மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது நவீன கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டில் இயங்கும் இந்த போன் தோற்றத்தில் கேலக்ஸி எஸ்4 போலவே இருக்கும். 5.1 இன் சூப்பர் அமோலெட் திரை கொண்டது. 2.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் தண்ணீர் எதிர்ப்புதிறன் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்புக்கான இடவசதி கொண்டதாக இருக்கும்.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த வேர்ல்டு மொபைல் காங்கிரஸில் இந்த கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. போட்டிகள் அதிகம் இருப்பதால் தனது எஸ்4 மாடலுக்கு மாற்றாக விரைவில் புதிய மாடலைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னதாகவே வெளியிட்டிருக்கிறது. இதன் டிஸ்பிளே 5.1 இன்ச் அளவுகொண்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் இதன் விலை 45,500 ரூபாய்.
சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் கேலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே இரண்டு கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம்4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன. சாம்சங் எஸ்4-ன் சாதனையைத் தற்போது வெளியாகியுள்ள எஸ்5 ஸ்மார்ட் போன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment