Tuesday, August 27, 2013

Be aware of plastics time to change...

விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்




சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.

இதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கின்றன.
பிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் - ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.

ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.
வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.
இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் ""ப்யோபால்'' என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.

பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.

இந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

Noise Pollution Caution Youngsters...

ஒலி மாசுவின் விஸ்வரூபம்



வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.

அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது, 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.

ஆனால், நமது கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும் வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புல அயர்ச்சி ஏற்படுகிறது. நம் நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.

கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ, இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.

Steve Jobs Miracle men ( விஞ்ஞானியல்ல, ஞானி! )

விஞ்ஞானியல்ல, ஞானி!


தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால்,அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும்அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும்அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால்மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை,சாதாரணமானஅறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும்ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால்மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றிஇவர் ஐ-பேட் அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.
இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750 மட்டுமே. ஆனால்இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும்ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்என்ன தெரியுமா? "மாத்தி யோசி' (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்ததுஎன்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட்  என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன்இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை.

இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும்என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால்அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர்தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கிபின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்துசரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூடஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட்ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்புகடந்த ஆகஸ்ட் மாதம் 364டாலராக உயர்ந்தது என்பதுதான்இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால்ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவி'என்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

"அடுத்தவர் கருத்துகொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதேஉன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாகஉன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.

அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்துஆற்றல்அறிவு,எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்லஞானி!

Wednesday, August 21, 2013

ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த கதை

deed3e28-56d7-49c0-b556-82eae4d0b824_S_secvpfரஜினி சினிமாவுக்கு வந்து 38 வருடங்கள் ஆகிறது. இன்று நாடே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை கரடுமுரடானது.
சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த காலங்கள் கஷ்டமாகவே நகர்ந்தன. இதுகுறித்து சென்னை தின விழாவில் நடிகர் மோகன்ராமன் பேசிய விவரம் வருமாறு:–
ரஜினி பார்த்த முதல் வேலை ஆபீஸ் பியூன். தொடர்ந்து நிறைய சிறுசிறு வேலைகளில் இருந்தார். அதன் பிறகு கண்டக்டர் ஆனார்.
ரஜினி பணியாற்றிய பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராக இருந்தார். அவருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். இருவரும் ஒரே நாளில் லீவு போட்டுக் கொண்டு சிவாஜி கணேசன் படம் பார்க்க போய் விடுவார்கள்.
ரஜினி நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்பு ஆர்வத்தை ராஜ்பகதூர் ஊக்குவித்தார். ரஜினி நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கும் அவரே பண உதவி செய்தார். கட்ட பொம்மன் படத்தில் உள்ள வசனங்களை பேசி பயிற்சி எடுத்தார்.
டைரக்டர் கே.பாலச்சந்தர் ஒருநாள் ரஜினி படித்த கல்லூரிக்கு சென்றார். அங்கு ரஜினி வேகமாக பேசி நடித்த ஸ்டைல் அவருக்கு பிடித்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படம் எடுத்து இருந்தார். அந்த தலைப்பை மனதில் வைத்தே ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்தார்.
தியாகராயநகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் டிக்கெட் வாங்கிதான் முதலாவதாக நடித்த படத்தை பார்க்க போனார். யாராவது தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார். 10 வயது சிறுமி மட்டும் அவரை அடையாளம் கண்டார். அந்த சிறுமிதான் ரஜினியின் முதல் ரசிகை.
1975 மார்ச் 27–ந்தேதி ஹோலி பண்டிகை யன்றுதான் ரஜினிகாந்த் பெயரை பாலச்சந்தர் சூட்டினார். அந்த நாளைதான் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும்.
ரஜினி படப்பிடிப்பில் அடிக்கடி சிகரெட்டை மேலே சுண்டி விட்டு வாயில் பிடித்து புகை பிடிப்பது உண்டு. இந்த ஸ்டைல் பாலச்சந்தரை கவர்ந்தது. தனது படங்களில் அதை பயன்படுத்தினார்.
ரஜினிக்கு பிடித்த பாடல் ரா…ரா.ரா. ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.
இவ்வாறு அவர் பேசினார்.
கதாநாயகனர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் மென்மையான கேரக்டர்களில் நடித்தே உயர்ந்தார்கள். ஆனால் ரஜினி வில்லனாக இருந்து கதாநாயகனாக சினிமாவுக்கு வருவதற்கு முன் மேடை நாடகததில் துரியோதனனாக நடித்தார். மூன்று முடிச்சு படத்தில் வில்லன் வேடம். பிறகு புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் மென்மையான கேரக்டரில் வந்தார். பில்லா படத்துக்கு பிறகுதான் ஆக்சன் ஹீரோ ஆனார்.

Tuesday, August 20, 2013

Educational Important Websites

www.tnschools.in

Best insurance plan

முதலில் ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா அல்லது ஆஃப்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா?
 
எண்டோவ்மென்ட், யூலிப் போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அதிக பயன் தரக்கூடியது. குறைந்த பிரீமிய தொகையில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைப்பது டேர்ம் ப்ளானின் மிக முக்கிய பாசிட்டிவ் அம்சம்.

ஆனால், நம்மவர்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாகவே பார்ப்பதால், முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காத டேர்ம் ப்ளானை அதிகம் விரும்புவதில்லை. இப்போது இந்த அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு டேர்ம் பாலிசிகளையும் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பலர்.  

டேர்ம் பாலிசியை ஆன்லைனில் எடுக்கும்போது பிரீமியம் கணிசமாக குறையும் என்றாலும், சரியான பாலிசியைத் தேர்வு செய்கிறோமா என்கிற குழப்பமும் இருக்கவே செய்யும். எனவே, ஏஜென்ட்கள் மூலம் பாலிசி எடுப்பதிலும், ஆன்லைன் மூலம் பாலிசி எடுப்பதிலும் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வோம்.

:::::::::::::::::::ஏஜென்ட்கள் மூலம்..!:::::::::::::::::
சாதகம்!

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஏஜென்ட்களின் வழிகாட்டுதல் அவசியமானது. நம் வருமானம், வேலை/தொழிலின் தன்மையைப் பொறுத்து எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுத்துக்கொள்ளலாம் என்பதை ஏஜென்டிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். மேலும், பல காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதால் கூடுதல் பலன் தரக்கூடிய வகையில் எந்த பாலிசி எடுப்பது என்பதை ஏஜென்டிடம் கேட்கலாம்.  

 பிரீமியம் கட்ட ஏஜென்ட் நினைவுபடுத்துவார். இதனால் பாலிசி காலாவதி ஆவது தவிர்க்கப்படும்.

 பாலிசி எடுக்கத் தேவையான ஆவணங்கள், தேவை எனில் மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்கு ஏஜென்ட் வழி காட்டுவார்.  

 பாலிசி க்ளைம் செய்யும்போது தேவையான ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவரே முன்நின்று அனைத்து வேலைகளையும் முடிப்பார். மேலும், எந்தெந்த காரணத்தினால் பாலிசி க்ளைம் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் க்ளைம் பெற்றுத் தருவதில் கவனமாக இருப்பார்.

பாதகம்!

சில காப்பீட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட டேர்ம் ப்ளான்தான் நடைமுறையில் இருக்கும். அதில் பிரீமியம் அதிகமாக இருக்கும். அந்த பாலிசியையே ஏஜென்ட் பரிந்துரைத்தால் அதிக பிரீமியம் கட்டவேண்டியிருக்கும்.  உதாரணத்துக்கு, பாலிசி முதிர்வில் கட்டிய பிரீமியத்தைத் திரும்பக் கிடைக்கிற மாதிரியான டேர்ம் பாலிசிக்கு பிரீமியம் அதிகம்.

 ஏஜென்ட் வேறு வேலைக்கு மாறியிருந்தால் பாலிசி சேவை கிடைக்காமல் போகும்.

 பாலிசி விண்ணப்பத்தில் ஏஜென்ட் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிடும் நடைமுறைதான் காணப்படுகிறது. இதனால், உடல்நலம் தொடர்பான சில விஷயங்கள் இடம்பெறாமல் போகலாம். இதனால் க்ளைமின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.

:::::::::::::::::::::ஆன்லைன் மூலம்..!:::::::::::::::::::

சாதகம்!

 ஏஜென்ட் கமிஷன் இல்லாமல் பாலிசி விற்கப்படுவதால் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுக்கலாம். ஏஜென்ட்களிடம் எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தைவிட, ஆன்லைன் மூலம் எடுக்கும் காப்பீட்டின் பிரீமியம் 30 - 50% வரை குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 30 வயதுடைய ஒருவர் 50 லட்சம் ரூபாய்க்கு ஏஜென்ட் மூலம் டேர்ம் பாலிசி எடுக்கிறபோது ஆண்டுக்கு 14,000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்தவேண்டும். ஆனால், ஆன்லைன் மூலம் பாலிசி எடுத்தால் பிரீமியம் தொகை சுமார் ரூபாய் 7,000 மட்டுமே!

தேவைப்பட்டால் பாலிசி தொடர்பான விவரங்களைக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் கிளையில் நேரடியாக கேட்டுப் பெறலாம்.  

 தேவையான ஆவணங்கள், நடைமுறைகள், மருத்துவப் பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் போன்ற விவரங்கள் ஆன்லைன் மூலமாகவும், காப்பீடு நிறுவனத்தின் கால்சென்டர் மூலமாகவும் பெறலாம்.  

 பல நிறுவனங்கள், ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் ப்ளான் எடுக்கவேண்டும் என்பதைக் கணக்கிடும் கால்குலேட்டரை அதன் இணையதளத்திலே வைத்திருக்கின்றன. அதன் மூலம் பாலிசி தொகையை எளிதாக முடிவு செய்துகொள்ள முடியும்.

நமக்குப் பொருத்தமான பாலிசி எது, எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்கலாம் என்கிற விவரங்களை நாமே தீர்மானிக்கலாம்.  

  பாலிசி விண்ணப்பத்தை நாமே பூர்த்தி செய்வதால் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இடம் பெற்றுவிடும். இதனால், க்ளைம் சுலபமாக இருக்கும்.

பாதகம்!

 நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் திட்டம் எது என்பதை முடிவெடுப்பதில் சிக்கல் வரலாம்!

 ஏகப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் இருக்கும். காப்பீடு எடுக்க நினைக்கும் எல்லோரும் அதுகுறித்த விழிப்பு உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது.

 பாலிசிகள் குறித்து ஏற்படும் சந்தேகங்கள் விளக்கங்களுக்கு கால் சென்டரைத்தான் நம்பவேண்டும். சில நேரங்களில் மொழிப் பிரச்னையும் வரும்.

 ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்க கணினி மற்றும் இணையதள அறிவு அவசியம். மேலும், இணையதளம் மூலமாக பணம் கட்டுவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதி உங்களுக்கு இருப்பது அவசியம்.

 பாலிசியில் ஏதாவது பிரச்னை என்றால் அருகிலுள்ள கிளைக்கு சென்றுதான் சரிசெய்ய வேண்டும். ஆனால், ஆன்லைன் டேர்ம் ப்ளான் வழங்கும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளை எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது தேவையற்ற அலைச்சலை தரும்.

ஆன்லைனில் பாலிசி எடுக்கிறோம் எனில், எப்போது பிரீமியம் கட்டவேண்டும் என்பதை நாம்தான் கவனிக்கவேண்டும். சில நிறுவனங்கள் பிரீமியம் கட்டுவதை நினைவூட்டி எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் அனுப்பினாலும், இதை கவனிக்காமல்விட்டால் பாலிசி முடிவுக்கு வரும்.  

 ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை வந்து சில வருடங்களே ஆவதால் க்ளைம் நடைமுறைகள் எந்த அளவிற்கு பாலிசிதாரருக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.    

 க்ளைம் செய்வதற்கு தரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஒருவர் குறை இருந்தால், க்ளைம் பெறுவது தாமதம் ஆகலாம்.

பொதுவாக, ஏஜென்ட்கள் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களின் சராசரி கவரேஜ் 18 முதல் 20 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவே ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களில் சராசரி கவரேஜ் 40 முதல் 50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதற்கு காரணம், சுயமாக முடிவு செய்து டேர்ம் ப்ளான் எடுப்பதால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச்! Smart watch @ cheap price / rate...


 
ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக்கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலிருந்தே சுடுவது போன்ற சாகசங்களை எல்லாம் பார்த்து வியந்திருப்போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில்நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்துக் கொண்டே வருகிறது.லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் என்றொரு புதிய வகை தோன்றியிருக்கிறது. செல்போன், ஐபேட், டேப்லட் போன்றவை கைகளில் வைத்து இயக்குபவை. இதையடுத்து, மனித உடலோடு இணைந்து செயல்படும் தொழில் நுட்பத்தையே வேரபிள் டெக்னாலஜி என்று அழைக்கிறார்கள். அதில் முதலில் வருவது கைக்கடிகாரம். இரண்டாவது மூக்குக் கண்ணாடி. கைக்கடிகாரத்தை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், தொழில்நுட்ப உருவேற்றலாம் என்று நிறுவனங்கள் யோசித்ததின் விளைவுதான் ஸ்மார்ட்வாட்ச். இது வெறுமனே நேரம் மட்டும் காட்டும் கடிகாரம் அல்ல. இதன் மூலம், விளையாடலாம், மொழி பெயர்ப்புகள் செய்யலாம், கணக்குகள் போடலாம். இன்னும் சிலவற்றில் கேமரா, தெர்மோ மீட்டர், காம்பஸ், ஜி.பி.எஸ்., மேப்புகள், ஸ்பீக்கர், மெமரி கார்ட் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை வயர்லெஸ் ஹெட்செட், மைக்ரோபோன், மோடம் போன்றவற்றோடும் பேசவைக்க முடியும்.அடுத்தகட்டமாக மொபைல் தொழில் நுட்பத்தோடு இன்னும் நெருக்கமாக எப்படி கடிகாரத்தை இணைக்க முடியும் என்று எழுந்த ஆய்வின் பலன், இந்த ஆண்டு பெரிய முன்னேற்றத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அதன் பெயர்தான் பெபிள் இபேப்பர் வாட்ச். ஐபோனோடும் ஆண்ட்ராய்டு போன்களோடும் சுலபமாக இணைக்கத்தக்க இந்த ஸ்மார்ட்வாட்ச் செய்யும் அற்புதங்கள்தான் இப்போது உலகெங்கும் பயனர்களிடையே பாப்புலராக இருக்கிறது.

பெபிள், ஐபோனோடும் ஆண்ட்ராய்ட் போனோடும் ப்ளூடூத் மூலம் தொடர்புகொள்ளும். உங்கள் போனில் மின்னஞ்சல் வந்தால், குறுஞ்செய்தி வந்தால், அலர்ட்டுகள் வந்தால், உடனடியாக அது உங்கள் பெபிள் கைக்கடிகாரத்தில் தெரியும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என்றே பெபிளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் அபாரம். ஜி.பி.எஸ். மூலம் வழிகாட்டும், வேகம் கணக்கிட்டுக் காட்டும், தொலைவைத் தெரிவிக்கும். இதையே ஓட்டப்பந்தய வீரர்களும் பயன்படுத்தலாம். கூடுதலாக இசையையும் கேட்கலாம்.கைக்கடிகாரம் உங்கள் போனோடு தொடர்பு கொண்டிருப்பதால், உங்களுக்கு விருப்பமான கைக்கடிகார டையலையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். எப்படி டெஸ்க்டாப் ஸ்கிரீனில் முகப்படங்களை மாற்றுகிறீர்களோ அப்படி கைக்கடிகார முகப்புகளையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச், ஐம்பது மீட்டர் ஆழ தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீர் புகாதாம்.பெபிளுக்கு அடுத்த முன்னேற்றம் ஹாட் வாட்ச்கள். எப்படி பெபிள் மக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி, தன் தொழில்நுட்பத்தை உருவாக்கியதோ, அதே போன்ற கிரவுட் ஃபண்டிங் மூலம் உருவாகியிருப்பதே ஹாட் வாட்ச்கள். இந்த ஸ்மார்ட் வாட்ச், ஒரு படி உயர்ந்தது. உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையாம். இருபது முப்பது அடிகள் தள்ளியிருந்தாலும், ஸ்மார்ட்வாட்ச் வேலை செய்யும். முன்பிருந்த ஸ்மார்ட்வாட்ச்களில் குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களைப் படிக்க மட்டும்தான் முடியும். இதில் அதற்குப் பதிலெழுதவும் முடியும். போதாக் குறைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை கைக்கடிகாரத்தில் இருந்தே அப்டேட் செய்யலாம்.போனைத் தொடாமலேயே கைக்கடிகாரத்தை அருகில் வைத்துக் கொண்டே பேசும் வசதியும் இதில் உண்டு. நான்கு அழகழகான மாடல்கள் சந்தைக்கு வரவிருக்கின்றன. இப்போதே, எண்ணற்றோர் இதற்காக முன்பணம் கட்டிவிட்டுக் காத்திருக்கின்றனர்.

இதன் அடுத்தகட்டம்தான் சூப்பர். ஸ்மார்ட்வாட்ச் கோதாவில் ஆப்பிள் நிறுவனமும் சாம்சங் நிறுவனமும் கூட இறங்க இருக்கின்றன. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. கைக்கு அழகாக கடிகாரம் மட்டுமல்ல, கணினியையே பொதித்துத் தர தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டன. பயனர்களுக்கு, புதிய அனுபவம் நிச்சயம்!

நிலத்தடி நீர் திருடர்கள் ., தூங்கும் சட்டங்கள்! Water becoming the reason for 3rd world war... facts...

தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதைதான் நிலத்தடி நீரின் கதையும். தொலைக்காட்சிப் பெட்டி வந்த புதிதில் வீடுகள்தோறும் ஆன்டெனாக்கள் முளைத்து நின்றது போல... இன்று பூமிக்கு கீழே ஆழ்துளைக் கிணறுகளின் குழாய்கள், கோடிக்கால் பூதங்களாக நிற்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆடம்பரத்துக்காகவும், அழகுக்காகவும் மட்டுமே ராட்சதக் குழாய்கள் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

தூங்கும் சட்டங்கள்!  

சென்னையைப் பொருத்தவரை, மாநகரில் வாழும் மனிதர்களுக்கே ஒரு நாளைக்கு 147 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுபோக, தனியார் நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள், நீர் விளையாட்டு மையங்கள்... போன்றவை பல கோடி லிட்டர் தண்ணீரை, திருட்டுத்தனமாக ராட்சதக் குழாய்கள் மூலமாக உறிஞ்சியும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்தும் பயன்படுத்துகின்றன. நடைமுறையில் உள்ள 'சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும் சட்டம்-1988’-ன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வர்த்தக நோக்கத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. 

அதேபோல, தமிழக அரசு, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காக, 2003-ம் ஆண்டு 'தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைச் சட்டம்’ இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் தொடர்பான அரசாணை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின் மோட்டார்களுக்குப் பதிலாக, சூரிய ஒளி சக்தி மூலமாக இயங்கும் 2 ஆயிரம் மோட்டார்களை விவசாயிகளுக்குக் கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார், முதல்வர். 

ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடை வேண்டும்!  

கிராமங்கள்ல சின்ன சின்ன ஓடைகள் இருக்கும். மழைத்தண்ணி ஓடைகள் வழியா குளம், குட்டைக்கு வரும். அது நிறைஞ்ச பிறகு, ஏரி நிறையும். இப்படி சின்ன கிராமத்துலகூட நிறைய நீர்பிடிப்புப் பகுதிகள் இருந்துச்சு. காலப்போக்குல குடியிருப்புத் தேவைக்காக ஓடைகளையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பிச்சாங்க. நீர்நிலைகளுக்கு தண்ணி வர்றது தடைபட்டுப் போச்சு. ஒரு காலத்துல சென்னையைச் சுத்தி 400 ஏரிகள் இருந்துச்சு. இன்னிக்கு அதுல 40 ஏரிகள்கூட உருப்படியா இல்லை. இப்படி நீர் நிலைகள் தூர்ந்து போனதால நிலத்தடி நீரும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது. இது ஒருபக்கமிருக்க, புதுசு புதுசா 'போர்வெல்’ போட ஆரம்பிச்சதும் நிலத்தடி நீரைப் பாதிச்சிடுச்சு. இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் அதிக 'போர்வெல்’ இருக்குனு சொல்றாங்க. நிலத்தடி நீரை குழாய் போட்டு இஷ்டத்துக்கு உறிஞ்சுறவங்க, மழை நீரை நிலத்துக்குள்ள அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கறதில்லை. அதனால, ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்துல சில நடவடிக்கைகளை அரசாங்கம் போர்க்கால அடிப்படையில எடுக்கணும். அதாவது, எல்லா நிலங்கள்லயும் பண்ணைக்குட்டைகளைக் கட்டாயமாக்கணும். அதுல தேங்கற அதிகப்படியான நீரை, பூமிக்குள்ள அனுப்பறதுக்கான ஏற்பாடுகளையும் கட்டாயமாக்கணும்.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் அரசை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சென்ற அ.தி.மு.க ஆட்சியின்போது மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய அதே ஜெயலலிதாதான், தற்போதும் முதல்வராக இருக்கிறார். 'புதிய வீடுகள் கட்டும்போது மழை நீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டாயம் அமைக்க வேண்டும்’ என்ற விதி இன்னமும் அமலில் உள்ளது. ஆனால், நாம் நடைமுறைப்படுத்துவதில்லை... அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. 'வெயிலின் அருமை நிழலில் தெரியும்’ என்பதுபோல் தண்ணீருக்காக குடங்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் போதுதான் மழை நீர் சேமிப்பின் அவசியம் புரியும்.

மழை நீர்... உயிர் நீர்!  

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ 5 ஆயிரம் ரூபாய் இருந்தால்போதும். ஆயுளுக்கும் தண்ணீர் பிரச்னை இருக்காது. ஓர் ஆண்டின் சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர் என்று வைத்துக் கொண்டால்... 100 சதுர மீட்டர் மொட்டை மாடி மூலமாக ஆண்டுக்கு 61 ஆயிரத்து 600 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்கிறது, பொதுப்பணித்துறையின் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார மையம். மினரல் வாட்டருக்கு மாதம்தோறும் செலவு செய்பவர்கள், ஒரே ஒரு முறை செலவு செய்து மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவி விட்டால், ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதுடன், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.

வீடுகளில் மட்டும் மழை நீரை சேமித்தால் போதாது... விவசாய நிலங்களிலும் மழை நீரை அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

Friday, August 16, 2013

TNPSC GROUP - IV HALL TICKET.

 

click here to Download GROUP -IV HALL TICKET 

http://tnpscexams.net/callletter/tnpsc_092013/index.php

TNPSC-Departmental Examinations RESULT- MAY 2013


click here to view Results of Departmental Examinations - MAY 2013



http://www.tnpsc.gov.in/Resultget-may2k13.html

Send children with Tax to School...

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இது, எங்களுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு பள்ளியும், 1 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, எங்களுக்கு ஏற்படும். இதனால், கடைசியில், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, விவாதித்து, முடிவெடுக்க, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், தென் மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் கூடி, விவாதிக்க உள்ளோம். அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
முதற்கட்டமாக, இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, 50 லட்சம் பெற்றோர் மற்றும் எம்.பி.,க்களிடம் கையெழுத்தை பெற்று, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் வழங்க, முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

Monday, August 12, 2013

BLOOM BOX

மணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’ 
(BLOOM BOX)
 
உலகின் பெருகிவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மணலில் இருந்து மின்சக்தி பிறந்திருக்கிறது. அதைவிட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டுபிடித்திருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
 
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரைகளில் எளிதாகக் கிடைக்கும் மணல்தான் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கானியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தியைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான்ஸ்ட் என்பவர் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதைத் தயாரிக்க பிளாட்டினம் போன்ற விலையுர்ந்த, எளிதில் கிடைக்காத பொருள்கள் தேவைபட்டதால் அது பிரபலம் ஆகவில்லை. இப்போது அதே முறையில் அதிகச் செலவில்லாமல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை பத்து ஆண்டுகள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார் ஆர்.கே. ஸ்ரீதர்.

நெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென்னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையில் மேற்படிப்பையும் முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலைகழகத்தில் விண்வெளி தொழில் நுட்பத் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது நாஸாவின் பல திட்டங்களுக்கு ஆலோசகர். நாஸாவின் செவ்வாய் பயணத்திட்டத்துக்கான மின் சக்தியை, ஃப்யூல் செல் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய்ச்சி காலத்தில் அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றியவர்.
 
‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது ஆராய்ச்சியைத் தொடர சோதனை உற்பத்திக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்பட்டது. ஆராய்ச்சியின் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர் என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத் தந்து ஸ்ரீதரின் தலைமையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த கெலினர்தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன்ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து தொடங்கியது. உற்பத்தித் தொடங்கியதும் தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோலா, பாங்க் ஆப் அமெரிக்கா, வால்மார்ட்... போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து இத்திட்டத்துக்கு உதவி இருக்கின்றன.  

பிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணைத்து கறுப்பு வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத்தைத் தரும். இதுபோல பல செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு ‘புளும்சர்வர்’என்று பெயரிட்டு இருக்கிறார். ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு சின்னத் தொழிற்சாலைக்குப் போதும். 
 
மின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்ற தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது" என்று சொல்லும் ஸ்ரீதரை ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை நாளைய உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில் ஒருவராகப் பட்டியல் இட்டிருக்கிறது .

Wednesday, August 7, 2013

Top 10 Most Paused Movie Moments

http://www.youtube.com/watch?v=BeZLzsik75U

Top 10 Animated Movies


Educational Minister's Visit

பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்
சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்.


கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின், 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், கற்றல் - கற்பித்தல் குறித்து பேசினார். மாணவரோடு மாணவராக, வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் எடுக்க வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியருக்கு, ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பதற்றமும் ஏற்பட்டது. பின், நூலகம், உடற்பயிற்சி வகுப்பு உள்ளிட்டவற்றையும், அமைச்சர் பார்வையிட்டார். சென்னை, மேடவாக்கம், அரசு ஆரம்பப் பள்ளியில், திடீரென ஆசிரியராக மாறி, மாணவர்களிடம், பல்வேறு கேள்விகளை கேட்டு, உற்சாகப்படுத்தினார். மாணவர்களை, வாக்கியங்களை படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும், அவர்களின் கற்றல் திறனை, அமைச்சர் ஆய்வு செய்தார். மேடவாக்கம் அருகே, ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியிலும், அமைச்சரின் கேள்விகள் தொடர்ந்தன. தமிழ் மற்றும் சமூகவியல் பாடங்களில், கேள்விகளை கேட்டார். மாணவர்கள், சரியாக பதிலளித்ததைக் கண்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு, மகிழ்ச்சி அடைந்தது. இறுதியில், தாம்பரம், ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட அளவில், அரசு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு, எந்த அளவிற்கு சென்றடைந்தது என்பது குறித்து, ஆய்வு செய்த அமைச்சர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன், வைகைச் செல்வன், பல ஆண்டுகளாக, சென்னை, பாரிமுனையில் உள்ள முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதியுதவி பெறும் பள்ளி), தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Solution for Android Mobile Battery & Smartphone Batteries...

நாளொரு போனும் பொழுதொரு அப்ளிகேஷனுமாக வாடிக்கையாளர்களைத் திணறடிக்கும் மொபைல் போன் துறை, சார்ஜ் போதாமல் நொண்டிக் கொண்டிருப்பது பேட்டரியில்தான். எந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் போனாக இருந்தாலும், சார்ஜ் நிற்பதே இல்லை. குழந்தைகளை மறக்காமல் தூக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, சார்ஜரை எல்லா இடங்களுக்கும் மூட்டை கட்டுவது தவிர்க்கவே முடியாதது. பல போன்களில் சார்ஜ் எட்டு மணிநேரம் தங்கினால் அதிகம். வீட்டில் சார்ஜ் போட்டு அலுவலகம் போனால், மாலைக்குள் சிவப்பு தெரியத் தொடங்கிவிடும். 
புதுசு புதுசாக மொபைல் போன்கள் வாங்கப் போவோர் கூட, பேட்டரி விஷயத்தில் தயங்கித் தயங்கியே முடிவு எடுப்பர். பேட்டரி எத்தனை மணிநேரம் தாங்கும் என்ற கேள்வி எழாமல் எந்த போன் விற்பனையும் ஆவதில்லை. போனுக்குள் புதுப்புது முன்னேற்றங்களைச் சேர்த்து வெளியிடும் நிறுவனங்கள் கூட, பேட்டரி விஷயத்தில் ஜகா வாங்கிவிடும்.சரி, ஏன் ஸ்மார்ட்போன்கள் இவ்வளவு மின்சாரத்தைக் குடிக்கின்றன? அதில் இருக்கும் இயங்குதளம், எண்ணற்ற அப்ளிகேஷன்கள், அபரிமிதமான வசதிகள் ஆகியவை மிக விரைவாக பேட்டரியின் ஆற்றலை உறிஞ்சிவிடுகின்றன. பேட்டரிகளுக்குள் போதுமான மின்சாரத்தைச் சேமிக்க முடியாததே முக்கிய காரணம். 
இணையம் முழுக்க எப்படியெல்லாம் பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்தலாம் என்றுதான் ஆலோசனைகள் கொட்டிக்கிடக்கின்றன. முக்கியமாக, செல்போன் ஸ்கிரீன்களின் வெளிச்சத்தைக் குறைப்பதில் தொடங்கி, தேவையற்ற அப்ளிகேஷன்களை மூடிவிடச் சொல்வது வரை ஒரே அட்வைஸ் மழை. ஆனால், இதெல்லாம் பிரச்னைக்குத் தீர்வே இல்லை. சொல்லப் போனால், இப்போதைக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

மொபைல்போன் துறையின் சவலைப் பிள்ளை பேட்டரிகள்தானோ என்ற எண்ணமே பலருக்கும் ஏற்படும்.அப்படி இல்லை என்கின்றன இத்துறையில் நடக்கும் ஆய்வுகள். லித்தியம்-ஐயான் பேட்டரிகளே இன்று புழக்கத்தில் இருக்கும் பேட்டரிகள். இதனுள் கிராஃபைட் அனோட்தான் அதிகபட்ச இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதற்கு மாற்றாக வேறு என்ன வைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் நடக்கின்றன. சிலிக்கான அனோடுகளைப் பயன்படுத்தினால், இப்போதிருப்பது போல் பத்து மடங்கு மின்சாரத்தைச் சேமிக்க வாய்ப்புண்டு. அதேபோல், லித்தியம்-சல்ஃபர், லித்தியம்- கடல்நீர், லித்தியம்-காற்று ஆகிய இணைப்புகளின் மூலம், கூடுதல் திறனைப் பெற முடியும் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவை மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல காலமாகும்.
லித்தியத்தை மட்டும் ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? வேறு ஏதேனும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், பேட்டரி நிறுவனங்களிடம் ஏற்பட்டிருக்கிறது. விளைவு, கார்பனின் மற்றொரு வடிவமான கிராபைனைக் கொண்டு பேட்டரி உருவாக்கும் திட்டம். இதனை சில நிமிடங்களிலேயே சார்ஜ் செய்து விட முடியும். இதற்காக இங்கிலாந்து அரசு பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கி இருக்கிறது. பேட்டரிக்குள் இருக்கும் எலக்ட்ரோடுகளின் ஆற்றலை எவ்வளவு உயர்த்த முடியும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.  மைக்ரோ பாட்டரிகளை உருவாக்குவது மற்றொரு திட்டம். இல்லினாஸ் பல்கலைக்கழகம் இதைச் செய்திருக்கிறது. இப்போதிருக்கும் பேட்டரிகளின் அளவில் பதிமூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் புதிய மைக்ரோ பாட்டரி, ஆயிரம் மடங்கு வேகமாக சார்ஜ் ஆகுமாம்.இதெல்லாம் ஆய்வு நிலையில் இருக்க, இன்னொரு திட்டம் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. வைசிப் கிரிஸ்டல் (Wysips Crystal)என்ற பிலிம், சூரியனில் இருந்து மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறது. செல்போன் ஸ்கிரீனுக்குக் கீழே பொருத்தப்படும் இந்த மிகமெல்லிய பிலிம், எந்த ஒளியிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்கிக் கொள்ளும்; சூரியஒளியில் இருந்து கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும். இன்றைய தேதியில் இது உற்பத்தி செய்யும் மின்சார ஆற்றல் போதுமானதாக இல்லை; 2014க்குள் இதனைப் பன்மடங்கு உயர்த்திவிட முடியும் என்கிறார்கள்.இன்னும் சில ஆய்வுகள் வித்தியாசமானவை. சிறுநீரில் இருந்து மின்சார பேட்டரி, சோடியம் ஐயானைக் கொண்டு மரத்தில் இருந்து மின்சார சார்ஜ் என்றெல்லாம் ஆய்வுகள் நடக்கின்றன.பேட்டரியின் மற்றொரு பிரச்னை, அதனை சார்ஜ் செய்யும் நேரம். பல போன்களுக்கு சார்ஜ் ஏற பல மணி நேரம் ஆகும். பொறுமையைச் சோதிக்கும். எப்படி விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பதினெட்டே வயதான இஷா கார்ரே கண்டுபிடித்திருக்கும் சூப்பர்கபாசிட்டர், இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடக் கூடும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன்ஏஜ் பெண்ணான இஷா, இந்தக் கண்டுபிடிப்புக்காக ஐம்பதாயிரம் டாலரைப் பரிசாகப் பெற்றுள்ளார். இந்த சூப்பர்கபாசிட்டர் மூலம் இருபது நொடிகளில் செல்போனை சார்ஜ் செய்துவிட முடியுமாம். இப்போதே, கூகுளும் இன்டெல்லும் இப்பெண்ணோடு பேசி, சூப்பர்கபாசிட்டர் தொழில் நுட்பத்துக்கு ஆதரவளித்துள்ளன.

Telangana தனித் தெலங்கானா

 தனித் தெலங்கானா


 
ஐம்பதாண்டுப் போராட்டத்துக்குப் பின்பு தனித் தெலங்கானா அமைவதற்கான ஒப்புதலை மத்திய காங்கிரஸ் கூட்டணி வழங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்படவிருக்கும் தெலங்கானா, இந்தியாவின் 29வது மாநிலம். 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 119 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் இருப்பார்கள். மக்கள்தொகை 3.5 கோடி. ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி முதல், பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதில் ஒப்புதல் இல்லை. ‘இது வலிமிகுந்த முடிவு’ என்று கருத்துத் தெரிவித்தார் கிரண்குமார். ஆனால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவோ, ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெலங்கானா மசோதா நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெலங்கானா கனவு நிறைவேறும். காங்கிரசை நம்ப முடியாது’ என்று ஜாக்கிரதையாகப் பேசியிருக்கிறார்.
 
2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மனத்தில் கொண்டே, தனித் தெலங்கானாவுக்கான ஒப்புதலை காங்கிரஸ் வழங்கி இருக்கிறது. ஆந்திரத்துக்குள் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. ஜகன்மோகன் ரெட்டியின் செல்வாக்குக் கிடுகிடுவென வளர்ந்தும் வருகிறது. இந்நிலையில், ஜெகன் மற்றும் சந்திரசேகரராவ் இருவரையும் ஓரம்கட்டி, காங்கிரஸைப் பலப்படுத்தவே தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுகிறது. ஆந்திரத்தைக் கூறுபோட்டு, அரசியல் லாபம் தேடப் பார்க்கிறது காங்கிரஸ் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.  தெலங்கானா மக்களுக்கு ஆந்திர அரசிலோ, நிர்வாகத்திலோ, அதிகாரிகள் மட்டத்திலோ, கல்வித்துறையிலோ பெரிய செல்வாக்கு இல்லை; வாய்ப்பு இல்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. தெலங்கானா பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் வருவாய் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம். ஆனால், வாய்ப்புகளோ முப்பது சதவிகிதம் கூட இல்லை.
 
சின்னச் சின்ன மாநிலங்கள் உருவாக வேண்டும் என்று பேசுபவர்கள், அதில் ஏற்படும் செலவினங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகின்றனர். மேலும் இந்தியாவெங்கும் மாநிலங்களை உடைக்கும் குரல்களுக்கு, தெலங்கானா உருவாக்கம் ஊக்கம் கொடுத்திருக்கிறது. அகண்ட ராயலசீமா கேட்டு அடுத்தொரு போராட்டம் வெடிக்காது என்று சோல்வதற்கில்லை.
 
தெலங்கானாவை வரவேற்றுள்ள மாயாவதி, உத்திரப்பிரதேசத்தை நான்கு மாநிலங்களாக உடைக்க வேண்டும் என்று இப்போதே பேசத் தொடங்கியிருப்பது ஆபத்துக்கான ஆரம்பம்.  சந்திரபாபு நாயுடுவால் அபரிமித வளர்ச்சியடைந்த ஹைதராபாத், இனி தெலங்கானாவுக்கே. ஆந்திர மாநிலம் தனக்கான தலைநகரை உருவாக்கிக் கொள்ளும்வரை, பத்தாண்டுகளுக்கு, இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து ஹைதராபாத்தே தலைநகராகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Friday, August 2, 2013

beephone virus.. இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ் (Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக காஸ்பெர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றை ஒன்று அழிக்கவிடாமல் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளதால், இரண்டையும் தயாரித்த குழுக்கள் ஒருவருக்கொருவர் ஒரே தீய நோக்கத்துடன் இந்த வைரஸ்களைத் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீ போன் வைரஸ் பல பெயர்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. அவை (Kaspersky), W32/Autorun.worm.aaeh!gen (McAfee), W32/VobFusBX (Sophos), Trojan horse ( Symantec), TrojanFBZZ! 41E0B7088DD9 (McAfee), Trojan. Win32.SelfDel.aqhh (Kaspersky), Trojan. Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), BeeboneFMQ! 039FA2520D97 (McAfee), W32.Changeup! gen40 (Symantec) and Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky).
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

"தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை'

சென்னை: ""அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில், 60 சதவீத பெண்கள், குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை,'' என, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறினார்.



அரசு மகப்பேறு மருத்துவமனை: உலக தாய்ப்பால் வார விழா, ஆக., 1ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில், சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில், மருத்துவர் உமா சாந்தி துவக்க உரையாற்றினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, துணை இயக்குனர் மீனா உமாசந்தர் வரவேற்புரையாற்றினார்.

170 நாடுகளில்:

விழாவை, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர், கனகசபை, துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த, 1991ம் ஆண்டு முதல், உலக முழுவதும் உள்ள, 170 நாடுகளில், "உலக தாய்ப்பால் வார விழா' கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு, முதலில் கொடுக்கப்படும் சீம்பாலுக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம். சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த, 15 முதல் 30 நிமிடத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இரண்டு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த, ஆறு மாதம் வரை, கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், டீ, சர்க்கரை தண்ணீர் தருவதை தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பின், உருளைக்கிழக்கு, உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கண்டிப்பாக, இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 40 சதவீத பெண்களே, தாய்ப்பால் கொடுக்கின்றனர். அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை.

மார்பக புற்று நோய் வராது:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் வருவது குறைகிறது. குழந்தை பிறப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின், அளவில் பெரியதாக இருக்கும் வயிறு, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சிறியதாகி விடும். இந்திய அளவில், ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும், 1,000 குழந்தைகளில், 48 குழந்தைகள் இறந்து விடுகின்றன; இதில், தமிழகத்தில், 24 குழந்தைகள் அடங்கும். தமிழகத்தில், பிறந்த ஒரு மாதத்தில், 1,000 குழந்தைகளில், 12 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதை, 10ஆக குறைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, கனகசபை கூறினார்.

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? அரசு பதிலளிக்க ஐகோர்ட் "நோட்டீஸ்'

சென்னை: தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.
 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.,:

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர், எஸ்.சரவணன் என்பவர், தாக்கல் செய்த மனு: ஜாதி முறையை ஒழிக்க வேண்டும் என்றால், மக்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும். தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி பட்டங்களை நீக்கும்படி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். ஜாதி வன்முறையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள், 1997ல் மாற்றப்பட்டன. "மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, வெள்ளாளர் மகளிர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, சிக்கையா நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, யாதவர் கல்லூரி, மதுரை சிவகாசி நாடார் கல்லூரி' என, பல கல்லூரிகளின் பெயர்களில், ஜாதியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைப் பொறுத்தவரை, சவுராஷ்டிரா பள்ளி, நாடார் சரஸ்வதி பள்ளி, அரசு கள்ளர் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, சி.பி.ராமசாமி அய்யர் பள்ளி என, பள்ளிகளின் பெயருக்குப் பின்னும், ஜாதி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மனதில்:

மக்கள் நல அரசானது, ஜாதியின் பெயரில், பள்ளிகள், கல்லூரிகளை நடத்தக் கூடாது. தலைவர்களின் பெயர்கள் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், அவர்களின் பெயருக்குப் பின், ஜாதி பெயரையும் இணைப்பது, அப்பாவி மக்களின் மனதில் ஜாதிய முறையை புகுத்துவது போலாகும். பள்ளிக் குழந்தைகளின் மனதில் பதிய ஆரம்பித்தால், இந்த சமூகத்தில், ஜாதி முறையை ஒழிக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகளை, அரசு நடத்துவதற்கு, சட்டம் அதிகாரத்தை அளிக்கிறது. ஜாதி பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கவில்லை. எனவே, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும், ஜாதி பெயர்களை நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 10ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு பூமிக்கு அடியிலிருந்து சிவலிங்கம் கண்டெடுப்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே மருதூர் கிராமத்தில் பூமிக்கு அடியிலிருந்து விலை மதிப்பில்லாத சிவலிங்கம் மற்றும் பூஜை பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாய முதலியார், 77. மளிகை கடை வைத்துள்ள இவர், தனது வீட்டின் பின்புறம் செப்டி டேங்க் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று மாலை 4 மணியளவில், அதற்காக பள்ளம் தோண்டும் பணியில் சிலர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தரை மட்டத்திலிருந்து 6 அடிக்கு கீழே பள்ளம் தோண்டும் போது, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளது தெரியவந்தது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
நேற்று மாலை 6 மணியளவில், பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. இரவு 7.30 மணி வரை நடந்த இப்பணியின் போது, பூஜைக்கு தேவையான மணி, பூஜைபாத்திரங்கள், சிவலிங்கம், யானை சிற்பம் மற்றும் கலை நயம் மிக்க உலோக பொருட்கள் பலவும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியிலிருந்து சேகரிக்கப்பட்ட, மேற்கண்ட உலோகங்கள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவையா? அல்லது வேறு வகை உலோகத்தால் வடிவமைக்கப்பட்டதா? என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. பூமியிலிருந்து கிடைத்துள்ள சிவலிங்கம் விலை மதிப்பில்லாத மரகத லிங்கமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
மருதூர் கிராமத்தைச் சேர்ந்த நமச்சிவாய முதலியார் வீட்டு தோட்டத்திலுள்ள, பூமிக்கடியிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மருதூரில் கிடைத்துள்ள விலை மதிப்பில்லாத, உலோக பொருட்களின் தரம் பற்றி, இன்று ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.