Saturday, August 23, 2014

Micromax

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் அதிகம் மொபைல் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, இந்திய நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில், பன்னாட்டளவில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தை இது முந்தியுள்ளது. CounterPoint Research அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மொபைல் போன் விற்பனை ஆண்டுக்கு 2% உயர்ந்து வருகிறது. ஆனால், ஸ்மார்ட் போன் விற்பனை 68% உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், மோட்டாரோலா, நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. இந்த பிரிவில், சாம்சங் 25.3% பங்குடன் முதல் இடத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அடுத்த இரண்டாவது இடத்தில் மைக்ரோமேக்ஸ் 19.1% பங்குடன் உள்ளது. கார்பன், மோட்டாராலோ மற்றும் நோக்கியா அடுத்தடுத்த இடங்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் மோட்டாராலோவின் விற்பனை இங்கு குறிப்பிடத்தக்கது. மோட்டோ வரிசையில் இந்நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரும் அளவில் இருந்தது.
இரண்டாவது காலாண்டில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாதாரண வசதிகள் கொண்ட போன்கள் விற்பனையில், பத்தாவது பெரிய நிறுவனமாக இடம் பெற்றது. இந்த காலத்தில் தான், முதல் முதலாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், விற்பனையில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment