Friday, October 31, 2014

Xolo Q2100 oru paarvai

Posted: 19 Oct 2014 09:50 PM PDT
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் சமீபத்தில் ஸோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘Xolo Q2100’யை வெளியிட்டது. ‘ஸோலோ Q2100’ ஸ்மார்ட் போன் 5.5 இன்ச் 720x1280 pixels (267 ppi) தொடுதிரையைக் கொண்டுள்ளது. கீறல்களைச் சமாளிக்க ‘Corning Gorilla Glass 3’ என்ற தொழில் நுட்பத்தை இந்தத் தொடுதிரை கொண்டுள்ளது. மேலும், ‘ஸோலோ Q2100’ ஸ்மார்ட் போன் சக்திவாய்ந்த  8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது.

ஸோலோ Q2100 ஸ்மார்ட் போன், 1.3GHz Quadcore சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் 1GB ரேம்மைக் கொண்டு இயங்கு கிறது. ‘Mali 400-MP2’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் இந்த ஸோலோவின் Q900Sல் அடங்கும். ஆண்ட்ராய்டு 4.4.2-யைக் கொண்டு இயங்கும் ஸோலோ Q2100-ன் இன்டர்னல் மெமரி 8GB. மேலும், 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். பேட்டரி வசதியைப் பொறுத்த வரை, 2800mAh பேட்டரியைக் கொண்டுள் ளது இந்த ஸ்மார்ட் போன்.


டூயல் சிம் வசதியோடு வரும் ஸோலோ Q2100, சராசரி ஸ்மார்ட் போன்களின் வசதி களான GPRS, EDGE, 3G, WiFi, GPS மற்றும் ப்ளூ-டூத் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. ரூபாய் 12,440 விலையில் இந்திய சந்தையில் விற்பனையாகும் ஸோலோ Q2100 ஸ்மார்ட் போன், ‘Fingerprint’ சென்ஸாரோடு வருகிறது. ஆப்பிளின் ஐபோன் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்5 ஆகிய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இருக்கும் ‘Fingerprint’ சென்ஸார், ஸோலோ Q2100 ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபைனான்ஷியல் ஆப்ஸ்! Financial apps in tamil

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? இந்த மாதிரியான ஒரு வேலையைத்தான் இன்றைய பல ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் செய்கின்றன. அவற்றுள் ஒரு சில ஆஃப்ஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.


மை பட்ஜெட் புக்!
Rating   4.6
இந்த ஆப்ஸ் ஒருவரது செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன் மூலம் அவரது நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரி செலவை பதிவு செய்துவந்தாலே போதும்; இந்த மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னமும் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இந்த ஆப்ஸ் தானாகவே திரட்டி, திட்டம் போட்டுத் தந்துவிடும். அதற்கேற்ப உங்கள் செலவுகளை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.


இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை. இதனை ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டின் பணமாக இருந்தாலும், அதற்கேற்ப இந்த பட்ஜெட் புக் சரியான திட்டமிடலைச் செய்யும் திறன்கொண்டதாக இருக்கிறது.

இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிகப் பாதுகாப்புடன் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸ்எல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாங்கலாம். இந்த ஆப்ஸின் விலை 212 ரூபாய் மட்டுமே. புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன. 5-க்கு 4.6 ரிவியூ பெற்றிருக்கும் இந்த ஆப்ஸ் நிதித் திட்டமிடலுக்கான சிறந்த ஆப்ஸாக உள்ளதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். இதன் கடைசி அப்டேட் ஆகஸ்ட் 2014-ல் வெளிவந்துள்ளது.

ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்!
Rating 4.3 

சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இஎம்ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து கடனைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது பல ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போன்களில் வரத் துவங்கிவிட்டன. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் எனும் இந்த ஆப்ஸ் ஒருவரது அனைத்து ஃபைனான்ஷியல் கணக்குகளையும் கணக்கிட்டுச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நமது முதலீடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால் அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது.


இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.3 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் ஃபைனான்ஷியல் கணக்கீடுகளுக்கு உதவும் சிறந்த ஆப்ஸ் என பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.

தினசரி செலவுகளைச் சமாளிக்கும் ‘டெய்லி எக்ஸ்பென்ஸ்’!
Rating    4.5

தினசரி நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலே செலவு செய்கிறவர்களுக்குத் தடுப்புக்கட்டை போடுகிற ஆப்ஸ்தான் இது. இதன்மூலம் ஒருவர் தனது மாத வருமானத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார், அதன் மூலம் மாத வருமானம் எப்படி குறைந்திருக்கிறது, இந்த விகிதத்தில் செலவழித்தால், இந்த மாதம் அவரது வருமானத்தில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும் என்பதைக் கணித்துத் தரும் வகையில் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆப்ஸை பயன்படுத்தி தினசரிக் கணக்குகளுக்கான வார, மாத விவரங்களை கிராபிக்ஸ் படங்களாக பெற முடியும். இதில் நாம் பயன்படுத்தும் நாட்டின் பணத்துக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இதற்கு 5-க்கு 4.5 ரிவியூ பெற்றிருக்கிறது.

தினசரி வரவு - செலவுகளைக் கணக்கிட இது மிகவும் உதவியாக இருப்பதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.


வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!
Rating   4.4

பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.


இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.4 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் வருமான வரித் திட்டமிடலுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆப்ஸாக கருதப்படுகிறது என்கின்றனர் இதைப் பயன்படுத்துகிறவர்கள்.

கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த ஆப்ஸை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.

Saturday, August 23, 2014

Can A Man Really Get Pregnant? Sure, But It Might Kill Him

Oprah Winfrey introduced the so-called "first pregnant man" to viewers of her April 3rd show this past week. Thomas Beatie appeared, six months pregnant, with his wife Nancy and his obstetrician, Dr. Kimberly James (by satellite hookup). You can see the complete show here. But many viewers thought the whole thing was blown out of proportion because Thomas was born with a perfectly normal uterus.
At the end of my first column on the issue, I said I would post another piece discussing the actual science of male pregnancy.
Is it really possible today? The answer, as I abstract from my 1997 book, Remaking Eden, is "almost certainly yes, but . . ."
With the birth of Louise Joy Brown in 1978, Steptoe and Edwards demonstrated the feasibility of fertilizing human eggs in a petri dish and placing embryos back into women where they can gestate to term. To date, several million children have been conceived through in vitro fertilization and born from women.
From the outset, scientists have mused aloud about the possibility of maintaining a pregnancy within the abdomen of a man. Tabloids routinely publish stories of success and in the popular 1995 film Junior, Arnold Schwarzenegger played a scientist who uses hormones and in vitro fertilization to make himself pregnant and ultimately "give birth." Movies and novels that mix real science with science fiction often lead to confusion in the public mind as to what is medically possible and what is not. Usually, scientists and physicians can be counted on to sort it all out.
With male pregnancy, though, something funny happens: Some say it is possible while others say it isn’t. To understand how different professionals can reach such opposite conclusions, we must delve into the thought processes of ‘the scientist’ and ‘the clinician,’ respectively.
The first question is whether a human fetus could develop to term in an environment other than a uterus. Surprisingly, we already know the answer, and it's yes. Every once in a while – in one pregnancy out of 10,000 – the fertilized egg doesn’t make it to the uterus, and ends up instead in the wide open space of the abdomen, also known as the peritoneal cavity. This happens because the ovary is not actually attached to the fallopian tube (or oviduct), as is commonly thought. Instead, after ovulation, the egg must make its way into the nearby opening at the end of the tube in order to begin its journey toward the uterus. Occasionally, when conception occurs very close to the opening in certain women, the newly fertilized egg may actually fall back out of the tube and into the abdomen.
Now you might think that once an egg has fallen into the abdomen, its chances of survival are nil. Surprisingly, at the appropriate time of development, an embryo can implant itself into almost any living tissue that it happens to alight upon. And the abdomen is filled with all sorts of tissues – from the intestines to the kidney, to the liver and the spleen. With successful implantation and sufficient placental formation, the embryo can develop normally into a fetus that can be carried through a full nine months of pregnancy. At the end, of course, it has nowhere to go unless it’s delivered by a modified Cesarian Section. The medical literature is filled with sporadic reports of healthy live-born babies that were carried by mothers pregnant in this unusual way. Here's an amazing picture of a late-state pregnant woman on her belly with a fetus facing up.
abdominal pregnancy

So let’s come back to the third ingredient required for pregnancy: a living womb within which the embryo can implant and attach a placenta.
If a woman’s abdomen can act as womb, a man’s abdomen could do just as well. “Clearly,” the scientist would conclude, “I’ve now proven that human male pregnancy is possible, and it’s possible today!”
“Wait just a minute,” the clinician would implore, “let’s look at all of the reported cases of abdominal pregnancy again, this time with a greater eye to the clinical details. And let’s start out with some of the general statements made by the reporting physicians”:
“Abdominal pregnancy is a rare but life-threatening condition.”
“Morbidity and mortality for both the fetus and the mother are considerable... Once the diagnosis is established, immediate surgical intervention is usually advisable.”
“Care of the patient afflicted with it may present formidable challenges.”

Abdominal pregnancy is considered a “life-threatening condition” because of the placental connection that the embryo must set up between itself and the body within which it lies.
In a normal pregnancy, it is set up with the specialized internal lining of the uterus known as the endometrium. Endometrial cells are recruited along with embryonic cells to form the placenta, but at the time of birth, the entire placenta detaches itself easily from the intact uterine wall to follow the baby through the birth canal. The ability to create a detachable endometrial lining that can be incorporated into the growing placenta is a unique property of the uterus.
Unfortuntately, when an embryo implants into an abdominal tissue, detachment is not so simple. The problem is that the development of the placenta can cause complete intermixing between embryonic and host tissues so that there is no clean boundary between the two. The more extensive the intermixing is, the more problematic it becomes to remove placental tissue. The physician has to cut between the wholely placental tissue, and the intermingled placental-‘maternal’ tissue. Large blood vessels must be severed, and as a consequence, difficult-to-control internal bleeding can take place.
Problems are not just confined to the stage at which a pregnancy is terminated. Long before the final event, a placenta can cause severe damage to an organ that it’s invaded with the possibility of spontaneous hemorrhaging that can quickly result in death.
So is male pregnancy possible? Probably yes.Is male pregnancy safe? No, not at the present time.
But at some point in the future, it’s likely that reproductive biologists will figure out how to direct the growth of the placenta away from vulnerable abdominal organs and onto an easily detachable, but blood-rich, surface for growth. And then, pregnancy will be possible for men who are 100% men, although it's certainly not something that I would want to do.

Dhoni "Captaincy?"

 
2012-ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்துக்கு முன் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் இங்கிலாந்து முன்னணியில் இருந்தது. இப்போது இங்கிலாந்தில் நடந்துவரும் தொடரிலும் அதே நிலைதான். ஒரே வித்தியாசம் 2012 தொடரில் பல இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அதே அபாரத்தை மோசமாக விளையாடுவதில் காட்டி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஊர் ஊராய் சென்றடைந்த தோல்விகளும், கை நழுவிப்போன, ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டங்களும் தோனியின் அணித் தலைமையை கேள்விக்குட்படுத்தின. இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை லார்ட்ஸில் இந்தியா வென்றபோது, அணியின் ஒருங்கிணைப்பிலும், தோனியின் தலைமையிலும் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதா ஒருவார காலத்துக்கு அனைத்து ஊடகங்களும் முழங்கித் தள்ளின.
 
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து யுகங்கள் ஆகிவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை அடுத்த இரண்டு ஆட்டங்களும் ஏற்படுத்தியுள்ளன. லார்ட்ஸ் ஆட்டத்தில் தென்பட்ட உத்வேகமும், தோனியின் அதிரடி அணுகுமுறையும் தெரியாமல் நிகழ்ந்த விபத்தென அடுத்த ஆட்டங்கள் எண்ண வைக்கின்றன.
 
சௌரவ் கங்குலி தலைமை ஏற்பதற்கு முன் வெளிநாட்டுத் தொடர்களை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தியா தோற்றுவிடும். தொடர் போனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனிமனித சாகஸங்கள் நிகழ்த்திக் கொண்டால் போதும் என்ற எண்ணத்திலேயே மொத்த அணியும் இயங்கும். தோனியின் தலைமை மெல்லமெல்ல அந்த நிலைக்கு இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது.இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அரை மணிநேரத்தில் தாமாகவே களமிழந்ததைப் பார்த்த தோனி, அடுத்த ஆட்டங்களில் வந்து நின்றால் போதும் என்று எண்ணியிருப்பார் போலும். மூன்றாவது டெஸ்டில் முதல் நாளில் காலையில் விக்கெட்டுகள் விழாதபோது, முதல் இடைவேளைக்குப் பிறகு டிராவுக்கு விளையாடினால் போதும் என்றே தோனியின் தலைமை அமைந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இங்கிலாந்து வீரரா பார்த்து ஆட்டமிழக்கும் வரை தோனி தன் பௌலர களை தட்டாமாலை சுற்றி ஓவருக்கு ஒருமுறை மனம் போன போக்கில் மாற்றியது ஒருவகையில் அவருடைய சுவாரஸியத்தைக் காட்டியது.
 
நான்காவது ஆட்டத்தில் 200-க்கு குறைவாக ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த இங்கிலாந்தை மேலும் அதிரடியா தாக்காமல் இருந்த தோனி தற்காப்பான அணுகுமுறை கொண்டவராய் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மூன்றாம் நாளைத் தாக்குப்பிடித்தால் அடுத்த நாள் வருணபகவான் கிருபை நிச்சயம் உண்டு என்ற நிலையிலும் அணியின் நலனைவிட மோயின் அலியை அடித்து துவம்சம் செய்வதே முக்கியம் என்று ஆட்டத்தை இழந்தார். இந்த இரண்டுங்கெட்டான் நிலையே வெளிநாட்டில் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்.
 
அணித் தலைமை என்பது பெரும் அழுத்தம் தரக்கூடிய ஒன்று தான். அதனுடன் கூட விக்கெட் கீப்பிங்கும் சீராகச் செய்ய முடியாதபட்சத்தில், மெய்க்குல்லம், சங்ககாரா போல கீப்பிங்கை யாவது வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கலாம் தோனி.  ஸ்டம்புக்குப் பின்னால் நின்றாலொழிய நான் ஒரு மோசமான ஃபீல்டர் என்று கூறிக் கொள்வதில் உண்மை இருக்கலாம். அதனால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை. முதல் ஸ்லிப்புக்கும் கீப்பருக்கும் இடையே செல்லும் பந்தை விக்கெட் கீப்பர்தான் பிடிக்க முயல வேண்டும். இந்தத் தொடரில் அத்தகைய கேடுகளை தோனி வேடிக்கைதான் பார்க்கிறார். 
 
சுலபமான ஸ்டம்பிங்குகளை தவறவிட்டுள்ளார். தன்னுடைய மோசமான ஃபார்மின் பிரதிபலிப்பாகவே ஜடேஜாவை லெக் ஸ்டம்புக்கு வெளியில் போடச் சொல்லுதல், அஸ்வினுக்கு லாங் ஆன் ஃபீல்டரை வைத்து களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற நெகட்டிவ் சூழல்களில் அணியைத் தள்ளுகிறாரோ என்று தோன்றுகிறது.அறையில் தீட்டிய திட்டங்கள் செயலாக்கம் பெறும்போது கேப்டனுக்கு அதிகம் வேலையில்லை. அந்தத் திட்டங்கள் தவறாகும்போது அணித் தலைவரின் பங்கு அவசியமா கிறது. இந்தத் தொடரைப் பொறுத்தமட்டில், அணித் தேர்விலோ, ஃபீல்டிங் களம் அமைப்பிலோ, பௌலிங் மாற்றங்களிலோ தோனியின் சமயோசிதம் சற்றும் வெளிப்படவில்லை. எதிரணியின் தவறுகளுக்குக் காத்திருத்தல் மட்டுமே தன் திட்டம் என்பது போல செயல்பட்டு வருவது கவலைக்குரியது. ஒருநாள் தொடர்களில் கடைசி நிமிட சாகஸங்களும், ஐ.பி.எல்.லில் வெளிநாட்டு வீரர்களின் ஆள்பலமும், உள்ளூரில் முட்டிக்குமேல் எழும்பாத ஆடுகளங்களும் தோனியின் தலைமையை பிரம்மாண்டமாகக் காட்டக்கூடும். உண்மையான உரைகல்லான டெஸ்ட் கிரிக்கெட் டில் இந்தியாவின் எந்த அணித் தலைவரை விடவும் அதிகமாக வெளிநாட்டில் தோற்றவர் என்பது பெரும் கறை. இதை தோனி குறைந்த பட்சம் ஆமோதிக்கவாவது செய்வாரா? அடுத்த கேப்டன் என்று கட்டியம் கூறப்பட்ட விராத் கோலி சுமாராகவாவது இந்தத் தொடரில் ஆடியிருந்தால் இந்நேரம் தோனியின் தலைமையை மாற்ற வேண்டி கூச்சல்கள் வானைப் பிளந்திருக்கும். 2012-ஐ போலவே இப்போதும் சரியான மாற்று இல்லாத ஒரே காரணத்தினால் தோனியின் தலைமை இன்னும் சில காலம் தொடரக்கூடும். தோனியின் இடம் கிட்டத் தட்ட நிரந்தரம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய ‘சித்தம்போக்கு சிவன் போக்கு’ அணுகுமுறை மாற அவரே ஏதாவது செய்தால்தான் உண்டு.
 
லலிதாராம்
 

Cadget - goTenna A breif

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

 

நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி  அமைக்கப் பட்டுள்ளது.ஒரு இண்டிகேட்டர் லைட் மற்றும் ஃப்ளாஷ் மெமரியைக் கொண்டுள்ளது ‘கோடென்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம்-ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் அவர்களது ஸ்மார்ட்போனில் ‘கோடென்னா’வை கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும்,  பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Race Between mobile companies

செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.

டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன?
 
‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
 
 
இந்திய செல்போன் மார்க்கெட்  அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். 

இந்தியர்கள் செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும் இந்திய செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!

 

பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!

அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது. இதில் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்த நிறுவனங்கள் முதலிடத்தை நோக்கிய போட்டியில் எப்போதும் முன்னணியில் ஓடிகொண்டு தான் இருக்கும்.

சைபர்சிம்மன்

எபோலோ என்றால் என்ன?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! 

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே... ஏன்? ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி... எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 'எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், 'நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை 'உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.


இந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.
நகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

எபோலா... அறிகுறிகள் என்ன?

எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.  

எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.  

சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
 

unbreakable baloon...


நெருப்புப் பட்டாலோ, கூர்மையான பொருள்பட்டாலோ உடைந்துவிடக்கூடியது பலூன். நெருப்பில் பட்டாலும் பலூன் உடையாமலோ, உருகாமலோ இருக்கும். எப்படி? செய்து பார்க்கலாம் வாருங்கள்.

என்ன தேவை?

பலூன்கள் - 2
மெழுகுவர்த்தி -1
தீப்பெட்டி - 1
தண்ணீர் - 1/2 கப்


எப்படிச் செய்வது?

ஒரு பலூனை ஊதி நன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

இன்னொரு பலூனில் 1/4 கப் தண்ணீரை ஊற்றி, ஊதி, இருக்கமாகக் கட்டுங்கள்.
மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

நீர் ஊற்றாத பலூனை மெழுகுவர்த்தி ஜுவாலைக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.

இப்போது பலூன் உடைந்துவிடுகிறது.

அடுத்து, தண்ணீர் ஊற்றிய பலூனை எடுத்துக்கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தியின் ஜுவாலையில் காட்டுங்கள்.

என்ன நிகழ்கிறது? பலூன் உடையவில்லை. தொடர்ந்து சிறிது நேரம் நெருப்பில் காட்டினாலும் பலூன் உடையவில்லை. ஏன்?

சாதாரண பலூனை நெருப்பில் காட்டும்போது நேரடியாக வெப்பம் பலூனைத் தாக்குவதால் பலூன் உடைந்துவிடுகிறது. அதே நேரம், தண்ணீர் இருக்கும் பலூனில் வெப்பம் நேரடியாக பலூனைத் தாக்கவில்லை. வெப்பம் தண்ணீருக்குக் கடத்தப்படுகிறது. இதனால் பலூன் உடையவில்லை. இதே போல பால் பாக்கெட்டில் தண்ணீர் விட்டும் செய்து பாருங்கள்!

ஒரு பூமி., ஒரே கடல் ...


கடற்கரைக்குப் போவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள எந்த ஊராக இருந்தாலும் கடற்கரைக்குப் போய் நாம் காண்பது வங்கக் கடலே. உண்மையில் இதன் பெயர் வங்காள விரிகுடா.

இந்தியாவின் மேற்குக் கரையோரமாக உள்ளது அரபுக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்துமாக் கடல் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், வட துருவப் பகுதியில் அமைந்த ஆர்டிக் கடல், தென் துருவப் பகுதியில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டி அமைந்த தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் (சமுத்திரங்கள்) அமைந்துள்ளன. இவற்றைப் பெருங்கடல்கள் என்றும் சொல்வதுண்டு.

இவற்றைத் தவிர வங்கக் கடல், அரபுக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, பால்டிக் கடல், மத்திய தரைக்கடல் என நூற்றுக்கும் மேற்பட்ட கடல்கள் உள்ளன. இவை மேலே கூறப்பட்ட ஐந்து பெருங்கடல்களின் ஓரங்களில் அல்லது நடுவில் நிலப் பகுதியை ஒட்டி அமைந்தவை. தவிர, இவை சமுத்திரங்களை விடவும் சிறியவை.

சொல்லப் போனால் உலகம் முழுமைக்குமாக ஒரே கடல்தான் உள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கப்பலில் கிளம்பினால் பூமியை ஒரு தடவை சுற்றி வந்துவிட முடியும். அதாவது ஐந்து பெருங்கடல்களும் மற்றுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பினால் ஸ்ரீநகர் வரை நம்மால் காரில் செல்ல முடியும். அது மாதிரிதான் இதுவும். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை தொடர்ச்சியாக உள்ள நிலப்பகுதியை நாம் பல்வேறு மாநிலங்களாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களை வைத்துள்ளோம். அந்தந்த மாநிலங்களுக்குள்ளாக பல மாவட்டங்களும் தாலுகாக்களும் உள்ளன. உலகில் கடல்களையும் நாமாக இவ்விதம் பிரித்து தனித்தனிப் பெயர்களை வைத்துள்ளோம்.

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் பூமியானது பெரிய உருண்டையாகத் தெரியும். உலகின் கடல்கள் எல்லாம் சேர்ந்து நீல நிறத்தில் காட்சி தரும். கடல்கள் இடையே எல்லை என்பதே இல்லை என்பது நன்கு புலப்படும்.

உலகின் நிலப் பகுதியில் மேடு பள்ளம் உண்டு. மலைகள் உண்டு. பள்ளத்தாக்கு உண்டு. ஆனால் கடலின் மேற்பரப்பில் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்பது கிடையாது. ஆகவேதான் கடல் மட்டம் என்ற அளவு முறையைப் பயன்படுத்துகிறோம்.

இமயமலையில் அமைந்த எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் என்று சொல்கிறோம். அதாவது அது கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரம் என்று அர்த்தம். நிலப் பகுதியில் உள்ள எல்லா இடங்களும் இவ்விதம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்று கணக்கிடப்பட்டு அவ்விதமே குறிப்பிடப்படுகின்றன.

உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தால் பிளாட்பாரத்தின் கோடியில் பெயர்ப் பலகை இருக்கும். அதில் அந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்பது மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் இதைக் காணலாம்.

நீங்கள் ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டினால் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் ஒரே அளவாக இருக்கும். தண்ணீரின் மேற்பரப்பில் மேடு பள்ளம் இருக்காது. இதை நீர் மட்டம் (Water Level) என்பார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள் கட்டுமானப் பணியின்போது ஒரே அளவாக இருக்கிறதா என்று சோதிக்க நீர் மட்டம் பார்ப்பார்கள். இதற்கென கருவி வைத்திருப்பார்கள். 
நியாயமாகப் பார்த்தால் ஏரிகளில் காணப்படுவது போல கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. கடல்களில் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக பெரிய அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாக கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை வேலை ஏற்றம் என்றும் வேலை இறக்கம் என்றும் கூறுவர். (வேலை என்றால் கடல் என்று பொருள்).

இதன் விளைவாக உலகில் துறைமுகங்களில் ஒரு சமயம், அதாவது வேலையேற்றத்தின்போது கடல் நீர் வெள்ளம் போல உள்ளே பாயும். வேறு சில சமயங்களில் வேலை இறக்கத்தின்போது துறைமுகத்திலிருந்து கடல் நீர் இதேபோல வெளியே பாயும். கடல் நீர் துறைமுகத்துக்குள்ளே பாயும்போது கப்பல்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையும். துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியே பாயும்போது அதை அனுசரித்து கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும்.

வேலை ஏற்றமும் வேலை இறக்கமும் ஏற்படும் நேரங்கள் எல்லா இடங்களிலும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதை முன்கூட்டிக் கணித்து அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்படுகின்றன. துறைமுக நிர்வாகிகளுக்கும் கப்பல் கேப்டன்களுக்கும் இந்தக் கையேடுகள் மிக உதவியாக உள்ளன.கடல் மட்ட மாறுபாடு பற்றிக் குறிப்பிட்டோம். உலகின் கடல்களில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் கடல் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் தாழ்வாகவும் இருக்கத்தான் செய்கிறது. தென் அமெரிக்கக் கண்டமும் வடஅமெரிக்கக் கண்டமும் சேரும் இடத்தில் பனாமா என்ற நாடு உள்ளது. இங்கு மேற்குப் புறத்தில் பசிபிக் கடல் உள்ளது. கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது. இந்த இடத்தில் பசிபிக் கடல் பகுதியின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தைவிட 20 செண்டிமீட்டர் உயரமாக உள்ளது. இதற்கு பசிபிக் பகுதியில் உள்ள நீரோட்டமே காரணம்.உலகில் உள்ள பெருங்கடல்கள் பற்றி ஆரம்பத்தில் கவனித்தோம். இவற்றில் பசிபிக் கடல்தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்தையும் இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.இந்தக் கடல்களின் பரப்பளவு மாறாமல் என்றுமே இந்த அளவில் நீடிக்குமா என்று கேட்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. அட்லாண்டிக் கடலின் பரப்பளவு ஆண்டு தோறும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலின் பரப்பளவு மெல்லக் குறைந்து வருகிறது.

என்.ராமதுரை 

சாப்பிடாதீங்க....


இன்றைய மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோரக் கடைகளை மொய்க்கின்றனர். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.  

தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்றுநோய்களுக்கு வழிவிடும்.

அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை; கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் கலந்து இறைச்சியை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகிற வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.  

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப்போக்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Micromax

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் அதிகம் மொபைல் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, இந்திய நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில், பன்னாட்டளவில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தை இது முந்தியுள்ளது. CounterPoint Research அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மொபைல் போன் விற்பனை ஆண்டுக்கு 2% உயர்ந்து வருகிறது. ஆனால், ஸ்மார்ட் போன் விற்பனை 68% உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், மோட்டாரோலா, நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. இந்த பிரிவில், சாம்சங் 25.3% பங்குடன் முதல் இடத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அடுத்த இரண்டாவது இடத்தில் மைக்ரோமேக்ஸ் 19.1% பங்குடன் உள்ளது. கார்பன், மோட்டாராலோ மற்றும் நோக்கியா அடுத்தடுத்த இடங்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் மோட்டாராலோவின் விற்பனை இங்கு குறிப்பிடத்தக்கது. மோட்டோ வரிசையில் இந்நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரும் அளவில் இருந்தது.
இரண்டாவது காலாண்டில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாதாரண வசதிகள் கொண்ட போன்கள் விற்பனையில், பத்தாவது பெரிய நிறுவனமாக இடம் பெற்றது. இந்த காலத்தில் தான், முதல் முதலாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், விற்பனையில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.

அறிமுகமானது நோக்கியா லூமியா 530

இந்தியாவில், நோக்கியா லூமியா 530 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 7,199. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய பட்ஜெட் விலை விண்டோஸ் போனாக இது கருதப்படுகிறது. இதில் FWVGA டிஸ்பிளே காட்டும் 4 அங்குல திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது.

ஒரு சிம்மிலிருந்து அழைப்புகளை மற்றொன்றுக்கு மாற்றும் வகையில் இரண்டு சிம்களும் இயங்குகின்றன. இதன் தடிமன் 11.7 மிமீ. எடை 129 கிராம். இதன் ராம் மெமரி 512 எம்.பி., இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. டார்க் கிரே, ஆரஞ்ச், வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த போன் வாங்கும்போது, இரண்டு மாதங்களுக்கு இலவசமாக, மாதம் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா பெறும் திட்டம் வழங்கப்படுகிறது. ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளத்தின் மூலம் இந்த போனை வாங்கப் பதிவு செய்திடலாம். இந்த தளம் ரூ. 7,345க்கு இதனை விற்பனை செய்கிறது.

Wednesday, August 13, 2014

Easy way to control / stop obesity...

ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்?
 
சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.

 உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையேனும் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைக் கண்டறிய முடியும்.

 அவ்வப்போது உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். காலை மாலை நேரத்தில் வாக்கிங் செல்லலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம்.

 அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதற்குப் பதில், வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இதனால், உடலில் கூடுதல் கலோரிகள் சேருவது தவிர்க்கப்படும். வெந்நீரில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் துரிதப்படுத்தும் திறன் தேனுக்கு உண்டு. இதனால் கூடுதல் அளவில் கொழுப்பு கரைக்கப்படுவது உறுதி.

 காலை, மதியம், இரவு மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதற்குப் பதில், இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை 8 மணிக்கும், மதிய உணவை 1 மணிக்கு முன்னதாகவும், இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவும் எடுத்துக்கொள்வது அதிக அளவில் கலோரிகளை எரிக்க உதவும்.

 பசி இன்றி எதையும் சாப்பிட வேண்டாம். வயிறு நிரம்பிவிட்ட உணர்வு மூளைக்குப் போய்ச் சேர, சிறிது நேரம் பிடிக்கும். பொறுமையாகச் சாப்பிட வேண்டும். இரண்டு உணவு வேளைக்கு நடுவில், கலோரி நிறைந்த நொறுக்குத் தீனிகளை எடுக்கக் கூடாது.

 நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். தினசரி உணவுப் பட்டியலில் ஐந்து கப் காய்கறி, சர்க்கரை அளவு குறைவான பழம் இருக்க வேண்டும். இதில் ஒரு கப் பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளாக இருக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, வெள்ளரி, காரட் போன்ற காய்கறிகளை சாலட்டாகச் செய்து சாப்பிடலாம்.

 சில உளவியல் காரணங்கள் கூட அதிகம் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டுகிறது. சோகம், துயரம், தனிமை போன்ற சூழ்நிலையில் பலரும் நாடுவது உணவுகளைத்தான். அதிகம் சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும்.


 அனைத்துக்கும் மேல், மிக வேகமாக உடல் எடையைக் குறைக்கும் மருந்து, மாத்திரை, கருவிகளை நம்ப வேண்டாம். இதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியம்.

குழந்தைகளின் உடல் பருமனைத் தவிர்க்க... 

 குழந்தைகளுக்குச் சுண்டல் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்துங்கள்.

 சரியான நேரத்துக்குச் சாப்பிடப் பழக்குங்கள்.

 சாப்பிடும்போது தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.

 கம்ப்யூட்டர் கேம்ஸுக்குப் பதில் சக நண்பர்களுடன் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.

 பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளின் தீமைகளைப் பற்றிச் சொல்லிப் புரியவையுங்கள். இதுபோன்ற உணவை உட்கொள்ளும்போது சற்று அதிக நேரம் விளையாடவிடுங்கள்.

 தேநீர், காபி, குளிர்பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள் அல்லது குறைத்திடுங்கள்.

தூக்கத்தை தொலைக்கலாமா? The Importance of Sleeping.

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை  நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
 
'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.


ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமென்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்னைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தப் பிரச்னையைச் சில வகை தெரப்பி, மெலட்டோனினைச் சுரக்கவைக்கும் மாத்திரைகளைக் கொடுத்துக் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்போனைத் தூர வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.'

நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு... 

இரவு 7 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள், கிளம்பும் முன் காலையில் 'பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிடுவது போல் சாப்பிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பகல் உணவை, நள்ளிரவு 1 மணியளவில் சாப்பிட வேண்டும்.

 வேலை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும்போது, முடிந்தவரை இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து வெளிச்சம் படாதவாறு வேன் போன்றவற்றில் பயணிக்க வேண்டும்.

 வீட்டில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் இரவு உணவை உண்ண வேண்டும். பிறகு கட்டாயம் செல்போனைத் தள்ளிவைத்துவிட்டு, ஜன்னல்களை அடைத்து, வெளிச்சம் புகாத அறையில் உறங்கி மாலை எழுந்திருக்க வேண்டும்.

  வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால், இரவு நேர ஷிஃப்ட் காரணமாக உடலில் ஏற்படும் வியாதிகளின் பிடியில் இருந்து விடுபடலாம்.

ஃப்ளிப்கார்ட் vs அமேஸான்!

அயர்ன்பாக்ஸிலிருந்து ஃப்ரிட்ஜ் வரை எந்தப் பொருளாக இருந்தாலும், அதை வாங்கும்முன் கடை கடையாக ஏறியிறங்கி, ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நம் வழக்கம். ஆனால், இன்றைக்கு இ-காமர்ஸ் வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது. இனிவரும் காலத்திலும் பலரும் இ-காமர்ஸ் மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பிருப்பதால், இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்களிடம் பெரும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட் - அமேஸான் நிறுவனங் களிடையே ஜெயிக்கப் போவது நீயா, நானா என்கிற விஷயத்தில் கடும்போட்டி நடக்கிறது.  
 
ஃப்ளிப்கார்ட் ஒரு பில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடை வதற்குள், அமேஸான் 2 பில்லியன் டாலர் (ரூ.12,000 கோடி) முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாக்கத்துக்காக ஒதுக்கிவிட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்களிடையே ஏன் இந்தப் போட்டி, இந்த நிறுவனங் களில் ஏன் இத்தனை பணத்தை முதலீடு செய்கிறார்கள், இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் ?


 

‘‘இ-காமர்ஸ் நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிற  கேள்விக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் விளக்கங்கள் ஆச்சர்யமானவை.

ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையாளர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடு கிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம்; அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது. 1999 - 2000 ஆண்டுகளில் டாட் காம் என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போயின. ஆனால், இன்று இ-காமர்ஸ் துறையும் அப்படி நொடிந்துபோகும் என்று சொல்லிவிட முடியாது.

காரணம், மக்களின் வேலை, அவர்களால் ஷாப்பிங்குக்கு என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் ஆன்லைன் வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

ரீடெயில் நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 சதவிகித லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன. ஆனால், அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீடெயில் நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் விற்கின்றன.

இதனைதான் நன்றாக கவனிக்க வேண்டும். இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இதுபோன்ற ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. இவர்களது நோக்கமே தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

தற்போது 1 பில்லியனை திரட்டியுள்ள ஃப்ளிப்கார்ட்டுமே இந்தப் பணத்தை அப்படிதான் செலவு செய்யும். 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில், இதுபோன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு, நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை; இதற்கு பயன்படும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால், அதற்கும் அதிகமாக ஆஃபரில் பொருட்களை விற்பதற்கு இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.

அமெரிக்க அமேஸானை இந்திய ஃப்ளிப்கார்ட்டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த சுவாரஸ்யமான கேள்வி. அமேஸானும் ஃப்ளிப்கார்ட்போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான். அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, குறைந்த விலையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன. ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இங்குதான் அவர்களால் அதிக வாடிக்கையாளர்களைத் தொடர முடியும்.

அமேஸான் போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால், ஃப்ளிப்கார்ட்டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை ஃப்ளிப்கார்ட் கையாளும்பட்சத்தில், அமேஸானுக்கு ஃப்ளிப்கார்ட் சவாலாக இருக்கும். உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் இப்போது எஃப்கார்ட் எனும் கொரியர் வசதியைக் கொண்டுள்ளது. இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான். இன்னமும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைதான் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும், அதிகமானோர் நம்பிக்கை இன்மையால் இந்த முறையைத்தான் தொடருகிறார்கள். இது மாறினாலே இ-காமர்ஸ் துறையின் நம்பிக்கை அதிகரித்து, நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கிவிடும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேஸான் மட்டும் இந்தப் போட்டியில் இல்லை. இதுபோன்று பல நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது அமேஸானிலோ ஆர்டர் செய்தால் அவர்களது இருப்பிலிருந்து டெலிவரி செய்வார்கள். ஆனால், ஸ்நாப்டீல் போன்ற சில நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை பொருள் தயாரித்த கம்பெனி களுக்கு அனுப்பிவிடும். அதற்கான கட்டணத்தை மட்டும் பெற்று கொள்ளும். பொருள் தயாரித்த கம்பெனிகளே உங்களுக்்கு பொருளை டெலிவரி செய்யும். அப்படி செய்வதில் ரிஸ்க் குறைவு. அதனால் இதுபோன்ற நிறுவனங்களும் நாளை தன்னை நிலைநிறுத்தி நிதி திரட்டும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்று வரும்போது உள்நாட்டு நிறுவனமா, வெளிநாட்டு நிறுவனமா என்று வாடிக்கையாளர்கள் பார்க்க மாட்டார் கள். குறைந்த விலை, அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ, அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கை யாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில், அமேஸான் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும்! 

James Cameron History...

கப்பல் கவிழ்ந்தால், எல்லோருக்கும் கஷ்டம்தான். ஆனால், ஒரு கப்பலை வெற்றிகரமாக கவிழ்த்ததன் மூலம் தன் திறமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்தான், ஜேம்ஸ் கேமரூன். இவர் எடுத்த டைட்டானிக் படத்துக்கு 11 ஆஸ்கார் விருது கிடைத்தது. இன்றைக்கும் முன்னணி இயக்குநராக இருக்கும் கேமரூன், இந்த நிலையை அடைய எதிர்கொண்ட போராட்டங்கள் பலப்பல.

கனடாவில்் 1954ல் பிறந்த  கேமரூனுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் பள்ளிக்குப் போய் வந்தார். கல்லூரியில் தனக்கு சற்றும் தொடர்பில்லாத இயற்பியல் பாடத்தை எடுத்தார். முதல் செமஸ்டர் முடியும்போதே கல்லூரியை விட்டு வெளியேறினார்.

பல வேலைகளைத் தேடி அலைந்தார். கடைசியாக, லாரி ஓட்டுநராக தன் வாழ்வைத் தொடங்கினார். இடையிடையே கதைகளை எழுதினார். அந்தக் கதைகளை யாரும் சீண்டக்கூட இல்லை.  1977ம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தைப் பார்த்தபின் அவருக்கு சினிமா ஆர்வம் தொற்றிக்கொண்டது. பல சினிமா கம்பெனிகளின் கதவைத் தட்டினார். படிப்பு வராத உனக்கு படப்பிடிப்பு வருமா என்று கேட்டு விரட்டினார்கள்.

இனி பேசி பிரயோஜனம் இல்லை. ஒரு படத்தை எடுத்துக்காட்டுவோம் என்று அறிவியல் புனைகதை ஒன்றை குறும்படமாக எடுத்தார். இதன்மூலம் வந்த வருமானத்தில் கேமரா, லென்ஸ் போன்றவற்றை விலைக்கு வாங்கி, தன் சினிமா எடுக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

1978ல் எடுத்த முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தன் பெயரை பதித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சில படவாய்ப்புகள் கிடைக்க, கேமரூனின் வாழ்க்கையில் வெற்றிக்காற்று வீச ஆரம்பித்தது. ஏலியன், டெர்மினேட்டர் என வரிசையாக ஒவ்வொரு படமும் வசூல் சாதனையில் முத்திரைப் பதிக்க, 1997ல் இவர் எடுத்த டைட்டானிக் உச்சகட்ட புகழை கொண்டுவந்து கொட்டியது.

அதன்்பின், அவதார் என்கிற படத்தை மோன்பிக்சர்ஸ் என்கிற அதிநவீன தொழில்நுட்பத்துடன் எடுத்து, அகில உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தார். இன்றும் புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும் கேமரூன், தோல்வியில் தவிக்கும் அனைவருக்கும் (டைட்)'டானிக்’தான்!

Monday, August 11, 2014

அதிர்ச்சி தரத்தக்க மிகப்பெரிய அபாயம்

 அதிர்ச்சி தரத்தக்க மிகப்பெரிய அபாயம் நம்மை எதிர்நோக்கி காத்திருக் கிறது. பெய்கிற மழைக்கும், நிலத்தடி நீருக்கும், குளத்து, ஆற்று நீருக்கும் தொகை நிர்ணயிக்க-அதையும் தனியாருக்கு தாரை வார்க்க-துடிக்கிறது இந்திய நடுவண் அரசு.
 இந்திய அரசின் நடுவண் நீர்வள அமைச்சகம் “தேசிய நீர்க்கொள்கை வரைவு - 2012'' என்ற வரைவை பிப்ரவரியில் தனது இணையத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிட்டது. இவ்வரைவின் மீது பொதுமக்கள் கருத்துக்கேட்டு சில நாளேடுகளில் அறிவிப்பும் வெளியிடப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய இன மொழிகளில் கூட இவ்வரைவு வெளியிடப் படவில்லை. அவசர அவசரமாக செயல் படுத்திடத் துடிக்கும் தில்லி அரசின் கபட நோக்கைப் புரிந்து கொண்டு, தமிழில் இக்கொள்கை வரைவை பூங்குழலி அவர்கள் மொழி பெயர்ப்பில், கா.தமிழ்வேங்கை தொகுத்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
 "காசுள்ளவர்க்கே தண்ணீர்' எனக் கூறும் இவ்வரைவு அறிக்கையின் கோர முகம் இதன் மூலம் புட்டு புட்டு வைக்கப் பட்டுள்ளது.
 பின்னிணைப்பாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், புதிய தலைமுறை ஆ.பழனியப்பன் கட்டுரைகளும் மற்றும் தினமணி தலையங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சில பகுதிகள்...
 ...தமிழ்நாட்டிற்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே ஆற்றுநீர் பங்கீட்டு இறுதி அதிகாரம் இந்திய அரசிடம் இருக்கும் போதே தமிழகத்திற்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரிச் சிக்கலிலும் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கை கழுவிவிட்டு தமிழின எதிரிகளோடு அரசு கைகோர்த்து நிற்பதைப் பார்க்கிறோம். இந்நிலையில் ஆற்றுநீர் முழுவதும் இந்திய அரசின் உடமையானால் தமிழகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை. நீர் முற்றுகையில் முழுவதும் சிக்கி வறண்டுவிட வேண்டியது தான். எந்த இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை நிலையிலிருந்து அரசுடமை என மாற்றப்பட்டால் அந்த வளம் தனியார் உடமையாவதற்கு வழி திறந்து விடப் படுகிறது என்று பொருள்.
 பாவம், விவசாயி இனி தண்ணீர் வாங்க பணம் இல்லாவிட்டால் அவரது நிலம் தரிசாக கிடக்கும். இதன் காரணமாக விவசாயம் அருகிப்போய் நம் நாட்டில் உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்து விடும் ஆபத்துக்கான அறிகுறிகளை வரைவு தேசிய நீர் கொள்கை உருவாக்கிவிடும்.
 தண்ணீரை தனியாரிடம் கொடுத் ததின் விளைவாக பலநாடுகள் மிக மோசமான அனுபவங்களைச் சந்தித்தது சமீபத்திய வரலாறு. பொலிவியாவின் 3-வது பெரிய நகரமான கொச்சம்பாவின் நகராட்சி நிர்வாகம் நீர் விநியோகத்தை பெச்டெல் எனும் அமெரிக்க கம்பெனியிடம் ஒப்படைத்தது. உடனே தண்ணீர் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. கொச்சம்பாவில் உள்ள தண்ணீர் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று அறிவித்தது அந்த நிறுவனம். அங்கு அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை உடைக்க ஆரம்பித்தனர், பெச்டெல் கம்பெனி ஆட்கள். மக்கள் வெகுண்டெழுந்தனர். பெரும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்க, ராணுவத்தை ஏவியது அரசு. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இறுதியில் மக்கள் போராட்டமே வென்றது. 2002-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது பெச்டெல் நிறுவனம்.
 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மகாநதியில் கிளை ஆறான ஷிவ்நாத் என்கிற ஜீவநதி பாய்கிறது. அதை ரேடியஸ் வாட்டர் லிமிடெட் என்கிற அமெரிக்க கம்பெனிக்கு 1998-ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது ம.பி.அரசு. அவர்கள் ஒப்பந்த விதிகளை மீறி ஏராளமான தண்ணீரை உறிஞ்சினர். அத்துடன் நிற்காமல் ஆற்றையொட்டிய ஊர்களில் வீடு வீடாகச் சென்று "உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீர் எங்களுக்குச் சொந்தம்' என்று கூறினர். ஆற்று நீர் பூமிக்குள் கசிந்து கிணற்றுக்குள் வருகிறது என்பது அவர்களின் வாதம். எனவே "பணம் கட்ட வேண்டும்' என்று கூறினர். கிணறுகளில் மீட்டர் பொருத்தினர். அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை மக்கள் நடத்தினர்....
 விழிப்புறச் செய்ய வந்திருக்கும் இந்நூலை பல படிகள் அச்சிட்டு எங்கும் வழங்கி “மக்கள் விரோத தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012''ஐ அம்பலப்படுத்த வேண்டியது நம் அனைவரின் முக்கிய முதல் கடமையும் ஆகும்.