிக்கொண்டு பணியாற்றியவர்கள்தான்.தேசத்தின் மிக உயரிய இந்த விருது எந்த அடிப்படையில் யாருக்குத் தரப்படுகிறது என்பதற்குத் தெளிவான, துல்லியமான வரையறைகள் இல்லை. நாட்டுக்கு ஆற்றிய மிக உச்சமான தொண்டுக்கு (for the highest degrees of national service) என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. தொண்டு எந்தத் துறையிலும் இருக்கலாம். கலை, இலக்கிய, அறிவியல் துறைகள் மட்டுமன்றி எந்தப் பொதுத் தொண்டின் அங்கீகாரமுமாகவும் தரப்படலாம் என்று இருந்த வரையறையை எந்தத் துறையிலும் மனித முயற்சியின் உச்சமான சாதனைக்கு என்று அண்மையில் திருத்தினார்கள். கோயில் பிரசாதமாக சுண்டல் விநியோகிப்பது போல இந்த உயரிய விருதைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வருடத்தில் மூன்று பேருக்கு மேல் விருது கொடுக்கப்படக் கூடாது என்ற விதியும் போடப்பட்டிருக்கிறது. யாருக்கு விருது தரலாம் என்று தேர்வு செய்வது யார்? ஒரே ஒருத்தர் கையில்தான் அதிகாரம் இருக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவரிடம் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வளவுதான்.இந்த விதியைப் படித்துவிட்டு இதுவரை பாரத் ரத்னா விருது தரப்பட்டோர் பட்டியலைப் பரிசீலித்தால் நிச்சயம் வருத்தமாக இருக்கிறது. தங்களுடன் பதவியில் இருக்கிற சகாவுக்கே விருது கொடுத்துக் கொள்வது என்ற நடைமுறையைப் பலமுறை பிரதமரும் குடியரசுத் தலைவரும் பின்பற்றி இருக்கிறார்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1954ல் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருதை அன்றைய பிரதமர் நேருவும் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து ஜாகீர் உசேன் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுகிறது. கோவிந்த் வல்லப் பந்த் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும்போதே அவருக்கு 1957ல் பாரத் ரத்னா கிடைக்கிறது. (இவர்தான் ஹிந்தியை ஆட்சிமொழியாக்கியவர்.)
குடியரசுத் தலைவராக இருப்பவருக்கே அவர் தரும் விருதைத் தரமுடியாது என்பதால், ராஜேந்திர பிரசாத் 1962ல் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே அவருக்கு பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் என்னால் ஜீரணிக்கவே முடியாமல் இருக்கும் தகவல் நான் மிகவும் மதிக்கும் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியதுதான். அவருக்கு 1955ல் பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. அப்போது அவர்தான் பிரதமர். அப்படியானால், தனக்கு விருது தரும்படி தானே குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தாரா? பின்னாளில் அவர் மகள் இந்திரா காந்திக்கு 1971ல் பாரத் ரத்னா விருது தரப்பட்டது. அப்போது இந்திராவேதான் பிரதமர்!  இப்போது சச்சினுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் எழுந்த இன்னொரு சர்ச்சை, சச்சினை விட முக்கியமானவரான இந்திய ஹாக்கியின் தந்தை தியான்சந்துக்கு தராமல் சச்சினுக்குக் கொடுக்கலாமா என்பதாகும். தியான்சந்த் சாதனையாளர்தான். ஒலிம்பிக்கில் ஹாக்கியில் 1928,1932,1936 ஆகிய மூன்று வருடங்களும் தங்கம் வென்றவர். ஆனால் அவரது சாதனை சுதந்திர இந்தியாவுடன் எந்தச் சம்பந்தமும் இல்லாதது. விடுதலைக்கு முந்தைய காலகட்டம் அது. தவிர, அவர் அந்தச் சமயத்திலும் விடுதலை வரையிலும் கூட, பிரிட்டிஷ் ராணுவத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே அவரை பாரத ரத்னாவாகக் கருத நியாயமில்லை.எந்த அடிப்படையில் பாரத் ரத்னாவுக்கு ஒருவரை பரிசீலிப்பது என்பது நிச்சயம் குழப்பமானதாகவே இருக்கிறது. வாஜ்பாயி பாரத் ரத்னாவுக்கு உரியவர் என்றால் அதற்கு என்ன காரணம்? பொக்ரானில் இரண்டாம் முறை அணுகுண்டு வெடித்த சாதனைக்கா? அதற்காகத்தான் ஏற்கெனவே கலாமுக்குக் கொடுத்தாகிவிட்டதே! அரசியல் ரீதியாக என்றால் அத்வானி உரியவர் இல்லையா? எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கலாம் என்றால் ஏன் கருணாநிதிக்குக் கொடுக்கக்கூடாது ? லதா மங்கேஷ்கருக்குத் தரலாம் என்றால் ஏன் பி.சுசீலாவுக்கும் தரக் கூடாது ? மராத்திய லதா ஹிந்தியில் பாடி இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய மாதிரி தானே, தெலுங்கு சுசீலா தமிழில் பாடி வலுவூட்டியிருக்கிறார்? பீம்சேன் ஜோஷிக்கு உண்டு. பாலமுரளிக்குக் கிடையாதா? பிஸ்மில்லாகானுக்கு உண்டு. ராஜரத்தினம் பிள்ளைக்குக் கிடையாதா? இந்தக் கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
பாரத் ரத்னா சர்ச்சைகளுக்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளன. ஒன்று எல்லா அரசு விருதுகளையும் முடிவு செய்ய சுயேச்சையான அறிஞர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம். பத்மஸ்ரீ, பத்மபூஷண், விபூஷன் எல்லாவற்றையும் இதன் கீழ் கொண்டு வந்துவிடலாம். அரசியல், நிர்வாகம் ஆகியவற்றின் செல்வாக்கு இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம், இந்தக் குழுவுக்கும் தேர்தல் ஆணையம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரிப் போல இருக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான்.எனவே இரண்டாவது தீர்வே மேலானது. இனி இந்த விருதுகள் கிடையாது என்று அறிவித்துவிடலாம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிறபோது எல்லோரும் இந்நாட்டு பாரத் ரத்னாக்கள்தானே.

Friday, November 22, 2013

அஜீத்தின் வீரம் – ஒரு மினி டிரைய்லர்!!

veeram-teaser-1024x576
வருகிற பொங்கலுக்கு தல அஜீத் தனது வீரத்தை சர்க்கரை பொங்கலாக பரிமாறப்போகிறார். அதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இது…
*அஜீத் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்
*எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை மாதிரியும், ரஜினியின் முரட்டுக்காளை மாதிரியும் செண்டிமெண்ட் கம் ஆக்ஷன் மூவி.
*படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.
*அஜீத்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.
*அஜீத்தை அத்தான்… அத்தான்… என்று துரத்தி துரத்தி காதலிக்கும் வில்லேஜ் குலாப் ஜாமூன் தமன்னா.
*சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜீத் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்பு பொங்கல்தான். முதன் முறையாக அஜீத் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம்.
*நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
*வேட்டிய கால் வரைக்கும் அவிழ்த்து விட்டிருந்தால் தல சாந்தமாக இருக்கார்னு அர்த்தம். வேட்டிய மடிச்சு கட்டிட்டார்னா அதகளம்தான்.
*கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும்.
*தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டைய கிளப்பும்.
*உள்ளூர் மண்மணக்கும் பாட்டும் உண்டு. சுவிட்சர்லாந்து பனிமலை பின்னணியில் அழகா டூயட்டும் உண்டு.
*படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும்.
*ஷூட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், கலர் கரெக்ஷன், டப்பிங், எட்டிட்டிங் என வீரத்துக்கு அழகு சேர்க்கும் பணிகள் வேகமா நடந்துக்கிட்டிருக்கு.
*சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலா, ரத்த பொறியல்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு.
தல வைக்கும் பொங்கல் விருந்தை சாப்பிட தயாராகுங்க பாஸ்…!

Pinnaple secrets அன்னாசி பழத்தின் நன்மைகள் மற்றும் வரலாறு


பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத்திலிருந்து எதையெதையோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக ஏற்றுமதி செய்தார். ஆனால், நீண்ட கப்பல் பயணத்தில் அந்தப் பழங்கள் எல்லாம் அழுகிவிட்டன. கொலம்பஸ் நொந்துபோனார்.நல்லவேளையாக, ஒரே ஒரு பழம் மட்டும் அழுகாமல் தப்பியிருந்தது. அதைத் தன்னுடைய அரசர் ஃபெர்டினாண்ட்க்கும் அரசி இசபெல்லாவுக்கும் பரிசாகக் கொடுத்தார் கொலம்பஸ்.அந்தப் பழத்தின் தலையில் கிரீடம்போல இலைகள் முளைத்திருந்தன. சொரசொரப்பான தேகம். தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருந்தது, முகர்ந்து பார்த்தால் ஆளை மயக்கியது.வாசனையிலேயே அசந்துபோன அரசர், அந்தப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டார். ஆஹா! நான் இதுவரை இப்படி ஒரு பழத்தைச் சாப்பிட்டதில்லையே" என்று கிறங்கிவிட்டார்.உடனடியாக இந்தப் பழத்தை நம் நாடு முழுவதும் விளைவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இனிமேல் தினம் நான் இதைச் சாப்பிடவேண்டும்!"

அரசர் நினைத்ததுபோல அது அத்தனை சுலபம் இல்லை. அந்தப் பழம் சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில், மண் வகைகளில்தான் விளையும். அன்றைய ஐரோப்பாவுக்கும் அதற்கும் ஒத்துப்போகவில்லை.அதனால் என்ன? மன்னர் நினைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதைத் தருவிக்கலாமே?அன்று தொடங்கி, அந்தப் பழம் அரசர்களின் விருப்பமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு செலவானாலும் சரி, அந்தப் பழம் எங்கே விளைகிறதோ அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.அபூர்வமாக மட்டுமே கிடைக்கும் அந்தப் பழத்தை அவர்கள் ‘அரசர்களின் பழம்’ (Fruit of the kings)என்று செல்லமாக அழைத்தார்கள்.இன்றைக்கு, அந்த அருமையான பழம் உலகம் முழுவதும் கிடைக்கிறது. மன்னர்கள் மட்டுமல்ல, நம்மைப் போன்ற மக்களும் வாங்கிச் சாப்பிடலாம்.ஆகவே, ‘அரசர்களின் பழம்’ என்ற பெயரைத் திருப்பிப்போட்டு, அதனைப் ‘பழங்களின் அரசன்’ (King of fruits) என்று மாற்றிவிட்டார்கள். ‘பைனாப்பிள்’ என்று ஆங்கிலத்திலும், ‘அன்னாசி’ என்று தமிழிலும் அழைக்கப்படும் சுவையான பழம் தான் அது!கடைக்குச் செல்கிறீர்கள். அன்னாசிப் பழம் ஒன்றைக் கையில் எடுக்கிறீர்கள். கடைக்காரரிடம் இந்தப் பழம் என்ன விலை?" என்று விசாரிக்கிறீர்கள்.உண்மையில் உங்கள் கேள்வியே தவறு. அது ‘பழம்’ அல்ல, ‘பழங்கள்’! 

ஆமாம், நாம் ஒரு பழமாக நினைக்கும் அன்னாசிக்குள் பல பழங்கள் ஒருங்கிணைந்து கூட்டணி சேர்ந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் "Multiple Fruit' என்று அழைக்கிறார்கள்.சந்தேகமாக இருக்கிறதா? ஓர் அன்னாசிப் பழத்தைக் குறுக்கே நறுக்கிப் பாருங்கள், மையத்தில் ஒரு தண்டு தெரியும், அதைச் சுற்றிச் சிறு கண் போன்ற பகுதிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழம். மொத்தமாகச் சேர்ந்து சொரசொரப்பான வெளித்தோலுடன் வளர்கின்றன!பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் அன்னாசிப் பழங்கள் அதிகபட்சம் ஓரிரு கிலோ எடைதான் இருக்கும். ஆனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவை மிகப் பெரியதாக வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ எடைவரை செல்லக்கூடும்.அன்னாசி புதர் போன்ற சிறு செடிகளில் விளைகிறது. பொதுவாக மலைச் சரிவுகளில்தான் அன்னாசி நன்றாகச் செழித்து வளரும். மலையோரக் கிராமங்கள் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதனைப் பயிரிடுகிறார்கள்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அன்னாசியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.‘பைனாப்பிள்’ என்ற ஆங்கிலச் சொல்லை, பைன் + ஆப்பிள் என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பைன் மரக் கூம்பைப் போல் சொரசொரப்பாக இருக்கும், ஆனால் வெட்டிச் சாப்பிட்டால் ஆப்பிளைப்போல ருசிக்கும் என்பதால் அப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.இதனைத் தமிழில் ‘அன்னாசி’ என்று அழைக்கிறோம். உண்மையில் இது போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து வந்த பெயர். செந்தாழை, பிருத்தி, அன்ன தாழை போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதனை அழைப்பது உண்டு.இந்தச் செடியின் தாவரவியல் பெயர் ‘அனனாஸ்’. இதற்கு ‘மிக நல்ல பழம்’ என்று அர்த்தம்.அன்னாசிப் பழத்தைத் தோல் சீவித் துண்டாக்கி அப்படியே சாப்பிடலாம். பல நாடுகளில் இதன்மீது உப்பு, காரப்பொடியைத் தூவி அப்படியே சாப்பிடுவார்கள். அப்படியே குச்சியில் குத்தி எடுத்து ஐஸ்க்ரீம்போலச் சுவைக்கிறவர்கள் உண்டு. இதேபோல, அன்னாசிப் பழரசமும் மிகச் சுவையானது. இந்தப் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள், ஜெல்லி தயாரிக்கிறார்கள், கேக் போன்ற இனிப்புகளின் மீது அலங்காரமாக நறுக்கி வைக்கிறார்கள்!

பிட்ஸாவில் பொதுவாகக் காரமான சமாசாரங்கள், காய்கறிகள்தான் சேர்க்கப்படும். ஆனால் அன்னாசிக்கு மட்டும் அங்கே விதிவிலக்கு, இனிப்பான அன்னாசிப் பழத்துண்டுகளைத் தூவிய பிட்ஸா உலகம் முழுக்கப் பிரபலம்.இவை தவிர, அன்னாசிப் பழத்தைச் சமைத்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. குறிப்பாக, அன்னாசி அல்வா பலருக்குப் பிடித்த இனிப்பு வகை. அன்னாசிப் பழத்தில் ரசம், பச்சடி, சாலட் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கேசரியில் இதனைத் துண்டாக்கிச் சேர்ப்பது தனி சுவையைத் தரும்.அன்னாசியில் பெரும்பகுதி தண்ணீர்தான். ஆகவே, இதை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும், ஆனால் தொப்பை போடாது.பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை இதில் ஏராளமாக உண்டு. வைட்டமின் இயும் அதிகமாக இருக்கிறது.அன்னாசிப் பழத்துக்கு மருத்துவ குணங்களும் நிறைய உண்டு. உடலில் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. வயிற்றில் புழுக்கள் இருந்தால் அவற்றை நீக்கிக் குணப்படுத்தும். வியர்வை, சிறுநீர் சுரப்பில் இருக்கக்கூடிய கோளாறுகளை அகற்றும். உடலில் காயம்படும்போது ரத்தம் அதிகம் வெளியேறாமல் காக்கும்.‘பைனா’வை நேரடியாகவோ, அல்லது, பட்டு, பாலியெஸ்டருடன் சேர்த்தோ நெசவு செய்யலாம். இதிலிருந்து சில விசேஷமான ஆடைகளைச் செய்கிறார்கள். மேஜை விரிப்பு, பைகள், பாய்கள் போன்றவற்றையும் தயாரிக்கிறார்கள்.அன்னாசியை நறுக்கும்போது நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற தோல், இலைகள் போன்றவற்றுக்கும் பயன் இருக்கிறது. வினிகர் உற்பத்தியிலும், வேறு சில பானங்களைத் தயாரிக்கும்போதும் இவற்றைச் சேர்க்கிறார்கள், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.

Friday, November 15, 2013

OPEN ACCESS RESOURCES ON INTERNET - STATISTICS

Open access resources on internet   statistics

Sila payanulla inaiya thalangal...

சில பயனுள்ள இனையத்தளங்கள்

How electricity reaches our homes

INDIA'S NEWEST AIRCRAFT CARRIER INS VIKRAMADITYA: ALL YOU NEED TO KNOW

INDIA'S NEWEST AIRCRAFT CARRIER INS VIKRAMADITYA: ALL YOU NEED TO KNOW


Defence Minister AK Antony reached Russia last night for the commissioning of the aircraft carrier INS Vikramaditya today at the Sevmash Shipyard, Russia's nuclear submarine building centre.Russian Deputy Prime Minister Dmitry Rogozin and senior government and naval officials of the two countries are also scheduled to attend the ceremony for handing over the aircraft carrier that may be a game changer for India's naval aspirations.Here is all you need to know about INS Vikramaditya:* The 44,500 tonne warship with a length of 284m will have MiG-29K naval combat aircraft along with Kamov 31 and Kamov 28 anti-submarine warfare and maritime surveillance helicopters.* The MiG 29-Ks will provide a significant boost to Indian Navy with their range of over 700 nautical miles, extendable to over 1,900 nautical miles, with mid-air refuelling, and an array of weapons like anti-ship missiles, beyond visual range air-to- air missiles and guided bombs and rockets.*To accommodate MiG 29 K fighters, a new 14 degree Ski jump was set up and strengthening of arresting gear area and runway was carried out. The steel work for carrying out structural modification on flight deck amounted to over 2500T:reportsIndian Express.* The INS Vikramaditya is the refurbished aircraft carrier formerly known as Admiral Gorshkov.* Indian Express reports: The carrier originally was a Kiev class aircraft carrying cruiser named 'Baku' that was constructed in Ukraine. The ship was never supposed to carry conventional fixed-wing fighters like the MiG 29 K, but was designed for Vertical Take off and Landing (VTOL) fighters. Commissioned in December 1987, the Baku was heavily armed with twelve Anti-Ship Missile launchers, ten gun mounts of differing calibre and rocket launchers and depth charges.*It was later renamed as Admiral Gorshkov and last sailed in 1995 in Russia, before being offered to India.* The carrier was finally retrofitted and upgraded at the cost of $ 2.3 billion.* The aircraft carrier does not have its own air defence missile system. The Barak missile was chosen by the Indian Navy to be fitted on board once it arrives in India to provide it protection from aerial attacks.*The Barak missiles are also in controversy in view of an ongoing CBI probe against them in connection with an alleged bribery scandal of 2006.* An escort group of warships has been sent to Russia to bring the carrier to India through a classified route to bring it to its home base in the Arabian Sea since it doesnot have any air defence systems on board to protect itself from aerial attacks.* A1,600-member Indian crew commanded by Captain Suraj Berry and a Russian surety team comprising 183 technicians will be aboard the ship as it sails to IndiareportsThe Hindu.The technicianswill reportedly stay back in India for a year.* "The Indian Navy, which always maintained its engineers and technicians on the vessel throughout the refit and modernisation process took the right decision to change many aggregates, components and entire cabling, instead of their repairs," said Chief Delivery Commissioner of Sevmash shipyard, Igor Leonov, who will lead the onboard Russian guaranty team during the Vikramaditya's almost two-month voyage to its home base on the Western coast of India in Karwar.* The Navy plans to bring the aircraft carrier to India and deploy it at the newly-developed Karwar naval base called Project Seabird.* After almost nine years of negotiations the initial $ 1.5 billion contract for retrofitting the aircraft carrier and buying 16 MiG-29K, K/UB deck-based fighters was signed in 2004.* Protracted negotiations followed, with the refit cost jumping from $400 million to $700 million. In January 2004, a $1.5 billion package deal was eventually inked, with $974 million earmarked for the refit and rest for 16 MiG-29Ks. Gorshkov was then to be delivered by August 2008: reports the Times of India.* By the end of 2007, when it became clear that Russia would not deliver the radically redesigned vessel by 2008 deadline, the relations dipped to an all-time low.* However, the two countries inked an additional agreement under which India agreed to pay a higher price for its refit.* In their private discussions Indian officials conceded that even with the cost escalation, it was a good deal, since a similar vessel would cost not less than double the price in the international market, but nobody aircraft carriers for export.With PTI inputs

Saturday, November 9, 2013

Sachin's Great Fan சுதிர் குமார் சௌத்ரி!!!


ஆளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். இவர் ஒரு வெறித்தனமான சச்சின் ரசிகர் என்று. மொட்டைத் தலையில் இந்தியக் கொடி வரையப்பட்டிருக்கும். மேல்சட்டை அணியாமல் இடுப்புவரை முன்னும் பின்னும் மூவர்ணத்தால் பெயின்ட் செய்யப்பட்டு, ‘டெண்டுல்கர் 10’ என்று எழுதப்பட்டிருக்கும். மூக்கில் அசோகச் சக்கரம். மீசையில்கூட மூவர்ணம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த அடையாளங்களோடு சச்சினின் தீவிர ரசிகராகப் பிரபலமாகியிருக்கிறார் பீகாரின் முசாஃபர்புர் நகரைச் சேர்ந்த சுதிர் குமார் சௌத்ரி. 

மேட்ச் நடக்கும் சமயங்களில், இந்திய வீரர்கள் ஃபோர், சிக்ஸர் அடித்தால், சுதிர் கொடியை ஆட்டிக் கொண்டும் சங்கை ஊதிக்கொண்டும் தோன்றும் காட்சிகளை டி.வி.யில் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இந்தியா மேட்சில் தோற்றுவிட்டால் வருத்தமாகிவிடுவார். அந்த நாளில் எதுவும் சாப்பிட மாட்டார்.  நவம்பர் 2003 முதல் இந்தியா ஆடிய சர்வதேச மேட்சுகள், ஐ.பி.எல். என எல்லாம் சேர்த்து இதுவரை 300 மேட்சுகளுக்குமேல் (206 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்டுகள், 70 டி20 மேட்சுகள்) நேரில் பார்த்திருக்கிறார். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, டிரெஸ்ஸிங் ரூமுக்கு சுதிரை அழைத்து உலகக் கோப்பையை அவரிடம் வழங்கிய சச்சின், போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார் சுதிர். கொல்கத்தாவில் மேட்ச் நடந்தால் கங்குலியின் வீட்டில்தான் சைக்கிளை பார்க்கிங் செய்வார். சச்சின் மேட்ச் டிக்கெட்டுகளைத் தருவதன் நன்றிக்கடனாக இவர் ஒவ்வொரு வருடமும் சச்சினுக்கு 1000 லிச்சிப் பழங்களைத் தருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் விற்கும் சங்குகளையும் அவ்வப்போது தருவது வழக்கம். சச்சினுக்காக இரண்டுமுறை மைதானத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். ஒருமுறை சச்சினின் காலைத் தொட்டு வணங்க முயற்சி செய்தபோது சச்சின் அதைத் தடுத்து, சுதிரைப் பிடிக்கவந்த காவலர்களிடம், ‘அவரை அடிக்க வேண்டாம். அவரே போய்விடுவார்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஹைதராபாத் மேட்ச் ஒன்றிலும் இதேபோல நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சுதிரை ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்று பழுக்க அடித்திருக்கிறார்கள். 33 வயது சுதிருக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கிடையாது. சுதிர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக வேண்டாம். நான் இந்தியா முழுக்கச் சுற்றுபவன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைத் துணை" என்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுஷ்ருத் ஜெயின், இந்திய கிரிக்கெட் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்கிறார். அதில் சுதிரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தில்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், சுதிர் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். ‘எனக்கும் சச்சினுக்குமான உறவு, கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது. சச்சின் ஓய்வுக்குப் பிறகும் என்னை நீங்கள் மேட்சுகளில் பார்க்கமுடியும். ‘மிஸ் யூ டெண்டுல்கர்’ என்று என் உடலில் எழுதப்பட்டிருக்கும்," என்கிறார் சுதிர். 

Virat Vs Rohit

விராத் கோலி - ரோஹித் சர்மா


உங்களுடைய 100 சதங்கள் சாதனை, யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு சச்சின் அளித்த பதில் : ‘என் சாதனையை விராத் கோலி, ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது.’ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் இல்லையே என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா? ஒருநாள் போட்டியில், சச்சின் இல்லாத குறையை கோலி, ரோஹித் போன்ற இளம் வீரர்கள்தான் தீர்த்து வைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இவ்விருவரின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்கிறது. 2008ம் வருடம், விராத் கோலிக்குப் பல கதவுகளைத் திறந்தது. அவர் தலைமையிலான U19 அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த வருடம்தான் இலங்கைத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தொடரில் ஓரளவு சிறப்பாகவே ஆடினார். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் அடுத்த தொடர்களில் இடம் பெறவில்லை. ஒரு வருடம் இந்திய அணியில் கோலி இல்லை. கம்பீருக்கு காயம் ஏற்பட்டபோது மீண்டும் அணிக்குள் நுழைந்தார். பிறகு, கோலியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.பி.எல்., கோலியின் திறமையைக் கொண்டுவந்த மாதிரி அவருடைய ஆக்ரோஷமான பக்கத்தையும் காண்பித்தது. இளமைத் துடிப்பு, கோபம், பொறுப்பற்றத்தன்மை போன்றவற்றால் திறமை வீணாகிவிடுமோ என்று பலரும் பயந்தார்கள். ‘கிரிக்கெட்டை விடவும் தான் பெரிய ஆள் என்று கோலி நினைத்துக் கொண்டிருக்கிறார்,’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஒருமுறை சொன்னது கோலியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்களைப் பக்குவமாகக் கையாண்டார். ‘நான் செய்தது தவறுதான். திருந்திவிட்டேன்’ என்று பேட்டி கொடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை முந்திக்கொண்டு 2011 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார். இறுதி ஆட்டத்தில் சச்சினும் ஷேவாக்கும் முதலிலேயே அவுட் ஆனபின்பு, கம்பீருடன் ஜோடி சேர்ந்த கோலி, மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக் கொண்டது, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மிக மோசமாக டெஸ்டுகளில் தோற்றபோது, செஞ்சுரி அடித்த ஒரே பேட்ஸ்மேன், கோலி. 

சிபி முத்தரப்புத் தொடரில் அடித்த செஞ்சுரிகளால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார். தமக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்து சென்றது இந்தத் தருணத்தில்தான். இலங்கையுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்தார். (அந்தச் சமயத்தில் 5 ஆட்டங்களில் 4 செஞ்சுரிகள் அடித்தார்.) இப்போது ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில், அதிரடியாக அடித்த 2 செஞ்சுரிகளும் கோலியை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிவிட்டது. ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் கோலிதான் நெ.1.சச்சினின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்தின் குக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோலியால் சச்சினின் ஒருநாள் செஞ்சுரி சாதனைகளைத் தாண்ட வாய்ப்புண்டு’ என்று மதிப்பிடுகிறார் கவாஸ்கர். ‘சச்சின் ஓய்வு பெறுகிறார் என்று ஆஸ்திரேலியர்கள் சந்தோஷப்பட வேண்டாம். அவருடைய வாரிசான கோலி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். சமீபத்திய இரண்டு செஞ்சுரிகளும் ஷார்ஜா செஞ்சுரிகளுக்குச் சமம்’ என்கிறார் ஐயன் சாப்பல். இது கோலியின் காலம்.

தோனிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாகப் போகிறார் கோலி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது அவர்கள் தோனிக்கு மாற்றாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றவில்லை. ஆனால், கோலிக்கு ஒரு கேப்டனாக நிறைய அனுபவங்கள் உண்டு. ஏற்கெனவே U19 அணி, ஐ.பி.எல்., ரஞ்சி அணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியக் கிரிக்கெட்டில் கோலியை விடவும் நம்பிக்கை அளிக்கிற ஒரு கிரிக்கெட்டர் இல்லை.கடந்த ஆறேழு வருடங்களில், கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் வீணடித்து, ஆனால் தொடர்ந்து அணியில் நீடித்தபோது, ரோஹித் சர்மாவால் எரிச்சலடையாத இந்திய ரசிகரே இல்லை என்று சொல்லலாம். ரோஹித் சர்மாவை என்ன செய்வது என்று பி.சி.சி.ஐ.யும் நீண்ட நாளாகக் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. வாய்ப்பு அளிக்கப்படும் போதெல்லாம் வீணடித்து விடுவார். ஆனால், அவ்வப்போது சிறிய அணிகளுடனும் ஐ.பி.எல்.லிலும் நன்றாக ஆடி தம் இருப்பை உறுதி செய்துகொள்வார். சாம்பியன்ஸ் டிராபி வரை இப்படித்தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை கழிந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் முதலில் விஜயும் தவானும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதாகத் திட்டம். இதை தோனியும் உறுதி செய்திருந்தார். ஆனால் விஜயின் கெட்ட நேரம், பயிற்சி ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இதனால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். ஆச்சர்யமாக, முதன்முறையாக மிகப்பெரிய போட்டியில், மிகப்பெரிய அணிகளுடன் பிரமாதமாக ஆடினார். ரோஹித்தும் தவானும் அருமையான தொடக்கம் கொடுத்து இந்தியா பல மேட்சுகள் ஜெயிக்கக் காரணமாக இருந்தார்கள். இறுதியில், இத்தனை நாட்களாகத் தம்மைச் சகித்துக் கொண்டவர்களுக்காக ரோஹித் அளித்த பரிசுதான், இரட்டைச் சதம். ரோஹித் சர்மாவை ரசிகர்கள்தான் வெறுத்தார்கள். ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில், ரோஹித் சர்மா என்றாலே வாயைப் பிளப்பார்கள். ஸ்டைலான ஸ்டிரோக்குகள், தொழில்நுட்பரீதியில் சரியாக ஆடுவது, எவ்வளவு மெதுவாக ஆடினாலும் பிறகு ஸ்டிரைக் ரேட்டைச் சரிசெய்துகொள்வது போன்ற பலங்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ரோஹித்தின் வெற்றியில் அதிகம் சந்தோஷப்படுகிறார் கோலி. ‘இந்திய அணியில் உள்ள இளைஞர்களிலேயே மிகவும் திறமையானவர் ரோஹித் சர்மாதான். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதால் சரியாகத் தன் திறமையை வெளிப்படுத்தமுடியாமல் இருந்தார். இப்போது தொடர்ந்து ஓபனராக ஆடுவதால், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்’ என்கிறார். 

தம் சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிப்பார் என்று சச்சின் சொன்னபோது பலருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. ஆனால் இன்று மூன்றாவது இந்தியராக ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்து, சச்சினின் ஒருநாள் ஸ்கோரையும் தாண்டிச் சென்றிருக்கிறார்.

Thursday, November 7, 2013

ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை


 

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தன் ஐபோன் 5சி விலை ரூ. 41,900 என உறுதிப்படுத்தியுள்ளது. இது 16ஜிபி வகைக்கான விலையாகும். 32 ஜிபி வகை ரூ.53,500 என விலையிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், இந்த போன் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படாத ஐபோன் 5சி விலை 549 டாலராகும். இன்றைய அந்நியச் செலவாணி மதிப்பில், இதன் இந்திய மதிப்பு ரூ.32,940 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், ரூ.36,000 எனக் குறிக்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. வரி சேர்த்தாலும் இது ரூ.40,000 ஐத் தாண்டாது.
ஊதா, பச்சை, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களில் 5சி வெளி வருகிறது. இதற்கான கவசம் இதே வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ. 2,300. ஐபோன் 5 எஸ் விலை, வரியுடன் சேர்த்து, ரூ.53,500 என 16ஜிபி மாடலுக்கு விலையிடப்பட்டுள்ளது. 32 ஜிபி மாடல் ரூ.62,500 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.71,500 என விலை குறிக்கப்பட்டுள்ளது.இதற்கான தோலில் செய்த கவசம் ரூ.3,200க்குக் கிடைக்கிறது. ஐபோன் 4எஸ், 8ஜிபி மாடல் தற்போது ரூ. 31,500 என விலையிடப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ஆர் காம் நிறுவனங்கள், தாங்கள் ஐபோன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.