Monday, April 21, 2014

Electricity without wires!!!

 
லேப்டாப், மோடம், ரௌட்டர், தொலைபேசி, தொலைக்காட்சி, கேபிள் டி.வி. என்று எந்த வீட்டு ஷோகேஸ் பின்னாடியும் கசமுசவென்று வயர்கள். இந்த வயர்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டன. இந்த வயர் இல்லாமல் நம்மால் ஒரு வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் மசசூஸெட்ஸ் மாகாணத்தில் "Witricity" என்ற நிறுவனம் கம்பியில்லா மின்சாரத்தை உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது சிறிய அளவில் அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் கண்டுள்ளது. 
 
கம்பியில்லா இணையம் இருக்கும் பொழுது கம்பியில்லா மின்சாரம் ஏன் கூடாது என்று அந்நிறுவனம் கேட்கிறது. ஹை! கம்பியில்லா மின்சாரம் மட்டும் வந்துவிட்டால், நம் தெருக்களில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் மின்கம்பிகளில் இனி துணி காயப்போடலாம்.  இந்தக் கம்பியில்லா மின்சாரம் எப்படி இயங்கும் என்பதைக் காணலாம். காற்றில் மின்சாரத்தைச் செலுத்த மாட்டார்கள். அதற்குப் பதில் காந்தப்புலத்தைக் காற்றில் உருவாக்குவார்கள். காந்தப்புலத்தில் மற்றொரு சுருள் வரும்பொழுது மின்சாரம் உற்பத்தியாகும். அந்தக் காந்தப்புலத்துக்குள் ஓர் உபகரணம் வந்தவுடன், ஆற்றல் கடத்தப்பட்டு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும். உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும். மனிதர்களோ, விலங்குகளோ இந்தக் காந்தப்புலத்தினுள் வந்தால் பாதிப்பு ஏற்படுமா? ‘இல்லை’ என்று அந்த நிறுவனம் அடித்துக் கூறுகிறது. இன்று லேப்டாப்பில், செல்பேசியில் உபயோகிக்கப்படும் வயர்லெஸ் - கம்பியில்லா இணையம் - போலத்தான் இதுவும். பாதிப்பு கிடையாது. இந்நிறுவனம் மடிக்கணினி, மின்விளக்கு, தொலைக்காட்சி என அன்றாட சாதனங்களை இக்கம்பியில்லா மின்சாரம் மூலம் (சிறிய அளவில்) இயக்கிக் கொண்டுள்ளது. அதை மக்களுக்கும் செய்து காண்பித்து விளக்கியிருக்கிறது அந்நிறுவனம்.வரும்காலத்தில் நமது வீடுகளில், நம் பாக்கெட்டுகளில் இருக்கும் செல்பேசியில் சார்ஜ் குறைந்தால், அதுவே கம்பியில்லா மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும். அதேபோல் மின்சாரக் கார்களும் சந்தையில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்கள் அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் இரவு காரை நிறுத்தி விட்டு தூங்கப் போனால் மறுநாளுக்குள் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும். பெட்ரோல் பங்குக்கு ஓடத் தேவையில்லை. தவிர, இன்று புழக்கத்தில் இருக்கும் மின்சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் என எல்லாவற்றையும் வேறு மாதிரி அதாவது மிக எளிதாகத் தயாரித்தாலே போதும்.
 
எனினும் இந்த வைட்ரிசிட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல சவால்களும் உள்ளன. குறிப்பாக, கம்பியில்லை என்றால் எவ்வளவு தூரம்? நம் வீடுகளில் கூடத்தில் பரவியிருக்கும் காந்தப்புலத்தைக் கொண்டு படுக்கை அறையிலிருந்து கொண்டு மின்சாரத்தைப் பெறமுடியுமா? அதற்கான விடை இன்னும் தெரியவில்லை. இது தற்பொழுது ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இதன் மீது பல விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

கம்பியில்லா மின்சாரம் வெற்றி பெற்றால், உலகையே புரட்டிப் போடும் என்பதில் ஐயமில்லை.


ஆர்வமுள்ளவர்கள் www.witricity.com என்ற இணையதளத்துக்குச் சென்று விவரங்களைப் படிக்கலாம்.

Ice Age For Birds

 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீர்காகம், மரகதப்புறா, சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்களைத் தற்போது பார்ப்பதே அரிதாகி விட்டன. தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்காக காடு, மரங்கள் அழிக்கப்படுதல், ரசாயனக் கதிர்வீச்சுகள், பருவமழை பொய்த்து வருவது, பருவநிலை மாற்றம் போன்றவையே பறவை இனங்கள் அழிவதற்குக் காரணமாகின்றன என்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு, வாய்க்கால், குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அளவுக்கதிகமாக இருக்கிறது. இவை மழைக்காலங்களில் நீரால் நிரம்பித் ததும்பும் நேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ருஷியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் உணவு தேடியும் இனப்பெருக்கத்துக்காவும் இயற்கைவளம் சார்ந்த இங்கு இடம் பெயருகின்றன. அதுபோன்று நமது நாட்டு பறவைகள் அயல்நாடுகளுக்குச் செல்வதும் தொடர்கிறது.ஆனால் முன்புபோல இப்போது பறவைகளின் வருகை இல்லை. போதிய மழையின்மை, நீர்நிலைகள் தூர்ந்துபோனது, காலநிலை மாற்றம் போன்றவை பறவைகளின் வருகைக்குத் தடைக்கல்லாக இருந்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்கள் அதிகளவில் உள்ளன. பருவமழையை மட்டுமல்லாது இக்குளங்கள் எல்லாக் காலங்களிலும் தாமிரபரணி ஆற்றின் மூலமாக ஆண்டுதோறும் நல்ல நீர்வரத்தைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பறவை இனங்களின் வரத்து வெகுவாகக் குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம், முத்துநகர் இயற்கைச் சங்கத்தினர் இணைந்து நீர்வாழ்ப் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர்ப் பொதுமக்கள் என 61 பேர் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு நடத்தினர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 63 குளங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் முடிவில் 60 வகையான 58 ஆயிரம் பறவைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டை போன்று அதே எண்ணிக்கையிலான பறவைகளே தற்போதும் வாழ்வது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே எண்ணிக்கையில்தான் நீர்வாழ் பறவைகள் இருப்பது கணக்கெடுப்பின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி இனங்களைப் பிடித்துத் தின்று விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கும் பறவை இனங்கள் குறைந்து வருவது நல்லதல்ல. எனவே பறவை இனங்களைப் பாதுகாத்திடுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்ற குரல் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

அதிசய கடல்


சாக்கடல் என்ற பெயரில் ஒரு கடல் இருக்கிறது. ஆனால் அது சாவை ஏற்படுத்தாத கடல். சாக்கடலில் ஒருவர் இறங்கினால் அவர் மூழ்கி இறந்து போக மாட்டார். சாக்கடலில் ஒருவர் கால்களை நீட்டிக்கொண்டு, ஜாலியாக நீரில் மிதந்தபடி, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கலாம். மனிதன் மிதக்கக் கூடிய கடல் அது ஒன்றுதான் என்று சொல்லலாம். சாக்கடலில் மனிதன் மூழ்கமாட்டான் என்பதற்கு சாக்கடல் தண்ணீரின் தன்மையே காரணம்.

சாக்கடல் மேற்காசியாவில் அமைந்துள்ளது. இந்தக் கடலுக்கு கிழக்கே ஜோர்டான் நாடு உள்ளது. மேற்கே இஸ்ரேலும் பாலஸ்தீனப் பிராந்தியமும் அமைந்துள்ளன. கடலின் நீளம் சுமார் 50 கிலோ மீட்டர். அகலம் அதிகபட்சம் 15 கிலோ மீட்டர். ஆழம் சுமார் 300 மீட்டர்.

பெயர்தான் கடலே தவிர மற்றபடி இது நான்கு புறங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய ஏரி.

சாக்கடலின் தண்ணீர் சொல்ல முடியாத அளவுக்குக் கடுமையான அளவுக்கு உப்பு கரிக்கும். கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் உப்பு அளவு அதிகம். ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால் ஒரு லிட்டர் சாக்கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும்.உப்பு என்றவுடன் எல்லோருக்கும் சமையல் உப்பு தான் ஞாபகத்துக்கு வரும். சமையல் உப்புக்கு சோடியம் குளோரைடு என்ற வேதியியல் பெயரும் உண்டு.கடல்களில் உள்ள நீரில் சோடியம் குளோரைடு மட்டுமன்றி சிறிதளவுக்கு இதர உப்புகளும் உண்டு. மொத்த உப்புகளில் சோடியம் குளோரைடு 97 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. ஆனால் சாக்கடல் நீரில் சோடியம் குளோரைடு அளவு சுமார் 30 சதவிகிதமே. பொட்டாஷியம், புரோமைன், கால்சியம் ஆகியவை அதிகம் உள்ளன.சாக்கடல் நீர் கடுமையான அளவுக்கு உப்பு அடங்கியது என்பதால் இந்தக் கடலில் மீன், ஆமை, நண்டு என எந்த வகையான உயிரினமும் கிடையாது. சிறு உயிரினங்களும் கிடையாது. கடல் வாழ் தாவரங்களும் இல்லை. ஆகவேதான் செத்த கடல் என்ற பொருளில் சாக்கடல் என்று பெயர் ஏற்பட்டுள்ளது.சாக்கடலில் உப்பு அளவு அதிகம் என்பதால் சாக்கடல் நீர் அதிக அடர்த்தி கொண்டதாக உள்ளது. மனிதன் சாக்கடலில் மூழ்காமல் மிதப்பதற்கு இதுவே காரணம்.சாக்கடலின் உப்பு அளவு அதிகரித்ததற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது சாக்கடலில் வந்து சேருகிற நீரின் அளவு எப்போதுமே குறைவு. ஆனால் இந்தக் கடலிலிருந்து ஆவியாகி மேலே செல்கிற நீரின் அளவு அதிகம். பன்னெடுங்காலமாக இந்த நிலை இருந்து வந்துள்ளதால்தான் சாக்கடலின் நீர் கடுமையான அளவுக்கு உப்பு கரிப்பதாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

உயிரற்ற சாக்கடலை யார் சீந்தப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாக்கடலுக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குள்ள சில குறிப்பிட்ட நோய்கள் அல்லது கோளாறுகளுக்கு நிவாரணம் பெற சாக்கடல் பகுதிக்கு வருகின்றனர். சாக்கடல் நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது என்பது அனுபவ ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடலில் உள்ள சேற்றை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொள்பவர்கள் பலர் உண்டு. சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்களை இந்தச் சேறு குணப்படுத்தி விடும் என்று கருதப்படுகிறது. தசை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் மூட்டு வலிக்காகவும் பலர் இங்கு வருகின்றனர்.சாக்கடலில் கிடைக்கும் உப்பு, சேறு ஆகியவற்றைக் கொண்டு பல் வகையான மருந்துகளும் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன அவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சுவாசக்கோளாறு உள்ளவர்களும் சாக்கடல் நோக்கி வருகின்றனர். சாக்கடல் வட்டாரத்தில் உள்ள காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம் என்பது இது ஒரு காரணம்.சாக்கடலுக்கு அடியிலிருந்து அவ்வப்போது தார் போன்ற கறுப்பான பொருள் வந்து மேலே மிதக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் பிரமிடுகளில் வைக்கப்பட்ட மன்னர்களின் சடலங்கள் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடல் பிராந்தியம் உலகிலேயே மிகத் தாழ்வான பகுதி. உலகின் நிலப்பகுதியில் அநேகமாக எல்லா இடங்களுமே கடல் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். கடலோரமாக உள்ள இடங்கள் கூட கடல் மட்டத்தை விட சில மீட்டர் உயரமாக இருக்கும். ஆனால் சாக்கடல் பகுதியானது கடல் மட்டத்தை விட 427 மீட்டர் தாழ்வாக உள்ளது. ஆகவே இங்கு காற்று அடர்த்தி அதிகம். அந்த அளவில் இங்கு காற்றில் ஆக்சிஜன் அளவும் அதிகம்.உடல் குணம் பெறவும் தங்களுக்கு உள்ள சில வகைக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெறவும் ஏராளமானவர்கள் சாக்கடல் நோக்கி வருவதால் சாக்கடலைச் சுற்றிலும் பல தங்கும் விடுதிகள் உள்ளன.சாக்கடல் நீரிலிருந்து பொட்டாஷ் உரம் தயாரிக்கும் ஆலைகளும் இங்கு உள்ளன.

ஆனால் சாக்கடலின் பரப்பளவு சுருங்கி வருகிறது. சாக்கடலைச் சுற்றிலும் இயற்கையான பல நீர் ஊற்றுகள் இருந்தாலும் இந்தக் கடலில் வந்து கலக்கிற ஒரே நதி ஜோர்டான் நதி. ஆனால் 1960களில் தொடங்கி ஜோர்டான் நதி மீது ஜோர்டான், இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகள் பல அணைகளைக் கட்டி நதி நீரில் பெரும் பகுதியைப் பாசனத்துக்குத் திருப்பிவிட்டதன் விளைவாக ஜோர்டான் நதி மூலம் சாக்கடலில் வந்து சேரும் நீரின் அளவு குறைந்துவிட்டது. தவிர, சாக்கடல் பகுதியில் மழை அளவும் குறைவு.ஆகவே சாக்கடலுக்குத் தொடர்ந்து நீர் கிடைக்கும்படிச் செய்ய அதை அருகே உள்ள செங்கடலுடன் இணைப்பதற்கு ஒரு திட்டம் கூறப்பட்டது. சில நூறு கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய்களையும் மற்றும் கால்வாய்களையும் அமைப்பதன் மூலம் செங்கடலிலிருந்து சாக்கடலுக்கு நீர் கொண்டு வர இயலும்.இப்படிச் செய்யும்போது வழியில் உள்ள பகுதிகளில் கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீர் பெற முடியும். செங்கடல் நீர் மிகவும் பள்ளமாக உள்ள சாக்கடல் பகுதியை நோக்கி இறங்கும்போது புனல் மின்சாரத் திட்டத்தையும் மேற்கொள்ளலாம். இப்படிப் பல சாதகங்கள் இருந்தாலும் இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சாக்கடல் வட்டாரம் பாதிக்கப்படும் பிரச்னையும் உள்ளது. சாக்கடல் நீண்ட வரலாற்றுத் தொடர்பு கொண்டது. மத நூல்கள் உட்பட பழங்கால ஏடுகளில் சாக்கடல் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கடல் ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மத்திய தரைக்கடலுடன் இணைந்து இருந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு 10 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தரைக்கடலுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு அது உள்நாட்டுக் கடலாக மாறியது.

Thursday, April 3, 2014

Remedy for chicken fox

The effect of seasonal change ... the sun's influence has been increasing from year to year. Exclusive Vail, summer is another major problem of the 'virus'. Kuraintale different age levels in the body's immune system, the virus alakinrom impact. Because of this, the Tamil Nadu and Puducherry in the common 'measles' disease has been severely impacted. Prevent measles, things to do and what's coming or what?
The immune system is essential ... 
 
The man's body will be இருந்துகொண்டுதான் any virus infection. When setting up an enabling environment for the virus, its properties will begin to emerge. Lessens the impact of the virus on the immune system of the body increases. Boost the immune system, there are several drugs in Siddha medicine. Veppankolunt with 5 grams, 5 grams Virali uruntaikalakki with yellow ground, children need to eat. Once a week is optimal to give. This adds to the immune system.

Ammaiyai cleaned out ...
Measles, smallpox, done, measles, mumps, as puttalammai have variety. Chickenpox, which eliminates most of the drugs come ammaikal. Zoster put the victim in a clean place, to isolate. Someone has to take care of him at home. Take care must be clean. The disease is airborne, the virus is likely to spread infection to others in the house.

Reduce sick ...  
Fever, able-bodied, eye irritation and problems that arise in a row, which is worsening day by day. Different parts of the body in small blisters occur. What's the use of pills, except for a few hours கட்டுப்படுத்தப்படுமே fever, recovery. Tiritotam, musk, vacantakucumakaram sick immediately reduce the use of such medicines. Brahmananda Bhairava little honey and powdered pill antidepressants reduce fever.

Control the virus ...
And atutota basil leaf juice, mixed with honey consumption, which will reduce the vigor of the virus. Likewise, karunkuruvai rice, barley flour porridge, rice porridge twice the distillate may consume them as food. Pearl parpat tenvittu kulaittu the impact of antidepressants can control the virus. Household palantolai (Leather) down to ashes and eaten with honey is very good.

Throat and eyes ...
To draw up a vaccination with some irritation in the throat, eyes and let the flower market. To avoid this problem by dissolving tablet Karpurvalli eats leaves and bezoar throat problem will be solved immediately. If left in stock panankuruttu eyes, to avoid falling off the flower. Nerinc flower, drumstick flower, nantiyavattai, take 5 grams of cumin, the juice is left in the eyes of the flower ceremony.



 Don'ts:   
 
Shatter the blisters. Do not go out of the house. Avoid corivatai. Advocating the use of drugs the doctor was wrong.

Things to do: 
 
To eat cold food. Neem was mixed into the ground, throwing it on the linen cloth to bed. Daily room yellow spray to keep clean. Tutti leaves along with camphor, Onion kulaittu away, Neem is applied on the blisters.

Brew brewing method: 

Some people recover measles after weeks of attack back. This makes good use of the brew.

Nutmeg, tippili, cloves, cumin and 5 grams per 400 ml to 100 ml of water until it is put to kotikkavaikka. After which, lemon juice, garlic juice is boiled, mixed with honey in the morning - evening twice if drinking is a complete healing of zoster.

Doctor Chandrasekaran

Beetroot

 
'' Eat Beetroot dear ... respecting the body and blood as saying uttuvom children. Beetroot iron, the body is supported by the formation of new blood cells. At the time of the Romans, fever, constipation, ulcers, skin problems and correct, pitruttai used. Lowering blood pressure, reducing inflammation has various medicinal benefits of beetroot.
 
'Green vegetables, greens, fruits, dates, such as eating large amounts of FIG, if you look to increase the amount of blood, four days per week cappittale pitruttai enough. Get good results. Vitamins A, B 1, B 2, B 6, niacin and iron, sodium, potassium, iodine, which include micronutrients such as copper. Cooking and eating are very effective at eating raw. 
 
 

Soaked in lemon sauce to be eaten raw, cut pitruttai, the red blood cells produced.

Ate beetroot juice to mix with the vellariccaru, cirunirakankalum refining bile.

Lliral disorders, vata, pitta and beetroot are making frequent vomiting of bile, the best tonic. Like cooking and eating lettuce and spinach, beetroot, ulcers, healing of diseases like jaundice.  

Pitruttai grind juice, mixed with honey to be eaten, ulcer healing.

For several months, constipation, problems such sufferers through the night before going to bed, drink half a glass of beetroot juice mixed with water.

Adding beetroot juice digestion removes indigestion.

Beetroot juice and mix with alum powder in the body burning, itching where applied, and immediately feel better.

Doctor Sridhar
 

Sarojini Naidu

ஹைதராபாத்தில், நிஜாம் கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அந்தக் கல்லூரியை உருவாக்கி, முதல் முதல்வராக இருந்த கல்வியாளர், அகோர்நாத் சட்டோபாத்யாயா. அவரைவிட, அவரது மகளைப் பற்றிதான் ஊரில் பேச்சு.

அந்தச் சிறுமியின் பெயர், சரோஜினி. உருது, தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழி என ஆறு மொழிகளில் இலக்கியங்களைச் சரளமாக எழுதியும் பொது மேடைகளில் பேசியும் அவள் வியக்கவைத்தபோது... அவளுக்கு வயது ஆறுதான்!

சரோஜினியின் அம்மா, ஒரு டைரி வைத்திருந்தார். அவர், வங்காள மொழியில் பாடல்கள் புனைந்து பாடுவதில் வல்லவர். ஒரு நவராத்திரி சமயம், தனது டைரியைத் திறந்தபோது வியப்பு. அதில், ஏழு வயது சரோஜினியின் கையெழுத்தில் இரண்டு புதிய பாடல்கள் இருந்தன.

சரோஜினிதான் வீட்டில் மூத்தவள். தம்பிகளான பிரேந்திர நாத் மற்றும் ஹரீந்திரநாத் உடன் தினமும் விளையாடுவதே, கவிதை புனைவதும் கவிதை நாடகம் நடத்துவதும்தான். பள்ளியில், படிப்பில் சரோஜினிக்கே முதல் இடம். நடனம், விளையாட்டு, நாடக நடிப்பு எனப் பல்வேறு திறன்கள் இயல்பாகவே அவளுக்கு இருந்தன. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி முழுவதும் சரோஜினியின் பாடல்களே ஒலித்தபோது, அவளது வயது 11.


11-ம் வகுப்பு மெட்ரிக் (அந்தக் காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் நடத்தியது) தேர்வை சரோஜினி எதிர்கொண்டபோது, 12 வயது. சரோஜினியிடம் இருந்த  சிறப்பான குணம், எதையும் மனப்பாடம் செய்யாமல்  புரிந்துகொண்டு படிப்பது. புரியும் வரை விடாமல் ஆசிரியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களைக் கேட்பது. அந்த ஆண்டு மெட்ரிக் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, இந்தியா முழுதும் பிரபலமானாள் சரோஜினி.

சரோஜினி படிப்பில் கொடிகட்டிப் பறப்பதைக் கண்டு, தன் மகள் ஒரு கணித மேதையாகவோ, விஞ்ஞானியாகவோ வர வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர்.

சரோஜினியின் மனம், வானம்பாடியாகக் கவிதைகள் புனைவதிலேயே பறந்தது. தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழியில் சரளமாகக் கவிதைகள் புனையத் தொடங்கினாள். தன் மகள் எப்படிப் படிக்கிறாள் என்பதைக் காண, அவளது அல்ஜீப்ரா நோட்டைப் பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி. 'மாஹர் முன்னீர்’ எனும் தலைப்பில் அந்த நோட்டின் 60 பக்கங்களுக்கு பெர்சிய மொழியில் கவிதை நாடகம் வடித்திருந்தாள் 13 வயது சரோஜினி. அதில் நாட்டுப்பற்று வரிக்கு வரி மிளிர்ந்தது.

சரோஜினியின் பெற்றோர், மற்றவர்களைப்போல இல்லை. மகள் விரும்பும் துறையில் அவள் பிரகாசிக்கட்டும் என முழுமையாக ஏற்றார்கள். விரைவில் அந்த பெர்சியக் கவிதை நாடகம், ஹைதராபாத் நவாபின் பார்வைக்குத் தந்தையால் அனுப்பப்பட்டது. நான்கே நாட்களில் நவாபினால் சரோஜினி அழைக்கப்பட்டாள்.

''நீதான் எழுதினாயா?'' என்று அவர் சந்தேகத்தோடு கேட்டார்.

சரோஜினி, தன்னிடம் இருந்த ஆங்கிலக் கவிதையை எடுத்து நீட்டினாள். 1,300 வரிகள் கொண்ட 'தி லேடி ஆஃப் தி லேக்’ (ஜிலீமீ லிணீபீஹ் ஷீயீ tலீமீ லிணீளீமீ) என்ற கவிதையைப் படித்த நவாப், தன்னுடைய செலவில் இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார்.

 பின் நாட்களில் 'இந்தியாவின் நைட்டிங்கேல்’ ஆகவும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், கவிக்குயிலாகவும் திகழ்ந்தார்.

ஆயிஜா இரா. நடராசன் 

புது நிதியாண்டு

ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. புது நிதியாண்டில் நுழையப் போகிறோம். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறுகள் என்னென்ன? இந்த ஆண்டு நாம் செய்யவேண்டியது என்னென்ன என்று திட்டமிடும் காலம் இது.

கடந்த வருடம் முழுக்க, டாக்ஸை மிச்சப்படுத்தவேண்டுமே என்று அடித்துப்பிடித்து முதலீடு/இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் ரிலாக்ஸாகும் நேரம் இது. இந்தப் புது வருடத்திலாவது முதலில் இருந்தே நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; அதிகப்படியான லாபத்தை அள்ளவேண்டும்; கடைசி நேரப் போராட்டமே வேண்டாம் என்று யோசிக்கிறீர்களா? குட், நல்ல மாற்றத்துக்கான அறிகுறி இது.

புது வருடம் ஆரம்பிக்கும்போது எல்லா கம்பெனிகளும் ஒரு திட்டத்தைப்போடும். அடுத்த ஆண்டு அடையவேண்டிய இலக்கு என்ன, இதற்குச் செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன, எவ்வளவு செலவாகும் என்று ஊழியர்களிடம் கேட்டு ஒரு திட்டம்போடும். நம் சொந்த வாழ்க்கைக்கும் ஏறக்குறைய இப்படித் திட்டமிடுவதுதான் நல்லது.

பணத்தைக் கையாளுவதில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? திட்டமிடாமல், யோசிக் காமல் சட்டென்று செலவு செய்வது தான். அப்படியே பட்ஜெட் என்ற ஒரு கணக்குபோட்டு வைத்திருந்தாலும்கூட, பட்ஜெட்டில் கணக்கிடப்படாத‌ ஒன்றுக்காக, 'இது நம் பட்ஜெட்டில் இல்லையே’ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் செலவு செய்துவிடுவது.

யோசித்துப்பாருங்கள்! வீடு கட்டவேண்டும் என்கிற நீண்டநாள் கனவு உங்களுக்குக் கைகூடி வருகிறது. உங்கள் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கொத்தனாரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, எப்படி கட்டுவீர்கள் என்று ஒரு பிளான் போட்டுக் காட்ட முடியுமா எனக் கேட்கிறீர்கள். 'நீங்க சொன்னதெல்லாம் என் மனசுல இருக்கு. கவலையேபடாதீங்க. கச்சிதமா கட்டிக்குடுத்துடுறேன்'' எனக் கொத்தனார் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவரிடம் வீடு கட்டும் வேலையைத் தருவீர்களா? நிச்சயம் தரமாட்டீர்கள். அவ்வளவு ஏன், ஒரு கைதேர்ந்த இன்ஜினீயரை வைத்து பிளான் போட்டு, வீடு கட்டும் போதே சில இடங்களில் இடிக்கிறதே! இப்படியிருக்க, வீட்டுக் கணக்கை மட்டும் வெறும் மனக்கணக்காக வைத்துச் செலவு செய்தால், அது சரிவருமா?

நம் வீட்டு நிதி நிர்வாகம்கூட நம் வீடு கட்டுகிறமாதிரிதான். சரியாகத் திட்டம்போட்டுப் படிப்படியாகக் கட்டினால்தான் ஒவ்வொரு கட்டமும் சிறப்பாக அமையும். ஆனால், நடப்பது என்ன? 'எல்லாம் என் மைண்டுல இருக்குது. எனக்குத் தெரியாததா என்னென்ன செலவு இருக்குன்னு, இதை எழுதிவேறப் பார்க்கணுமா? டைம் வேஸ்ட்’ என்று ஒதுக்கிவிடுகிறோம்.

திட்டம்போட்டு செலவு செய்யாமல், ஒவ்வொருநாளும் வரும் செலவுகளை அப்போதைக்கப்போது சமாளித்துக்கொண்டே போனால், ரிட்டையர்டாகி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, சரியாக பிளான் போடாமல் கட்டப்பட்ட வீடுபோல, அரைகுறையாக, பணம் கிடைக்கும்போதெல்லாம் கட்டப்பட்ட வீடுபோல நம் வாழ்க்கை அலங்கோலமாக இருக்கும்.

ஆனால், உங்கள் குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் பிளான் செய்துகொள்வதன்மூலம் உங்கள் வாழ்க்கையை மிக அழகானதாக்கிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இதோ உங்கள் புது நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் டிப்ஸ்:


பட்ஜெட் போடுவது கஷ்டப்பட அல்ல!  

பட்ஜெட் போடுவது ஈஸி இல்லை. அது குழப்பும் விஷயம். நேரம் பிடிக்கும். மூளையைக் கசக்கவேண்டும். அதைச் செய்வது வேஸ்ட். செலவு அதுபாட்டுக்கு வந்துகொண்டுதான் இருக்கும். சமாளிக்கவேண்டியதுதான்’ என்றே பலரும் நினைக்கிறார்கள்.

முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டியது, பட்ஜெட் என்பது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, கஷ்டப்படுத்துவதற்கோ அல்ல! உங்களுக்குச் சுதந்திரம் தருவதற்குதான்! பட்ஜெட் என்பது உங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்க அல்ல, இன்னும் சிம்பிளாக்கத்தான்! வரவு, செலவு சட்டென்று புரிந்துவிட்டால் பயப்படாமல் ஃப்ரீயாகச் செயல்படலாம். தைரியமாக ஒவ்வொரு அடியாகவைக்கலாம் உங்கள் இலக்குகளை நோக்கி!

செலவு பற்றித் தெளிவு வேண்டும்! 

இதற்கு குறைந்தது ஒருமாதமேனும் செலவுக் கணக்கு எழுதிப்பார்த்தால்தான் செலவுகள் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் படிக்க முடியும். உதாரணத்துக்கு, கணவர் அரிசி, பருப்பு வாங்கி வருகிறார் எனில் ஒருமாதத்துக்கு எத்தனை கிலோ அரிசி, பருப்பு செலவாகிறது என்று மனைவிக்குச் சொல்லமுடியாமல் போகலாம். காஸ் சிலிண்டர் எத்தனை நாளைக்கு வருகிறது என்று மனைவிக்குத் தெரியும். கணவருக்குக் குத்துமதிப்பாகத் தெரியலாம். அதனால் எந்தச் செலவையும் எழுதிப்பார்த்தால்தான் நமக்கு பல உண்மைகள் வெட்டவெளிச்சமாகும். கட்டாயம் சில மாதங்களுக்கு எழுதிப்பார்த்துவிட்டு பட்ஜெட் போட்டால், அட்டகாசமாக பட்ஜெட் தயாரித்துவிடலாம்.

இலக்குகள் பற்றித் தெரிய வேண்டும்! 

செலவுகள் பற்றித் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நாம் அடையவேண்டிய இலக்குகளையும் தெரிந்துவைத்திருப்பது. வீடு கட்டுவது/வாங்குவது, குழந்தை களின் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கட்டணம், திருமணம் என்று நீண்டகால இலக்குகள், துணிமணி, பண்டிகைச் செலவு போன்ற குறைந்த கால இலக்குகள் அவற்றுக்கான உத்தேச செலவுகள் ஆகியவற்றை எழுதிவையுங்கள்.



ஒருவர் போடுவது பட்ஜெட் அல்ல! 

கணவர் மட்டும் போடும் பட்ஜெட் அல்லது மனைவி மட்டும் போடும் திட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை. இருவரும் இணைந்து கலந்துபேசி போடும் திட்டமே வெற்றி பெறும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் சேர்த்துகொண்டு பட்ஜெட் போடுங்கள். தேவை, மாத கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹாயாக ஒரு மணி நேரம்தான். முதல்முறைதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். போகப்போக வெறும் அரை மணியிலேயே அமர்க்களமாக பட்ஜெட் போட்டுவிடலாம்.

என்னதான் சொல்லுங்கள், பட்ஜெட் போடுவது கஷ்டமான வேலைதான் என்று நினைக்கிறீர்களா? அந்த வேலையை ஈஸியாகச் செய்துமுடிக்க மூன்று வழிகளைச் சொல்கிறேன், ஃபாலோ செய்துபாருங்கள்!

1. பட்ஜெட் போடுவதே 'முதல் வேலை’! 

பட்ஜெட் போட்டுப்பார்த்து அதன்படி செலவு செய்வேன் என்று முதலில் முடிவெடுங்கள்! வரவு என்ன, செலவு என்ன என்று ஒரு கணக்கு எழுத்தில் இருந்தால், பல விஷயங்கள் சட்டென்று தெரியவரும். இதற்காக சில மணி நேரம் செலவிடுவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. 'நம் அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் பட்ஜெட் போட்டார்களா என்ன? அவங்களெல்லாம் கெட்டா போயிட்டாங்க? நல்லா வாழலையா?' என்று கேட்கிறீர்களா? அந்தக் காலத்தில் பணவீக்கம் இவ்வளவு இல்லை. விவசாயம் தழைத்த காலம் அது. நெல்மூட்டைகள் அடுக்கப்பட்ட வீடுகள்தான் அந்தக் காலத்தில் அதிகம்.

ஆனால், இந்தக் காலத்தில்? ரூ.500 எடுத்துக்கொண்டு கடைக்குப்போனால் பை நிறைய வாங்க முடியாது; கைநிறையத்தான் வாங்க முடியும். காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பட்ஜெட் போட்டு வாழாவிட்டால் ரேஸில் பின்தங்கிவிடுவோம். அதுகூடப் பரவாயில்லை. எல்லாரும் நன்றாக வாழ்வதைப் பார்த்து மனதுக்குள் ஏங்குவோம். ஆகவே, பட்ஜெட் போட யோசிக்காதீர்கள். ஆக்ஷனில் இறங்கி, அதை முதல்வேலையாக்கிக் கொள்ளுங்கள்!

2. செலவு கணக்கை உடனடியாக எழுதுங்கள்! 

நோட்புத்தகமோ, கம்ப்யூட்டரோ செல்போனோ ஏதாவது ஒன்றில் உங்கள் செலவுகளை எழுதிவைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். கைக்காசு எங்கே போகிறது என்று தெளிவாகத் தெரிந்தால்தான் பட்ஜெட் போடுவது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!

3. ஆட்டோ டெபிட் அவசியம்! 

நீங்கள் ரெகுலராகக் கட்டவேண்டிய தொகைகளான வீட்டுக் கடன், வண்டிக் கடன் கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஊருக்கு அனுப்பவேண்டிய பணம், போன் பில் ஆகியவற்றைக்கூட ஆட்டோமேட்டிக்காகக் கட்டுமாறு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தந்துவிடலாம். இதனால் உரிய நேரத்தில் நீங்கள் செலுத்தவேண்டிய பணம்போய்ச் சேர்ந்துவிடும். இதனால் மனஉளைச்சல் மிச்சம், லேட் பேமன்ட் பெனால்டி மிச்சம் எனப் பல நன்மை கிடைக்கும்!

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, பட்ஜெட் போட்டுப்பாருங்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் கணிசமான பணத்தை மிச்சம்பிடித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

தண்மதி திருவேங்கடம், இயக்குநர், யங்புல்ஸ் எஜுகேஷன், மும்பை. 

Amit mishra


கிரிக்கெட்டின் அற்புதமான காட்சிகளில் ஒன்று, லெக்ஸ்பின் பௌலிங்கைக் கண்டுகளிப்பது. கூக்லி, டாப்ஸ்பின், ஃப்ளிப்பர், ஸ்லைடர் என்று ஒரு லெக்ஸ்பின்னரால்தான் ஒவ்வொரு பந்திலும் அசத்த முடியும். சமீபகாலமாக, அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு அப்படியொரு சாகசத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல நாடுகள் கலந்துகொள்ளும் ஓர் உலகப்போட்டியில் சரியான முறையில் தன்னை நிரூபித்திருக்கிறார் மிஸ்ரா. இனி அவர் பெஞ்சில் அமர்ந்து துவண்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

2003ல், இந்திய அணிக்குள் நுழைந்த மிஸ்ரா, இதுவரை 23 ஒருநாள் ஆட்டங்களே ஆடியிருக்கிறார். டெஸ்ட்டிலும் இதே நிலைமைதான் (13 டெஸ்டுகள்). கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மிஸ்ராவால் ரஞ்சிப் போட்டியில் மட்டுமே ஆட முடிந்தது. கும்ப்ளே ஓய்வு பெற்று, ஹர்பஜன் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அஸ்வினும், ஜடேஜாவும் அமர்க்களமாக இந்திய அணியின் தூண்களாக மாறினார்கள். வயது வேறு 30ஐக் கடந்து விட்டது. ஆனால், மிஸ்ரா சலனப்படவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் தன்னை நிரூபிக்க ஆரம்பித்தார். ஐ.பி.எல்.-லை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஐ.பி.எல்.-லில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்து, மிஸ்ராவுக்கு ஏன் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை என்கிற கேள்வியை உருவாக்கினார். சென்ற வருடம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சென்றபோது, ஒருவழியாக நேரம், காலம், அதிர்ஷ்டக் காற்று எல்லாம் மிஸ்ரா பக்கம் திரும்பியது. இப்போது மிஸ்ரா இல்லாமல் 50 ஓவர், டி20 மேட்சுகளில் இந்தியாவால் களமிறங்க முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது.

பங்களாதேஷில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் பட்டங்கள் வாங்கியதால் மற்ற அணிகள் அஜ்மல், நரைனுக்குச் சமமாக மிஸ்ராவை மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. மிஸ்ராவின் இந்தத் தாக்கத்தால் சில மாற்றங்கள் உண்டாகப்போகின்றன. ஏற்கெனவே ஜடேஜாவிடம் டெஸ்ட் இடத்தை இழந்துவிட்ட அஸ்வின் இன்னும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். மிஸ்ராவின் எழுச்சியால் ஹர்பஜன் இனி மீண்டு வர முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கும்போது ஓஜாவின் வாய்ப்பையும் மிஸ்ரா தட்டிப்பறிக்கலாம். திறமையை நீண்டநாள் ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு மிஸ்ராவே சிறந்த சாட்சி.

Air Travel Tips


யார் முதலில் பயணச் சீட்டுகளை வாங்குகிறார்களோ? அவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கி, பல்வேறு அடுக்குகளில், குறைந்த கட்டணத்தில், விமான டிக்கெட்டுகளை வழங்குகிறார்கள். முதலில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணியர் தாமதமாக டிக்கெட் வாங்குபவர்களை விட குறைவாகவே கட்டணம் செலுத்துவார்கள். 

விமான நிலையத்தில் விமான நிறுவனத்தின் முகப்பை (counter) எப்படி அடைய வேண்டும் என்பது ஒருவருக்கு முன்பே தெரிந்திருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்று தம் வருகையை தெரிவிப்பது எளிதாக இருக்கும். ஆகவே, டிக்கெட்டை வாங்கும்பொழுது கூட, நீங்கள் நிறைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

வருகையைப் பதிவு செய்ய வேண்டிய நேரம். முனையம் - (Terminal) உள்நாட்டு முனையமா அல்லது பன்னாட்டு முனையமா? முனைய எண் Terminal number - இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பெரும்பாலான உலகப் புகழ் பெற்ற விமான நிலையங்களில் பல டெரிமினல்கள் உள்ளன. இரண்டு விமானங்களுக்கு இடையிலான இணைப்பிற்கான குறைந்தபட்ச நேரம், உங்களுடைய பேக்கேஜ்களை எங்கு பெற்றுக் கொள்வது குடிநுழைவு / குடியேற்றம், சுங்க நடவடிக்கைகளை எங்கு முடிக்க வேண்டும், போன்ற விவரங்களை முன்கூட்டியே விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பின்வரும் ஆவணங்கள் உங்களிடத்தில் இருக்கின்றனவா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட் அல்லது கூடுதல் பாஸ்போர்ட்டுகள், விசா, தேவை என்றால் டிரான்ஸிட் விசா, பணச்சீட்டு, ஆதரவாளரிடமிருந்து (sponsor) வந்த அழைப்புக் கடிதம், விசாவின் நகல், உரிய அமைப்பிட மிருந்து பெற்ற ஒரு செல்லுபடியாகக் கூடிய மருத்தவச் சான்றிதழும் (தேவைப்பட்டால்) பயணக் காப்பீடும் மற்றும் தங்கும் ஹோட்டல் உறுதி செய்யப்பட்ட ரசீது, தரவாளருடைய தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை குடிநுழைவு பரிசோதனைக்காக தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சகப் பயணியின் பேக்கேஜையோ, பாக்கெட்டுகளையோ சிறிது நேரம்கூட பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கக் கூடாது. அப்படி ஒரு பேக்கேஜ் உங்களிடம் இருந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். தடை செய்யப்பட்ட சில பொருட்களை வைத்திருப்பது சில நாடுகளின் சட்டப்படி மரண தண்டனைக்கு கூட ஆளாக நேரிடும். மாட்டிக்கொள்ளாதீர்கள்!

உங்களுடைய ஒவ்வொரு பேக்கேஜ்களையும் உங்களுடைய செல்போனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றொரு யோசனையாகும். இதை அமெரிக்க போக்குவரத்துத் துறை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது.  

முதலில் விமான நிலைய பொறுப்பு அலுவலரிடம் உங்களுடைய பாஸ்போர்ட், விசா, போர்டிங் கார்டை காண்பிக்கவும். அவை சரிபார்க்கப்பட்டு அனைத்தும் சரியாக இருக்கிறது என்று அந்த அலுவலர் முடிவு செய்த பிறகு உங்களுடைய பாஸ்போர்டிலும் போர்டிங் பாஸிலும் ஒரு முத்திரையிட்டு ஒப்பம் அளித்து உங்கள் பயணத்திற்கு அனுமதி அளிப்பார். அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் பேக்கேஜ் எடுத்துச் செல்வது உங்களுக்கும் விமான நிறுவனத்திற்கும் உதவுவதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் விமானம் பாதுகாப்பாக பறக்கவும் அதிகமான பேக்கேஜிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் உங்களுடைய பணத்தையும் சேமிக்கவும் செய்யலாம்.ஒரு பயணி அவருடைய பயணத் தேதியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு வேறொரு தேதியில் விமான டிக்கெட் கேட்கும் பொழுது சாதாரணமாக, அதே வகுப்பில் பயணம் செய்வதற்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் ஒரு சிறிய கட்டணம் மட்டும் இருக்கும். இல்லையெனில் அந்த தேதியில் கிடைக்கும் உயர் வகுப்பில் பயணம் செய்வதற்கு உரிய கட்டண வேறுபாட்டை ஒருவர் செலுத்த வேண்டியிருக்கும்.எல்லா விமானங்களிலும் பாதுகாப்பு தகவல்கள் அடங்கிய அட்டை இருக்கும். தயவு செய்து அந்த அட்டையை கவனமுடன் படித்து நெருக்கடியான காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் புரிந்து கொள்ளுங்கள்.சீட் பெல்ட்டை இணைப்பதற்கு அதில் உள்ள மெட்டல் கிளிப்பை லாக்குகள் நுழைக்கவும். கிளிக் என்ற ஒரு சத்தத்துடன் அது பூட்டிக்கொள்ளும். விமானம் மேலெழும்பும் போது, நிலையற்று இருக்கும் போது, அல்லது தரையிறங்கும் போது சீட் பெல்ட்டை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டும். விமானம் மேலெழும்பி நிலையாக பறக்கும் நிலைக்கு வந்தவுடன், நீங்கள் உட்கார்ந்து இருக்கும் போது சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள். ஆனால் வசதிக்காக சற்று தளர்வாக்கிக் கொள்ளலாம்.

அனைத்து விமானங்களிலுமே புகைப்பதற்கு அனுமதி கிடையாது. இருந்தாலும், சில பயணிகள் சிகரெட்டை ஒளித்து வைத்துக் கொண்டு வந்து புகைப்பார்கள். ஆக்சிஜன் முகமூடி கீழிறக்கப்பட்டு ஆக்சிஜன் பாய்ந்து கொண்டிருக்கும் போது அனைத்து பயணிகளும் அவர்களிடம் சிகரெட் இருந்தால் அவை அணைக்கப்பட்டு விட்டனவா? என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.உங்களுடைய விமானப் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வைட்டமின் சி-ஐ சாப்பிடவும். உங்களுடைய வீட்டில் உள்ள கிருமிகளை விட விமானத்தின் உள்ளே இருக்கும். காற்றில் அதிக கிருமிகள் சுற்றிக் கொண்டிருக்கும். உங்களுடைய பயணத்தை உடல்நலமில்லாமல் துன்பகரமானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.அசிட்டைல்சாலிசிலிக் ஆசிட்(ASA) (ஆஸ்பிரின் என்ற பெயரும் இதற்கு உண்டு) மாத்திரையை நீண்ட தொலைவு விமானப் பயணம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னும், விமானப் பயண நாளன்றும் அதன்பிறகு மூன்று நாட்களுக்கும் எடுத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நகராமல் அமர்ந்து இருக்கும் பொழுது கால்களில், இரத்தம் கட்டிக் கொள்ளும். ஏ.எஸ்.ஏ. இரத்தத்தை இளகச் செய்து இரத்தம் கட்டிக் கொள்வதைக் குறைக்கும்.கால்களை குறுக்கே கட்டிக் கொண்டு உட்காருவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதில் நீங்கள் எடுத்துச் செல்லும் லக்கேஜ்களின் மேல் உங்கள் கால்களை வைத்து கொஞ்சம் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் சுவாச பாதைகள் மற்றும் காதுகளை ஒரு இரத்த சேர்க்கை நீக்கும் மருந்தின் (decongestant) மூலமாக விமானப் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். இது உங்கள் சைனஸ்கள் மற்றும் காதுகாளில் உள்ள மென் படலங்களைச் சுருங்கச் செய்யும்.பயணத்தின் போது உங்களுடைய காலணிகளை கழற்றுவதைத் தவிர்க்கவும். குறைந்த காற்றழுத்தம் காரணமாக உங்களுடைய பாதங்கள் வீங்கிப் போகலாம். நீங்கள் மறுபடியும் காலணியை போடுவதற்கு முயற்சி செய்யும் போது நீங்கள் அசௌகரியமாக உணரலாம்.

டாய்லட் சீட்டுகள், இருக்கையின் பின்புறங்கள், கை வைத்துக் கொள்ளும் தடுப்புகள், குறிப்பாக ட்ரே டேபிள்கள் ஆகியவற்றில் தொற்றிக் கொள்ளும் கிருமிகள் இருக்கும் என்பதால் இவைகளைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று பயண சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக உங்கள் பையில் கைகளை தூய்மையாக்கும் சானிடைஸர் வைத்துக் கொள்ளுங்கள்.நோய்வாய்ப்பட்டு நடமாட இயலாமல் இருக்கும் பயணிகள் பயணம் செய்யும் பொழுது. அவர்களுடைய பயணம் வசதியாக இருப்பதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முன்னரே செய்து அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த பயணிகள் உடல் ஊனமுற்றவர்கள் அல்லது நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய மருத்துவ நிலையில் இருப்பவர்கள் அல்லது விமானத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் உதவி தேவைப்படுபவர்கள் ஆகிய வகையினர்களாக பிரிக்கப்படுவார்கள். 

நடமாட இயலாத பயணிகள் கழிவறை மற்றும் இருக்கை வரிசையில் முதல் இருக்கையிலும் வசதியாக அமர வைக்கப்படுவர். கமான்டர் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு நடமாட இயலாத இந்தப் பயணிகளுக்கு விமானத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ குறிப்புகள் உள்பட்ட அனைத்து விவரங்களும் அளிக்கப்படும்.விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும் காலமும் பாஸ்போர்ட் செல்லு படியாகும் காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின் பொறுப்பாகும். ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும் அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம் மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா வழங்கப்படும். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சரிபார்த்துக் கொள்வது அனைத்து பயணிகளுடைய கடமையாகும்.பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், (அமெரிக்காவிற்கு சென்றடைய லண்டனில் இறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது போன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட் விசா பெற வேண்டுமா? என்று அறிந்து கொள்வது அவசியமாகும். டிரான்சிட் விசா பெற வேண்டுமானால் புறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும். ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய நாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப் பெற்றுக் கொள்ளும் வசதியை அளித்தாலும், (Visa on entry) இந்தியாவை விட்டு புறப்படும் முன் விசாவைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து விமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பயணச் சீட்டுகள் முகவர்கள் (travel agents) அல்லது விமான நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பதவி, பயணத் தேதி, புறப்படும் இடம், சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள்ளும் பொறுப்பு பயணிகளுடையதாகும்.

பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணையதள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த பயணச்சீட்டுகள் சாதாரணமாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும். இருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள், விமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட் வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ் அலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.  நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள பி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில் உள்ள பெயர், விமான எண், பயணத் தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு தொலைந்து விட்டால் நகல் பயணச்சீட்டை பெறுவதற்கு உதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை குறிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச் சீட்டின் நகலை பெற்றுக் கொள்ளலாம். பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள் செல்ல உரிமை கோர முடியாது.விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து போய்விட்டால் பயணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண முகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்து மாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை அவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட் விவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம். பிரிண்டில் தேவையில்லை என்பதாலும் தேவையில்லாமல் காகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது.விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நாட்டுக்கு நாடு வேறுபடும். தனிப்பட்ட விருப்பத்தில் உங்கள் பயணத்தைப் படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் சென்றடையப் போகும் வெளி நாட்டில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளை முன் கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.(Embarkation) என்பது நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்காக விமானத்தில் ஏறும் இடமாகும்.(Disembarkation) என்பது உங்கள் பயணம் முடிவடைந்து மற்றொரு நாட்டில் நீங்கள் விமானத்தை விட்டு வெளியே வரும் இடமாகும்.

உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத்தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து குடியேற்ற அனுமதி Emigration clearance தேவை.இந்திய பாஸ்போர்ட்டுகள் இந்திய குடிமக்களின் பன்னாட்டுப் பயணத்திற்காக வழங்கப்படுவை. நாடு முழுவதும் 37 இடங்களிலும், வெளிநாடுகளில் 162 இடங்களிலும் இந்திய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.நீங்கள் விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா? என்று உறுதி செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு துணை பாஸ்போர்ட் (Supplementary passport) வழங்கப்பட்டிருந்தால். அதற்கு முந்தைய அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.இந்திய பாஸ்போர்ட்டுகள் அடர் நீலம்/கருப்பு உறையுடன் இந்தியாவின் தேசிய சின்னத்தை முகப்பு உறையின் மையத்தில் கொண்டிருக்கும். சின்னத்திற்கு கீழே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் Republic of India என்று பொறிக்கப்பட்டிருக்கும். சாதாரண பாஸ்போர்ட்டுகள் 36 பக்கங்களையும் அடிக்கடி பயணம் செய்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் 60 பக்கங்களையும் கொண்டிருக்கும்.இந்திய பாஸ்போர்ட்டுகள் அதற்குரிய நபரின் அடையாளத்திற்கான தகவல்கள் பாஸ்போர்ட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க அட்டை முடியும் வரை இருக்கும். இந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களை மாறுதல்/திருத்தம் செய்ய இயலாத வகையில் இந்தப் பக்கங்கள் மென் தகடினால் உறையிடப் பட்டிருக்கும்.உங்களுக்கு பாஸ்போர்ட் இல்லையென்றால், நீங்கள் ஒரு பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்க விரும்பினால் www.passport.gov.in என்ற இணைய தளத்தில் நுழைந்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலும், மாவட்ட பாஸ்போர்ட் மையத்திலும்/விரைவு அஞ்சல் மையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய பிரமாணப் பத்திரங்கள் (affidavits) மற்றும் இணைப்புகள், பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பத்தின் நிலையை அறியவும், விரைவு பாஸ்போர்ட்டிக்கு (Tatkal Passport) விண்ணப்பிக்கவும் பாஸ்போர்ட்டுகள் அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் இருந்து 3லிருந்து 7 வேலை நாட்களுக்குள் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.பாஸ்போர்ட் தொலைந்து போனால் புகார் தெரிவிக்க மற்றும் ஒரு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான விவரமும் இணையதளத்தில் இருக்கும்.விசா என்பது ஒரு நபர் ஒரு நாட்டினுள் நுழைவதற்காக அனுமதி பெற்றிருப்பதை காட்டும் ஒரு அனுமதி ஆவணமாகும். பெரும்பாலும் இது விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும் ஒரு முத்திரையாகவே இருக்கிறது. விசாவில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒன்றாக இருக்க வேண்டும். அதைப் போலவே பாஸ்போர்ட்டின் எண், பிறந்த தேதி ஆகியவை விசாவுடன் ஒத்திருக்க வேண்டும்.ஒரு பயணியின் உடல் நிலையானது அல்லது மருத்துவ நிலையானது, மற்ற பயணிகளின், அவர்களது உடமைகளின், அல்லது விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ, ஸ்ட்ரெச்சர் அல்லது இன்குபேட்டரில் ஒரு பயணி பிரயாணம் செய்ய நேரிட்டாலோ, அவருக்கு உதவுவதற்காக ஒரு உதவியாளரை அழைத்து வர வேண்டும். இந்த உதவியாளர்கள் அவர்கள் விமானத்தில் ஏறவும் இறங்கவும், விமானம் பறந்து கொண்டிருக்கும் போதும் மற்றும் அவசரக்கால வெளியேற்றங்களின் போதும் உதவும் பொறுப்பு உண்டு. இந்த உதவியாளர்கள் இல்லை எனில் மேற்கண்ட நபர்களை விமானத்தில் அனுமதிக்க மறுக்கலாம்.பயண முடிவில், விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு உதவுவதற்காக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். அவர் பேக்கேஜ் சேகரிக்கும் கூடம் வரை அல்லது மற்றொரு விமானம் மாறி மற்றொரு இடத்திற்கும் மேற்கொண்டு பயணம் செய்வதாக இருந்தால் அந்த விமானம் வரை உடன் வந்து உதவுவார். சக்கர நாற்காலிகள் தேவைப்படும் பயணிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்களுடைய போர்டிங் கார்டுடன் ஒரு சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும்.தொற்றுநோய் மற்றும் பரவக்கூடியது என்று நம்பப்படுகிற எந்த நோய் இருந்தாலும் பிற பயணிகளின் வசதியையும் நலனையும் பாதிக்கும் உடல் நிலை அல்லது அசாதாரணமான நடவடிக்கைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு சில நோய்கள் மற்றும் இயக்கமின்மை போன்றவைற்றுக்கு மருத்துவத் துறையின் அனுமதி தேவை.தொடர்ந்து ஆக்சிஜன் தேவைப்படும் பயணிகள், நீண்ட தொலைவு செல்லும், இடையில் எங்கும் நிற்காத விமானங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பயண காலம் முழுமைக்கும் போதுமான ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. விமானங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களே இருக்கும்.

ஸ்ட்ரெச்சர் வசதிக்கான கோரிக்கை முன் கூட்டியே செய்யப்பட வேண்டும். இந்த வசதி, இடவசதியைப் பொருத்தே வழங்கப்படும். பிற விமான நிறுவனங்களுடன் பயண மாற்று வசதி இருக்கும் பொழுது, அந்த விமானத்துடன் முன்பே ஏற்பாடுகள் செய்து கொள்வது அவசியமாகும். இதில் சிறப்பு உணவு, மருந்துகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் பிற தேவைகள் ஆகியவற்றையும் உறுதி செய்து கொள்வது அவசியமாகும். எக்கானமி வகுப்பில் ஒரே ஒரு ஸ்ட்ரெச்சர் மட்டும்தான் அனுமதிக்கப்படும். முதல் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளுக்கு ஸ்ட்ரெச்சரை எடுத்துச் செல்லக் கூடாது.  உடல் நலமில்லாத நிரந்தர ஊனம் உள்ள பயணிகள் அதாவது எதிர்காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்ற நிலையில் உள்ள பயணிகள் இந்த மருத்துவத் தகவல் படிவத்தை ஒவ்வொரு முறையும் ஏர் இந்தியா விமானத்தைப் பயன்படுத்தி பயணம் செய்யும் போது நிரப்பத் தேவையில்லை. இத்தகையவர்கள் மும்பையிலுள்ள மருத்துவ சேவைகள் துறையிடம் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ அட்டை (Frequent Travellers' Medical Card)வழங்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவ அட்டை பெறுவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.பொருத்தமான உதவியாளர் இல்லாமல் மனநிலை சரியில்லாத பயணிகளை விமான பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. பயிற்சி பெற்ற உதவியாளர் இத்தகைய பயணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் சான்றிதழோடு ஊசி மூலம் செலுத்தக்கூடிய மயக்க மருந்துடன் வரவேண்டும். இந்த மருந்து பயணம் தொடங்குவதற்கு முன்னரோ அல்லது பயணத்தின் போதோ உதவியாளரால் பயணிக்கு அளிக்கப்படலாம்.பார்வையில்லாதவர்களுக்கு வழிகாட்டுவதற்காக பயிற்சி பெற்ற ஒரு நாய் பயணியுடன் வருவதற்கு அனுமதி உண்டு. ஆனால், மற்றொரு நாட்டில் நுழைவதற்கு அல்லது மற்றொரு நாட்டில் இறங்கி விமானம் மாறுவதற்காக அனுமதி தேவைப்படும் நாடுகளின் முறையான அனுமதியைப் பெற்றிருக்காவிடில் அவற்றை பயணியுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கப் படாது.

silver jubilee for net


வலைக்கு (www) வெள்ளி விழா!
இந்த மாதத்துடன் ‘இணைய வலை’ (www) வெள்ளி விழா கொண்டாடுகிறது, தெரியுமா? மார்ச் மாதம் 1989-ல்தான் முதன் முதலில் ‘வையவிரிவு வலை’ என்ற 'WWW' குழந்தை பிறந்தது. இதைக் கணினி உலகில் செல்லமாக ‘டப் டப் டப்’ என்று கூறுவர் (டபிள்யூவின் சுருக்கம் டப்). சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் உலக நடப்பை செய்தித்தாளில், தொலைக்காட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று உலகின் எந்த மூலையில் நடக்கும் செய்தியானாலும் அடுத்த விநாடியே நம் கண்முன் வந்து விடுகிறது. 

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னதை நிரூபித்துக் காட்டியது WWW என்றால் அது மிகையாகாது. நாடக மேடையில் நடக்கும் விஷயம் நேரடியாகக் காண்பவர் கண்களுக்கு விருந்தாவது போல், உலக அரங்கில் நடந்தேறும் விஷயங்கள், மக்களின் அனுபவங்கள் அனைத்தும் வலையின் உபயத்தால் நம் கண்முன்னே!இன்று உலக மக்கள் தொகையில் 40% பேர் இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 300 கோடி மக்கள். இணைய வர்த்தகத்தின் மதிப்பு பல லட்ச கோடிகளாகும். வளர்ந்த நாடுகளின் ஜி.டி.பி.யில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 21% இணையத்தின் பங்களிப்பாகும். இணைய வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை வைத்துப் பார்க்கையில் இன்றைய தேதியில் இணைய உலகின் ராஜா என்றால் அது அமெரிக்காதான். இணைய வருமானத்தில் 30% அமெரிக்காவின் தயவினாலேயே கிடைக்கிறது. 1989-ல் சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவர்தான் வலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். பிரவுசர் எனப்படும் இணைய உலாவி ஒன்றை இவரே 1990-ல் எழுதி முடித்தார். 1993இல் இவர் வேலை செய்த நிறுவனம் CERN தான், அதிகாரப்பூர்வமாக WWW என்ற தொழில்நுட்பத்தை உலகுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது. இணையத்தில் மீயுரை (http) கோப்புகளை அணுகுவதற்கான ஒரு கட்டமைப்பே இந்த WWW. CERN‡ நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது, ஆராய்ச்சியாளர்கள் படித்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு நெறிமுறையை உருவாக்கி தம் நிறுவனத்திடம் சொன்னார். அவருடைய கருத்தாக்கம் எல்லோருக்கும் பிடித்துப் போகவே, அவருடன் ஐந்தாறு பேர் சேர்ந்து வலையை உருவாக்கினர்.

"Info.cern.ch" தான் முதன் முதலில் உருவான இணையதளம். இத்தளத்தில் உள்ள "http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html" என்ற பக்கம்தான் முதல் வலைபக்கம். வலை என்றால் என்ன, அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும், அதை உருவாக்கிய குழு என்று பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு உள்ளன.  WWWவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும், எந்த மென்பொருளானாலும், எந்தக் கருவியானாலும் வேலை செய்யும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மகாகவி கூறியது போல், இதன் துணை கொண்டு யாருடைய உத்தரவும் இன்றி எந்தக் கருத்தை யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் சொல்ல முடியும். ஆம், நாம் அனைவரும் ‘இணைய உலகின் மன்னர்’.சர் டிம் பெர்னர்ஸ் - லீ 1955இல் லண்டனில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் இயற்பியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்து பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் தற்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இணையம் சம்பந்தமான ஆராய்ச்சியில் உதவி வருகிறார். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டவர். நல்ல பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.இத்தருணத்தில் www.webat25.org என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். www மற்றும் இணைய உலகு சந்திக்கும் சவால்கள், அதன் எதிர்காலம், மீதமுள்ள 400 கோடி மக்களை எவ்வாறு இணையத்துக்கு அழைத்து வருவது, வலையின் உபயோகங்கள் இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களை விவாதிக்க மேற்கண்ட வலைதளத்துக்கு விஜயம் செய்யவும்.

தி.சு.பா.

google now

 
''பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?'', ''சிங்கப்பூர் - சென்னை விமானம் ஆன் டைமுக்கு வருகிறதா?'' இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற்கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன 'கூகுள் நவ்’, 'சிபி’ என்கிற இரண்டு அப்ளிகேஷன்கள். 'வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்படுகிற இந்த இரண்டு அப்ளிகேஷன்கள் உங்கள் போனில் இருந்தால்போதும், உங்கள் போனுடன் பேசியே எல்லாத் தகவல்களையும் வாங்கிவிட முடியும்.
 
மழைக்காலத்தில் ஆபீஸுக்குக் குடை கொண்டுபோகவேண்டுமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், 'இன்றைக்கு எனக்குக் குடை தேவைப்படுமா?' என்று இந்த ஆப்ஸிடம் ஆங்கிலத்தில் கேட்டால்போதும். 'மேகமூட்டமாக இருப்பதால், மழை வர வாய்ப்பு அதிகம்' என்று சொல்லும்.  அவசியமில்லை எனில், ''தேவையில்லை'' என்று பதில் சொல்லிவிடும்.
 
'சிபி’யைப் போலத்தான் கூகுள் நவ் செயல்படுகிறது. உதாரணத்துக்கு, ''இந்தப் பகுதியில் எங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது?' என்று கேட்டால், உடனே கூகுள் மேப் திறந்து அருகில் இருக்கும் அத்தனை பெட்ரோல் பங்குகளையும் காட்டும். ஏதாவது ஒரு பெட்ரோல் பங்கை தேர்வு செய்தால், அந்த பெட்ரோல் பங்கை அடைய நேரம், வழிப்பாதை என அனைத்தையும் சில நொடிகளில் காட்டிவிடும். காரோட்டிச் செல்கிறவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயன்படும்.  

இந்த இரண்டு அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த நெட் அல்லது வைஃபை அவசியம். ஆப்பிளில் 'சிபி’ ஆப்ஸைவிட 'கூகுள் நவ்’ வேகத்தில் படுசுட்டி. ஆனால், உரையாட 'சிபி’ சுலபமாக இருக்கும். 'சிபி’ ஆப்ஸ் ஆப்பிளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஆனால், 'கூகுள் நவ்’ எல்லோருக்கும் பொதுவானது.