Sunday, July 28, 2013

சிகரெட் தீர்வு என்ன ?

புதுடில்லி: உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புகைப்பிடிப்போர்களின் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.
10 மில்லி கிராம் தார்
உலக அளவில் கட் ஆப் ரேஞ்ச் படி ஒரு சிகரெட்டில் 10 மில்லி கிராம் தார் அளவு இருக்கலாம். ஆனால் இந்திய சிகரெட்டுகளில் 15 மி. கிராம் தார் இருப்பதாக கூறுகின்றனர். அது போல் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை விட நிகோடின் அதிகம் உள்ளது. அதாவது ஒரு சிகரெட்டில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவு ஒரு மில்லிகிராம். இதனை விட அதிகம் அளவீடு இருப்பதாகவும் தெரிகிறது. இது மத்திய புகையிலை சட்டத்தின் மீறல் ஆகும். 
சென்னை, மும்பையில் ஆய்வு மையம்: இது போன்ற சிகரெட் அளவீடுகளை கண்காணிக்க சண்டிகாரில் ஒரு தலைமை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இது போல் மண்டல அளவில் சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, நகரங்களிலும் அமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணியில் மத்திய சுகாதார அதிகாரிகள் சண்டிகார் செல்லவுள்ளனர். இங்கு சில ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வகத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு அமெரிக்காவின் ஜாவ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி மூலம் சில பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் நகரங்களில் காற்றில் நிகோடின் அளவு குறித்த மானிட்டர்களும் நிறுவப்படவிருக்கிறது.


மேலும் சிகரெட்டுகள் தயாரிப்பு விவரங்கள் அதில் உள்ள கன்டெய்ன்ஸ் தகவல்கள் துல்லியமாக சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறவேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மற்றும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்படவிருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்று செயல்படும் நேரத்தில் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் நோய் அளவை குறைக்க முடியும் என மருத்துவ ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

30 லட்சம் பேருக்கு கேன்சர் 
சமீபத்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின் படி நாட்டில் 29 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் .


Saturday, July 27, 2013

ஜெயலலிதா ஃபார்முலா... ஜெயிக்கும் ஃபார் முலா...

ஜெயலலிதா ஃபார்முலாவாக ஜெயிக்கும் ஃபார் முலாவா?

தனித்த பயணத்துக்குத் தயாராகி விட்டார் ஜெயலலிதா!

 
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி யிடுவது என்ற தனது முடிவில்  உறுதியாக நிலைகொண்டுவிட்டார் ஜெயலலிதா!

''நாம் யாரையும் சார்ந்திருக்க முடியாது. வேறு எத்தனையோ கட்சிகள் அப்படி இருக் கலாம். அவர்கள் தேசியக் கட்சியைச்சார்ந்து இருக்கலாம். சில பெண்கள் இளம் வயதில் அப்பாவைச் சார்ந்திருப்பார்கள். வளர்ந்ததும்  கணவனைச் சார்ந்திருப்பார்கள். வயதானதும் பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். என்னைப் போன்ற பெண்களும் உள்ளனர். நான் யாரையும் சார்ந்து இல்லை. நல்லது, கெட்டதை நானே முடிவு செய்து கொள்கிறேன்.  

தேசிய அரசியலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகள் உள்ளன. சில கட்சி கள்காங்கிரஸோடும் சில கட்சிகள் பாரதிய ஜனதாவோடும் கூட்டு சேர்கின்றன. ஆனால், அ.தி.மு.க. தனித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நம் எதிர்காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நாம், வரும் தேர் தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸைச் சார்ந் திருக்க முடியாது. தமிழகத்தின் உரிமையைப் பெற 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தி யில் அதிகாரத்தை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்'' - இப்படி அ.தி.மு.க. பொதுக் குழுவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா பேசினார். இப்படி தைரியமாகச் சொல்லி விட்டாரே தவிர, அறிவிப்புக்குப்பிறகுதான் அவருக்குத் தயக்கம் அதிகம் ஏற்பட்டது.


ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைப் பார்த்து அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவர் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் அவருடன் காங்கிரஸ் நெருக்கமாக இருந்தது. கருணாநிதியை விஜய காந்தும் நெருங்கிக்கொண்டிருந்தார். தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய மூன்றும் இணைந் தால், அது பலமான கூட்டணியாக அமையும், தனித்து நிற்கும் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் என்பது அவரது நினைப்பாக இருந்தது. இந்த நிலையில், 'நாம் தப்புக்கணக்கு போட்டு விட் டோமோ’ என்று கூட ஜெயலலிதா நினைத்தார். அதனால்தான் மதுவிலக்கு நடைப்பயணத்தில்  இருந்த வைகோவை, வலிய வழி மறித்து எதுவுமே தெரியாதவராக, 'எதுக்காக நடைப் பயணம்?’ என்று கேட்டார். 'மீண்டும் ஜெயலலிதா கூட்டணி அமைக்கலாம்’  என்று ஒருபுறம் பேச்சு கிளம்பிய நிலையில், மறுபுறம்  கருணாநிதியும் பலவீனம் அடைய ஆரம்பித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னை, தி.மு.க-வுக் கும் காங்கிரஸுக்குமான ஐக்கியத்தைக் குலைத்தது. நேரம் கெட்ட நேரத்தில் காங்கிர ஸைக் கழற்றிவிட்டு, டெசோவுக்கு உயிரூட்ட வேண்டிய நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட் டார். விஜயகாந்துடன் மட்டும் அணி சேர லாம் என்று கருணாநிதி நினைத்திருந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் விஜயகாந்த் தனது மச்சானை எம்.பி. ஆக்கத் துடிக்க, கருணாநிதி தனது மகளை எம்.பி. ஆக்க நினைக்க... அங்கும் நேரடியாக மோதும் சூழல். இதனை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டது. 'நாங்கள் கூட்டணி சேரவில்லை’ என்று இப்போதைக்கு கருணாநிதி சமாளித்தாலும், அவருக்கு வேறு வழியே இல்லை, காங்கிரஸு டன் சேர்வதைத் தவிர!இப்படிப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது வேட்பாளரை வெற்றி பெறவைக்க வாய்ப்பு இல்லாமல் போனதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தைக் கொடுத்து,  அவர் களது நன்மதிப்பை ஜெயலலிதா வாங்கிக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததைவைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களை தனது அணியில் ஜெயலலிதா சேர்த்துக் கொள்வார் என்று சிலர் நினைக்கிறார்கள்.''இல்லை. அவர்களோடு நட்பு பாராட்ட மட்டுமே ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் கூட்டணி வைக்க மாட்டார். தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு கம்யூனிஸ்ட்கள் பயன்படுவார்கள் என்பதற் காகத்தான் ஒரு ராஜ்யசபாவை டி.ராஜாவுக்கு விட்டுக்கொடுத்தார்'' என்று சொல்லப்படுகிறது. வைகோவை நடைப் பயணத்தில் வலியப்போய் பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக வைகோ விடுத்த ஓர் அறிக்கைக்கு வேளாண் துறை அமைச்சர் தாமோதரர் விட்ட அறிக்கையில், வைகோவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பொதுவாக அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அறிக்கைவிடும் அதிகாரம் எல்லாம் வழங்கப்படவில்லை. அதுவும் இன்னொரு கட்சித் தலைவருக்கு எதிராக, அதுவும் கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் வைகோவுக்கு எதிராக தாமோதரன் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றால், ஜெயலலிதா அதன் மூலமாக ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று அர்த்தம். மேலும், அவரது அணியுடன் கைகோத்து நின்ற மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் கனிமொழியை ஆதரிக்கும் வாய்ப்பாக தி.மு.க. பக்கம் தாவியது பற்றிய எந்த வருத்தமும் ஜெயலலிதாவின்செயல்பாட்டில் இல்லை. அவரே வழியனுப்பியதுபோல நடந்துகொண்டார். மொத்தத்தில், 'யாரும் இல்லாமல், தனித்துப் போட்டி!’ என்ற இறுதி முடிவை அவர் எடுத்துவிட்டுத்தான் இப்படிச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா இரண்டு முடிவுகளை எடுத்து வைத்திருந்தார். ஒன்று தேசிய அளவில் அமையும் பாரதிய ஜனதா அணியில் சேர்வது அல்லது கம்யூனிஸ்ட்கள் அமைக்கும் மாற்று அணியில் பங்கேற்பது. பாரதிய ஜனதா அணியில் சேர்ந்தால், தமிழகத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிவரும். மேலும், அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் மிகவும் சொற்பம். கம்யூனிஸ்ட்கள் நம்மோடு சேர்ந்தால் கூடுதல் பிரசார பலம் கிடைக்குமே தவிர, மற்றபடி அவர்கள்தான் இரண்டு தொகுதிகளில் நம்மால் ஜெயிப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் எண் ணம். 'தனித்து நிற்பதன் மூலமாக அ.தி.முக-வுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதையாவது நாம் தெரிந்துகொள்ளலாமே?’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடந்த இரண்டு வாரங்களாக அவருடைய எண்ணவோட்டம் இப்படித்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.அதனால்தான் கொடநாடு சென்ற ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டார். 40 தொகுதிகளுக்குமான அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதை இறுதிப்படுத்தத் தொடங்கி விட்டார். இந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர் மீது எந்தப் புகாரும் எழக் கூடாது என்று நினைக்கிறார். மாவட்டச் செய லாளர்கள் மீது இதுவரை வந்த புகார்களை அமைச்சர் கே.பி. முனுசாமியும், அமைச்சர்கள் மீதான புகார்களை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பற்றிய புகார்களை அமைச்சர் வைத்தியலிங்கமும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. இந்த மூவரையும் கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம். இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர்களில் மிகச் சரி யான ஆட்களை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அந்தப் பட்டியலை வைத்து வேட்பாளரை ஜெயலலிதா முடிவுசெய்வாராம். ஜெயலலிதா தயாரிக்கும் வேட்பாளர்கள் பற்றி அதன் பிறகு உளவுத் துறையும் விசாரிக்குமாம். இத்தனை அக்னிப் பரீட்சைகளையும் தாண்டி வருபவரைத்தான் தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்!  

'கருணாநிதி கஜானாவை காலியாக வைத்துச் சென்றார். அந்த நிலைமையிலேயே நம்மால் இவ்வளவு சாதனை செய்ய முடிந்துள்ளது. இந்தச் சாதனைகளைப் பிரசாரம் செய்ய வேண்டும். நல்ல வேட்பாளரை நிறுத்த வேண்டும். மற்றபடி வேறு யார் தயவும் தேவை இல்லை’ என்பதை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஃபார்முலாவாக ஜெயலலிதா நம்புகிறார். ஆனால், இது ஜெயிக்கும் ஃபார் முலாவா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

மேலும், அதிகப்படியான எம்.பி-க் கள் பெற வேண்டும் என்பதைவிட, பிரதமர்  ஆசையும் கடைக்கோடியில் இருப்பதால், கயிற்றின் மீது நடக்கும் சாகசத்துக்குத் தயாராகிவிட்டார் ஜெயலலிதா!  

ப.திருமாவேலன்

Nokia Lumia 625 with 4.7-inch display officially unveiled

Nokia Lumia 625 with 4.7-inch display officially unveiled

Nokia has announced the launch of Lumia 625 that comes with a 4.7-inch LCD screen, the biggest seen on a Nokia phone yet, and includes 4G connectivity.
The rest of the specifications are in line with what was leaked earlier, including a 1.2GHz dual-core processor alongside 512MB RAM and 8GB internal storage, that can be expanded by another 64GB via microSD card. It comes with a 5-megapixel rear camera and a VGA front-facing shooter. The 4.7-inch screen sports a disappointing 480x800 pixel resolution.
Nokia Lumia 625 runs on Windows Phone 8 with Nokia Amber update and is powered by a 2,000mAh battery.
The Nokia Lumia 625 also provides some software features found in the recently announced flagshipNokia Lumia 1020. These include a range of integrated camera applications like Nokia Smart Camera, offering handy features like removing unwanted objects from pictures, and Nokia Cinemagraph, which turns photos into living memories with added movement.
"With our largest smartphone screen to date, the Nokia Lumia 625 is a perfect example of how Nokia is delivering leading smartphone innovation and experiences at every price point," said Jo Harlow, executive vice president, Nokia Smart Devices.
The Nokia Lumia 625 will be available in a range of colours including orange, yellow, bright green, white and black with an array of changeable shells. With an estimated retail price of 220 Euros before taxes and subsidies, the Nokia Lumia 625 is planned to begin selling in China, Europe, Asia Pacific, India, Middle East, Africa and Latin America in Q3 2013.
Nokia Lumia 625 key specifications
  • 4.7-inch 480x800 resolution
  • 1.2GHz dual-core processor
  • 512MB RAM
  • 8GB internal storage, expandable by up to 64GB
  • 5-megapixel rear camera
  • VGA front camera
  • 2,000mAh battery
  • Windows Phone 8 with Amber update

என்ன செய்தார் எம்.பி.? - விருதுநகர்

என்ன செய்தார் எம்.பி.? - விருதுநகர்

''வைகோவைப் போல் எனக்குப் பேசத் தெரியாது. ஆனால், செயல்படத் தெரியும். மக்கள் பணிகளில் அக்கறை காட்டு​வேன்; செயல்​படுவேன்'' - தேர்தல் பிரசாரத்தின்​போது காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்க தாகூர் பேசியது இது. விருதுநகர் தொகுதியின் எம்.பி-யான பின்னர், சொன்னதுபோல செயல்பட்டாரா?
 
இவரது தாத்தா மாணிக்க அம்பலம், பாரம்பரிய காங்கிரஸ்காரர். திருகோஷ்​டியூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கவிஞர் கண்ணதாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தேசியகீதம் பாடிய ரவீந்திரநாத் தாகூர் மீது கொண்ட பற்று காரணமாக, தாத்தா பெயருடன் தாகூரைச் சேர்ந்து இவருக்கு மாணிக்க தாகூர் என்று பெயரிட்டனர். இப்போது மாணிக்கம் தாகூர் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
 
மாணவர் காங்கிரஸ் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவருக்கு, ராகுல் காந்தி​யுடனும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு​தான் விருதுநகரில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தது. தாத்தாவோ கண்ணதாசனை வீழ்த்த... பேரனோ வைகோவை வென்று நாடாளு​மன்றத்துக்குள் நுழைந்தார்.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு நெருக்க​மான மாணிக்கம் தாகூர், அதனைப் பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு செய்துகொடுத்தது என்ன?


ஒரு மாவட்ட தலைநகருக்கான எந்தவித அறிகுறி​யும் இல்லாமல், விருதுபட்டியாகவே காட்சியளிக்கிறது விருதுநகர். மழை பெய்தால் சகதி, வெயில் அடித்தால் புழுதி, ரோடெல்லாம் குழிகள், மாதத்துக்கு இரண்டு முறைதான் குடிநீர், குறுகலான சந்துகள் என எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிய அளவில் முயற்சிகளை மாணிக்கம் தாகூர் எடுத்ததாகத் தெரியவில்லை.

ராமமூர்த்தி சாலை ரயில்வே கேட், மக்களுக்குத் தீராத தலைவலி. அந்த ரயில்வே கேட்டை கடந்துதான் அரசு மருத்துவமனை, போஸ்ட் ஆபீஸ் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். பரபரப்​பான காலை நேரத்தில் இந்த ரயில்வே கேட் மூடப்​படுவதால், அந்த ஏரியாவில் தினமும் கடும் போக்கு​வரத்து நெரிசல். அங்கு மேம்பாலம் அமைக்க வேண்​டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ''அந்தப் பாலம் அமைந்தால் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தியேட்டர் மற்றும் வீடு பாதிக்கப்படும். தனது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த​வர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்பதாலேயே, மேம்​பாலத்தைக் கொண்டுவருவதில் எம்.பி. ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக சுரங்கப் பாதை அமைக்கலாம் என்று சொல்கிறார். அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே  மக்களின் அவஸ்தை தொடர்கிறது''.

சிவகாசி டு ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்திலும், சிவகாசி டு விருதுநகர் சாலையில் திருத்தங்கல்லிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆய்வுப் பணிகள் நடந்ததே ஒழிய பாலம் வந்தபாடில்லை. விருதுநகர் - மானாமதுரை இடையே 67 கிலோ தூரத்துக்கு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில்பாதை ஆக்கும் பணிகள் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துமுடிந்து, ரயில் விடப்பட்டதை அவரது சாதனையாக சொல்கின்றனர். 

சிவகாசி, முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் இறந்தபோது, அந்த விஷயத்தை மத்திய அரசு வரை கொண்டுசென்று தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி பெற்றுதந்தார். இது தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் பட்டாசு ஆலை அதிபர்கள் மாணிக்கம் தாகூர் மீது கடுப்பில்தான் இருக்கின்றனர். ''மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்தி விதிமுறைகளை மீறிய ஆலைகளை சீல் வைக்கின்றனர். மாணிக்கம் தாகூர் தலையிட்டு அதி​காரிகளிடம் பேசினால், இந்தக் கெடுபிடிகள் குறையும் என்று நினைக்கின்றனர். ரெய்டு விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று எம்.பி. உறுதியாக இருப்பதால், இந்தக் கடுப்பு'' என்கிறார்கள் சிவகாசி வட்டாரத்தில். கோடிகள் புழங்கும் சிவகாசியும் உள்கட்டமைப்பு வசதிகளில் மோசமாகவே இருக்கிறது. தரமான சாலைகள், மேம்பாலங்கள், பாதாளச் சாக்கடைத் திட்டம் எதுவும் சிவகாசியில் இல்லை.
தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் கணிசமான அளவு இருக்கின்றனர். அருப்புக்​கோட்டைக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அழைத்துவந்து கைத்தறி பெருங்குழுமம் ஆரம்பித்துவைத்தார். அதோடு சரி... அது செயல்படவே இல்லை.



 மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்​டத்தை ஆய்வுசெய்வதையே தனது முழு நேரப் பணியாக வைத்திருக்கிறார். கிராமங்கள் தோறும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பணிகள் நடக்கும் இடத்துக்கு விசிட் அடிக்கிறார். இது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்தின் பெயரை சரியாக சொல்லும் நபர்​களுக்கு 100 ரூபாய் அன்பளிப்பு தருகிறார். மதிய உணவுக்கு ஏற்பாடுசெய்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். இதனால் கிராம மக்கள் மத்தியில் இவருக்கு 100 ரூபாய் எம்.பி. என்றே பெயர்.

திருமங்கலம் பகுதியில் அவருக்கு எதிராக நிறையவே குற்றச்சாட்டு குரல்கள் கேட்கின்றன. ''திருமங்கலம் டு மதுரை விமான நிலையம் இடையே ரயில்வே கேட் குறுக்கிடுகிறது. இங்கே மேம்பாலம் கட்டித்தருகிறேன் என்று சொன்​னவர், கண்டுகொள்ளவில்லை. திருமங்கலத்தில் இருந்து சொற்ப கிலோ மீட்டர் தூரத்திலேயே டோல்கேட் இருக்கிறது. அங்கு உள்ளூர் வாகனங்களுக்கும் பணம் வசூலித்ததால், பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னையை மாணிக்கம் தாகூர் கண்டுகொள்ளவில்லை. பழைய எம்.பி-யான சித்தன்தான் அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு போராடி, உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டண விலக்குப் பெற்றுத்​தந்தார்'' என்கின்றனர்.


திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் நிற்பது இல்லை. போஸ்ட் ஆபீஸுக்கு இடம் ஒதுக்கியும், கட்டடம் இல்லை. சாலைகள் அகலப்படுத்தப்பட்டபோது நிழற்குடைகள் நீக்கப்பட்டன. அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிழற்குடைகளைக் கட்டித் தந்திருக்கலாம். அதைச் செய்யவில்லைடெல்லியில் இருக்கும் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனையை தொகுதிக்கு கொண்டு வருவேன் என்பது அவர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதி. அதற்காக திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பின்னர் டெண்டர் நிலையிலேயே கைவிடப்பட்டது.

மாணிக்கம் தாகூர் செய்த சாதனைகள் என்ன?

''தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காகப் பொது பயன்​பாட்டு மையத்தை தொகுதியில் ஐந்து இடங்களில் திறந்துவைத்திருக்கிறார். சீனப் பட்டாசு இறக்குமதிக்குத் தடை பெற்றுத் தந்தார். தொகுதியில் சாலைகளை மேம்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 200 கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளார். ஏழை வியாபாரிகள் தொழில் நிமித்தம் ரயிலில் பயணம்செய்ய சலுகைக் கட்டண அட்டை 4,000 நபர்களுக்குப் பெற்றுத்தந்தார். நகரங்களில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மத்திய அரசின் திட்டம் மூலம் 50 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தந்தார்.

மதுரை டு ராமேஸ்வரம் நான்கு வழி சாலைத் திட்டத்தின் மூலம் விரகனூர், புளியகுளம், சிலைமான் பகுதி மக்களின் வீடு பாதிக்கும் நிலை இருந்தது. எம்.பி-யின் முயற்சியால் சிலைமானுக்குப் புறவழிச் சாலை ஏற்படுத்தி திட்டத்தை மாற்றியதன் மூலம் 600 குடும்பங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது. விருதுநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கடன் பெற்றுதந்துள்ளார்.

இவர் மீண்டும் விருதுநகரில் போட்டியிட்டால், காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலைதான் அவரது வெற்றிக்குத் தடையாக இருக்கும்!
 

நெல்சன் மண்டேலா !

அந்தச் சிறுவனை எல்லாரும் 'ரோலிலாலா’ என்று அழைத்தார்கள். கறுப்பின மொழியான க்சோஸா மொழியில் ரோலிலாலா என்றால், நிறையத் தொல்லைகொடுப்பவன் என்று அர்த்தம்.ஆப்பிரிக்க மோராரோ இனக் குழுவின் கறுப்பின மண்டேலா பிரிவில் பிறந்த அவன், நான்கு வயதில் ஆடு, மாடுகள் மேய்த்தபடி வெள்ளை எஜமானர்களுக்கு பல தொல்லைகளைக்கொடுத்தான். வெள்ளையர் பெயர்களைத் தெரிந்துகொண்டு, தான் வளர்த்த நாய்களுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டி, ஊரையே மிரளவைத்தான்.அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்க கறுப்பினக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போக முடியாது. எந்த சுதந்திரமும் கிடையாது. அந்தச் சிறுவனின் அம்மா பெயர் நோசாக்கேனி ஃபானி. அவர், சர்ச் ஒன்றில் வேலைபார்த்தார். மிஸ் மிடின்கேன் என்பவர் அந்த சர்ச்சில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். அம்மா உடன் சென்ற அந்தச் சிறுவன், அந்தப் பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்காரப் பையன்கள் படிப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து, தானும் நன்றாக எழுதவும் சத்தமாகப் படிக்கவும் கற்றான். இதைப் பார்த்துப் பெரிதும் ஆச்சர்யப்பட்ட மிடின்கேன், அந்தச் சிறுவனுக்கு 'நெல்சன்’ என்று பெயர் சூட்டினார். அந்தப் பகுதியில் கறுப்பினக் குழந்தைகளில் முதலில் பெயர் சூட்டப்பட்டதே நெல்சனுக்குதான். பே... மூ... என்றுதான் அதுவரை கறுப்புக் குழந்தைகள் அழைக்கப்பட்டனர். நெல்சன் தனது நண்பர்களுக்குத் தானே பெயர் வைக்கத் தொடங்கினான்.நெல்சனின் தந்தை பெயர் கால்டா. அவர், இனக் குழுவின் பிரதிநிதியாக இருந்தார். வெள்ளை நீதிபதி ஒருவருக்கும் அவருக்கும் ஒரு பிரச்னையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்சன் நடந்த சம்பவங்களை உற்றுநோக்கினான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்ததால், நீதிபதி தனது தந்தைக்கு நேர்மையற்ற தீர்ப்புக் கூறியதை அறிந்துகொண்டான். ஏதேதோ புத்தகங்களை மேற்கோள்காட்டி தனது தந்தையை அவர் குழப்பியதையும் கண்டான். அதன்பின், புத்தகங்களை எப்படியோ கண்டடைந்து வாசிப்பதை வாழ்வாக்கிக்கொள்ளத் தீர்மானித்தான் அந்த ஒன்பது வயதுப் போராளி.விரைவிலேயே அவன் தனது தந்தையை இழந்தான். அந்த நிகழ்ச்சி, வெள்ளையர் சர்வாதிகாரத்துக்கு எதிரான போருக்கான விதையை நெல்சன் உள்ளத்தில் விதைத்தது. ஆங்கிலம், க்சோஸா மொழிகளைக் கற்றான்.ஆப்பிரிக்க வரலாற்றை விரும்பிப் படித்தான். உலகெங்கிலும் நடந்த சுதந்திரப் போராட்ட வரலாறுகளை வாசித்தான். உள்ளூர் நண்பர்களை ஒன்றுகூட்டி, எழுதப் படிக்கக் கற்பித்தான். அப்போது அவனுக்கு 10. ஓரிரு வருடங்களில் அவனைப் பற்றிய செய்திகள் கறுப்பின மக்களிடையே தீயாகப் பரவியது.அவனால் எழுத்தறிவு கண்ட தோழர்கள், போராட்டங்களில் இறங்கினார்கள். தந்தைக்கு தவறான தீர்ப்பு அளித்த அதே நீதிபதி முன் நிறுத்தப்பட்டான் நெல்சன்.  அவனுடைய வாதத்தைக் கேட்டு அசந்துபோன அந்த வெள்ளைக்கார நீதிபதி, ''உன்னை எங்காவது அனுப்பிவிட வேண்டும். எங்கே போக விரும்புகிறாய்?'' எனக் கேட்டார்.'இந்தியா செல்வேன். அங்கே காந்தியோடு இணைந்து வெள்ளையரை எதிர்ப்பேன்'' எனத் தனது 11 வயதில் முழங்கினான் அந்தச் சிறுவன்.பிற்காலத்தில் தனது கறுப்பின விடுதலைக்காக 29 ஆண்டுகள் சிறையிலிருந்தபடி போராடி, இனம் விடுதலை பெற்றபோது, தனது நாட்டின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்று நெல்சன் மண்டேலாவாக வரலாறு படைத்தார்.


ALL YOU NEED TO KNOW ABOUT SHIKHAR DHAWAN





Source : AFP


Shikhar Dhawan was born on December 5, 1985 in Delhi



Indian cricket's rising superstar Shikhar Dhawan has been constantly in the news for his smashing innings and he scored yet another century on Friday in the ODI match against Zimbabwe. His belligerent form on the pitch has earned him great reviews. We look back at his life

Dhawan represented India at the 2004 ICC U-19 Cricket World Cup in Bangladesh where he ended up being the highest scorer in the tournament. Dhawan scored 505 runs at an average of 84.16, which included 3 centuries and was also named the Player of the Tournament.


Dhawan's rise continued as he was picked for the Delhi Ranji team. The southpaw made his Ranji debut for Delhi in 2004–05, finishing as the team's leading run scorer with 461 runs.


Dhawan's rise continued as he was picked for the Delhi Ranji team. The southpaw made his Ranji debut for Delhi in 2004–05, finishing as the team's leading run scorer with 461 runs.


With such lethal form in the domestic circuit, Shikhar Dhawan caught the eye of the selectors and earned an ODI call-up in the Indian cricket team. Dhawan made his ODI debut against Australia but eventually was out on a second ball duck.


But after a year, Shikhar Dhawan was in the side that toured the West Indies in 2011. In the four ODIs he played, Dhawan's highest score was 51.

Shikhar Dhawan's hard work in the domestic circuit paid off as he earned a test call-up to the Indian test team and made his debut against the Australians in the 3rd test match at Mohali in March 2013. Dhawan got his test cap from none other than Indian batting maestro, Sachin Tendulkar.



Dhawan went on to score a record breaking century (fastest ton on debut) and scored 187 against the Aussies. He was also involved in a 283-run opening stand with Murali Vijay which is now the highest ever in India-Australia Tests.



Shikhar Dhawan has also made a splash in the Indian Premier League. He played for the likes of Delhi Daredevils, Mumbai Indians and the Deccan Chargers. He now plays for the Hyderabad Sunrisers.


Playing in your first major ICC tournament and scoring two tons back to back is no walk in the park. Indian opener Shikhar Dhawan top scored with 363 runs that included two back-to-back tons at an average of 90.75 in 5 games. Dhawan displayed an array of shots that left the bowlers clueless and his form was one of the key factor in India winning the ICC Champions Trophy 2013.



Shikhar belongs to a Punjabi family and is married to a half-Bengali and half-British girl, Ayesha Mukherjee. He is step father to her two daughters who are settled in Australia.

பொது அறிவு

உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றில் 700க்கு உட்பட்ட மொழிகளில் மட்டும் தான் எழுதவும் பேசவும் முடியும்.


சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் வெறும் 100 மட்டுமே. இவற்றுக்கெல்லால் தாயாக, மூலமொழிகளாக திகழ்பவை 6 மொழிகள் மட்டுமே என் கண்டறியப்பட்டுள்ளது...

1. எபிரேய மொழி ( பேச்சு வழக்கில் இல்லை )
2. கிரேக்க மொழி ( பேச்சு வழக்கில் இல்லை )
3. இலத்தீன் மொழி ( பேச்சு வழக்கில் இல்லை )
4. ச‌ம‌ஸ்கிருத‌ மொழி ( பேச்சு வழக்கில் இல்லை )
5. த‌மிழ்
6. சீன‌ மொழி
 

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..

பல தளங்களில் இருந்து திரட்டியது..

Monday, July 22, 2013

Revised Motor Insurance... மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்

மழையில் நனைந்தபடி டூவீலரை ஓட்டிச் செல்வது மனசுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த நேரத்தில் பத்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ரிஸ்க்-ஆன விஷயம். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கும் என்று தெரியாது. எவ்வளவு கவனமாக வாகனத்தை ஓட்டினாலும், ஏதாவது பிரச்னை வந்து வாகனத்துக்கு அதிக செலவு வைத்து விடும். இப்படி திடீரென வரும் செலவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
 
எந்தவிதமான வாகனமாக இருந்தாலும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும்.  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதே சில நூறு ரூபாயைக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி, அதிக பாதுகாப்பு பெறலாம். இதற்கு பாலிசி எடுக்கும் நிறுவனத்தில் என்னென்ன கூடுதல் கவரேஜ் உள்ளன என்பதை விசாரித்து அதன்பிறகு பாலிசி எடுப்பது நல்லது. மழைக் காலத்தில் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன என்பதைச் சொல்கிறேன்.

ஒருங்கிணைந்த காப்பீடு: வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களில் சிலர், சட்டப்படியாக எடுக்கவேண்டிய மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுக்கிறார்கள். விபத்து ஏற்படும்போது எப்படியும் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை வாகனம் மற்றும் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் ஒருங்கிணைந்த காப்பீட்டைத் தேர்வு செய்வது நல்லது.


இன்ஜின் கவர்: மழைக் காலம் வந்துவிட்டாலே நகரங்களில் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. தண்ணீரில் வாகனத்தை ஓட்டும்போது பல நேரங்களில் இன்ஜினில் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் வாகனம் தண்ணீரில் திடீரென நின்றுவிடவும் வாய்ப்புண்டு. வாகனத்தின் இன்ஜினை ஆன் செய்ய முயற்சிக்கும்போது இன்ஜின்  பழுதாகவும் வாய்ப்புண்டு. சாதாரணமாக எடுத்து வைத்திருக்கும் பாலிசியில் இதற்கு க்ளைம் கிடைக்காது. இன்ஜின் கவர் பாலிசியைக் கூடுதல் பிரீமியம் செலுத்தி எடுத்திருந்தால் க்ளைம் பெறலாம்.

ஜீரோ தேய்மான கவரேஜ்: இந்தக் கூடுதல் கவரேஜ் மூலம் வாகனத்தில் விபத்தின்போது ஏற்படும் பாகங்களின் சேதத்திற்கு க்ளைம் பெறமுடியும். அதாவது, வாகனத்தை வாங்கி சில ஆண்டுகள் கழித்து ஏதாவது முக்கியமான பாகத்தில் சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்திற்கான க்ளைம் தொகையை அப்போதைய மதிப்பிற்குதான் க்ளைம் செய்ய முடியும். இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்து வைத்திருந்தால் புதிய பாகத்திற்கான தொகையை க்ளைம் செய்ய முடியும். வாகனத்தில் தேய்மானம் என்பது வேகமாக இருக்கும். முக்கிய பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அந்த பாகத்தை மாற்றவேண்டி இருக்கும். அப்போது தேய்மானம் போக பாகத்தின் மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புதிய பாகத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முழுத் தொகையையும் தருவதுதான் ஜீரோ தேய்மான கவரேஜ். 
 
ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்: ஏதாவது மரத்தடியில் வாகனத்தை நிறுத்தும்போது அந்த மரம் வாகனத்தின் மீது விழுந்து, வாகனம் முழுவதுமாக சேதம் அடைவது. அல்லது கீழ்தளத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கும்போது மழை நீர் வாகனத்தில் புகுந்து வாகனம் முழுவதும் சேதம் அடைவது மற்றும் வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்வது, வாகனத் திருட்டு போன்ற சமயங்களில் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கூடுதல் கவரேஜ் கைதரும்.
 
பொதுவாக, ஒவ்வொரு வருடமும் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது அதன் தேய்மானம் கழித்த மதிப்பிற்குதான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்தால், புதிய வாகனம் வாங்குவதற்கு தேவைப்படும் முழுத் தொகையை க்ளைம் செய்ய முடியும்.  இன்றையச் சூழ்நிலையில் வாகனம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.  எனவே, சில நூறு ரூபாய் பிரீமியத்தில் பல ஆயிரங்களைப் பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

Unavu pathukappu sattam... உணவு பாதுகாப்பு சட்டம் - ஒரு அலசல்

  உணவு பாதுகாப்பு சட்டம் - ஒரு அலசல்

        ஆளுக்கு 5 கிலோ அரிசி... அல்லது வேறு தானியம்... மலிவு விலையில் கிலோ 2 ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு 65 சதவிகித இந்திய மக்களுக்கு தரவேண்டும் என்று அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். இந்த அதிசயத் திட்டத்துக்கு 'உணவு பாதுகாப்பு சட்டம்’ என்று பெயர் சூட்டி விழா எடுக்கிறது மத்திய அரசாங்கம்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு களுக்குப் பிறகும், 65 சதவிகித மக்கள் மாதம் 5 கிலோ உணவு பொருட்கள்கூட வாங்கமுடியாத  நிலையில் வைத்திருக்கிறோமே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, வறுமையை, பசிப்பிணியை மூலதனமாக்கி, ஓட்டு வங்கியைப் பெருக்கி... மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக அலைந்து திரிந்து அறிமுகம் செய்த திட்டம்தான் இந்த உணவு பாதுகாப்பு சட்டம். மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 80 கோடி பேர் சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்றால், நாம் செய்திருப்பது கின்னஸ் சாதனைதான் போங்கள்...

பல்வேறு மாநில அரசுகள், இலவசமாக அரிசி வழங்கவே செய்கின்றன. அந்த இலவசத்திற்கு, இப்போது சட்ட அங்கீகாரம் தந்திருக்கிறது மத்திய அரசாங்கம். உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

தேவையான உணவு, தேவையானபோது, தேவையான அளவில், சிரமம் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இயல்பாகவே இருக்கவேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு என்பது உலக அரங்கில் ஒப்பிட்டால் அதிகமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தோனேஷியாவில் ஒரு கிலோ அரிசி 2 டாலர். இந்தியாவில் அரை டாலருக்கும் ஒரு டாலருக்கும்தானே விற்கிறது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் முடங்கினால், எப்படி பொருளாதாரம் வளரும்? ஆக, எல்லாச் சூழலிலும், நிலைத்து நீடிக்க நிரந்தர உணவு உற்பத்திதானே, உணவு பாதுகாப்பாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்?

ஆனால், புரட்சிகரமான இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில், உணவு உற்பத்தி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. உற்பத்தியை உறுதி செய்யாமல் உணவு பாதுகாப்பு எப்படி சாத்தியம்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இந்த சட்டியில் ஆயிரம் ஓட்டை அல்லவா இருக்கிறது. சட்டி நிறைவது எப்போது, வயிறு நிறைவது எப்போது?நமது நாட்டின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகள்தான். ஆகவே, அரசு என்ன செய்யவேண்டும்? சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஊக்கம் தந்து,  மேலே சொன்ன நாடுகளைப்போல மானியம் தந்து உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியைக் கூட்டி வறுமையை ஒழிக்க இந்த சட்டத்தின் மூலம் வழி கண்டிருக்கவேண்டும். மாறாக, இந்த சட்டம் பிச்சைப் பாத்திரத்தை தூக்கி கையில் தந்துவிட்டு, வறுமையை விரட்டும் திட்டம் என்று கும்மாளம் போடுகிறது. அதேசமயம், நாள் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுகுறு விவசாயிகளை கிராமங்களைவிட்டு விரட்டி அடிக்கிறது.

மேலும், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், காடு கழனிகள் காங்கிரீட் காடுகளாகவும், மாறுகின்றன. நெல் நட்ட வயலில், கல்லு நட்டு காசு பண்ணுகின்றனர் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். அனைத்து கறுப்புப் பணமும் அங்குதான் பதுக்கப்படுகிறது. விளைநிலங்கள் விவசாயிகளைவிட்டு வேகமாக வெளியேறுகிறது. இது நல்லதுக்கு இல்லை. இதைத் தடுப்பது பற்றி இந்த சட்டத்தில் ஒன்றுமில்லை. ஆறுகள், மனித கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறிவிட்டன. திருப்பூர் சாயப்பட்டறை ரசாயனக் கழிவுகள், நொய்யல் வழியாக காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில்கூட விஷத்தைக் கக்குகிறது. அதேபோல் ஆம்பூர், வாணியம்பாடியில் உற்பத்தியாகும் விஷக்கழிவுகள் பாலாற்றை நாறடிக்கின்றன; நீரும் விஷமாகிவிட்டது. அளவுக்கு அதிகமான ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், மண் புண்ணாகிக் கிடக்கிறது. நீரும் விஷம், நிலமும் விஷம்... அப்புறம் விளைவது மட்டும் எப்படி சொக்கத் தங்கமாக இருக்கும்?

 

இன்று உணவுக்கு செலவழிப்பதைவிட மருத்துவத்துக்குச் செலவழிப்பதே அதிகம். இந்தியாவில் 50 சதவிகித பெண்களுக்கு ரத்த சோகை, 47 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறைபாடு உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கிறது. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், இது ஒரு தேசிய அவமானம் என்று சொல்லியதோடு நிறுத்திக்கொண்டார் பிரதமர் சிங். இந்த குறைபாடுகளை களைய ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள், இன்று திடீரென ஞானோதயம் பிறந்துபோல ஆடுகிறார்கள்!  விரைவில் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டம் கூடவிருக்கிறது. அங்கு விவாதத்திற்கு பிறகு இந்த சட்டம் கொண்டுவந்து இருக்கலாம். நிறைகுறைகள் சரி செய்யப்பட்டிருக்கும். சட்டம் முழுவடிவம் பெற்றிருக்கும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? கூடிய விரைவில் நடக்கப் போகும் தேர்தலில் வாக்கு வங்கி பெருக்க நினைக்கும் திட்டம்தான்.  

ஐந்து கிலோ அரிசியில் வறுமை நீங்கப்போவதும் இல்லை. வயிற்றுப் பசி ஆறப்போவதும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி இளைஞர்கள் திடகாத்திரமாக வளர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளிக்கொண்டு வரப்போவதும் இல்லை. வருடா வருடம் நான்கைந்து லட்சம் கோடி புரளுவதால், இன்னுமொரு உலகளாவிய ஊழலுக்கு வேண்டுமானால் இந்தச் சட்டம் உதவும்.

இப்போது கொள்முதல் செய்யப்படும், ஐந்தாறு கோடி டன் உணவு தானியங்களையே, ஒழுங்காக பாதுகாக்க அரசினால் முடியவில்லை. மழையில் நனைந்து, புழுத்து, முளைத்து, எலி பாதி... பெருச்சாளி பாதி என விரயமாகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்து முடித்த மாதிரி தெரியவில்லை. 'எலி தின்கிற தானியங்களை ஏழைகளுக்காவது இலவசமாக கொடுங்கள். பாவம் மக்கள் பசியாறட்டும்’ என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், பிரதமர் சிங்கோ, இலவசம், மானியம் இரண்டும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் இரண்டு முக்கிய காரணிகள் என்று சொல்லி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த உர மானியத்தை எடுத்தார். பூசல் மானியத்தைத் தூக்கினார். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் மானியத்தைத் தடுத்தார்.ஆனாலும் என்ன ஆனது? ஏற்றுமதி இறங்கி வருகிறது. இறக்குமதி எகிறி வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறை விரிந்துகொண்டே போகிறது. இந்த இக்கட்டான நிலையில்1.25 லட்சம் கோடி மானியம் என்பது சாத்தியமா? இதுவும் பொய் கணக்குதான். 3 லட்சம் கோடி தேவை. ஆளுக்கு 5 கிலோ. 80 கோடி மக்களுக்கு 4 கோடி டன் ஒரு மாதத்திற்கு, ஆக வருஷத்திற்கு 48 கோடி டன். சற்று ஏறக்குறைய 50 கோடி டன் கொள்முதல் செய்யவேண்டும். உணவு தானியங்கள் வாங்கி,  விநியோகம் செய்ய 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நாடு இன்று இருக்கும் நிலையில் இது நடக்கிற காரியமா...?

ஆக, உற்பத்திக்கும் வழி வகுக்காமல், செலவுக்கும் வழி தெரியாமல், வாக்குச்சீட்டு ஒன்றை மனதில்கொண்டு போடப்பட்ட இந்தச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டமல்ல, உணவு உற்பத்தி ஒழிப்புத் திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Friday, July 19, 2013

Nokia 3g Phones

 நோக்கியாவின் 3ஜி போன்கள்


நோக்கியா, புதியதாக, மூன்று போன்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் 3ஜி தொடக்க நிலை விலை கொண்டுள்ள போன்களாகும். நோக்கியா 207, 208 மற்றும் 208 டூயல் சிம் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. நோக்கியா சிரீஸ் 40 எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
Facebook, Twitter மற்றும் Whats App ஆகியவற்றிற்கு நேரடி லிங்க் கொண்டுள்ளன. அனைத்து போன்களிலும் மைக்ரோ சிம் கார்ட்களைப் பயன்படுத்தலாம். 3G, GPRS/EDGE ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் சார்ஜ் செய்வதற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போன்களின் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தலாம்.
நோக்கியா 208 மற்றும் 208 டூயல் சிம் ஆகிய இரண்டிலும் 1.3 பின்புறக் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். வரும் அக்டோபரில் இவை விற்பனைக்கு வரும். இவற்றின் விலை ரூ.4,000 என்ற அளவில் இருக்கலாம்

galaxy s4 mini review

கேலக்ஸி எஸ்4 மினி இந்தியாவில் விற்பனை...
அண்மையில், மும்பையில் கேலக்ஸி எஸ் 4 மினி மாடல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எஸ் 4 மினி மாடலில், திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 960X540 பிக்ஸெல்களுடன் AMOLED டிஸ்பிளே உள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி. பின்புறக் கேமரா, 1.9 மெகா பிக்ஸெல் முன்புறக் கேமரா, 1 ஜிபி ராம் நினைவகம்,64 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய 8 ஜி பி ஸ்டோரேஜ் மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் தடிமன் 8.97 மிமீ. எடை 107 கிராம். கேலக்ஸி எஸ் 4 போனில் உள்ள Sound&Shot, S Travel, Story Album, S Translator, Watch ON மற்றும் S Health ஆகியவை இதிலும் உள்ளன. Watch ON வசதி மூலம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ரிமோட் கண்ட்ரோலாக மொபைல் போனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி 1,900 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 27,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்குவோருக்கு, மூன்று மாதங்களுக்கு 2 ஜிபி, 3ஜி டேட்டா இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

micromax canvas 4 a210

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210

இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வரிசையில் வந்துள்ளது கேன்வாஸ் 4 ஏ 210. 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 5 அங்குல திரை. ஐ.பி.எஸ். பேனல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், காட்சியின் தன்மையும், வண்ணக் கலவையும் சிறப்பாக உள்ளது.
2000 mAh திறன் கொண்ட பேட்டரி 220 மணி நேரம் மின் சக்தியைத் தங்க வைக்கிறது. 480 நிமிடம் பேச முடிகிறது. இதன் பரிமாணம் 144.5x 73.8x 8.9 மிமீ. எடை 158 கிராம். வடிவம் பார் டைப்பில் உள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் இந்த போன், கிரே மற்றும் வெள்ளை கலரில் கிடைக்கிறது. 13 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா 4208x 3120 பிக்ஸெல்களில் படம் தருகிறது. ஸூம், பிளாஷ் கிடைக்கிறது. இரண்டாவது கேமராவும் தரப்பட்டுள்ளது. புளுடூத், வை-பி மற்றும் யு.எஸ்.பி. இணைப்புகள் நெட்வொர்க் செயல்பாட்டினை எளிதாக்குகின்றன. ஜி.பி.எஸ்., ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இணைய தேடலுக்கு ஆண்ட்ராய்ட் வெப்கிட் கிடைக்கிறது. ஆடியோ, வீடியோ, எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., மற்றும் மின் அஞ்சல் வசதிகள் உள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 17,999.

புகையிலை பொருள் தடை: நோட்டீஸ் ஒட்டி போலீஸ் பிரசாரம்

கோவை:தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களின் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பொது இடங்க
ளில் நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை விற்பனை செய்யும் நபர்கள் மீது, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், பல இடங்களில் பதுக்கி வைத்து, இரட்டிப்பு விலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
புகையிலை பொருட்களுக்கு விதித்துள்ள தடையை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் தங்களின் எல்லைக்குட்பட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட நோட்டீசில், "பொது இடத்தில் புகைப்பிடித்தல் மற்றும் துப்புதல், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும், பொது இடத்தில் துப்புவதும் குற்றம். தவறினால், தமிழ்நாடு புகைப்பிடித்தல் தடை செய்யும் சட்டப்பிரிவு 9ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் குறித்து ஆர்.எஸ்.புரம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் கூறுகையில், "" தமிழக அரசு சார்பில், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்களை முற்றிலும் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
""மறைத்து வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
""பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது குறித்தும் நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரை தூய்மையாக வைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

பாதியில் நின்ற "சீல்' வைப்பு நாடகம் :ஒரே போனில் மிரண்ட அதிகாரிகள்

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பொது ஒதுக்கீடு பெற்று, உள்வாடகைக்கு விடப்பட்ட வீடுகளை "சீல்' வைக்க, நேற்று அதிகாரிகள் வந்தனர். ஆனால், திடீரென வந்த, போன் அழைப்பை அடுத்து, நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடி வீதியில், வீட்டு வசதி வாரிய
குடியிப்பு உள்ளது. ஒரு பிளாக்கில் ஆறு வீடுகள் வீதம், மொத்தம் 13 பிளாக்குகளில் குடியிருப்புகள் உள்ளன. ஒதுக்கீடு பெற்றவர்கள், குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதுபற்றி ஹவுசிங் யூனிட் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, ஒதுக்கீடு பெற்ற குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளதை கணக்கெடுத்தனர்.
மொத்தம் ஏழு குடியிருப்புகள், விதிமுறைகளுக்கு முரணாக உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அந்த குடியிருப்புகளை காலி செய்து "சீல்' வைக்க, ஹவுசிங் யூனிட் அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆர்.எஸ்.புரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
"எல் 3' குடியிருப்பு, ஹவுசிங் யூனிட்டில் பணியாற்றிய இளங்கோவன் என்பவர் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக இளங்கோவன் "சஸ்பெண்ட்' நிலையில் இருப்பதாலும், குடியிருப்பில் யாருமின்றி பூட்டப்பட்டிருந்ததாலும், அதற்கு, வீட்டு வசதி வாரிய அதிகாரி பெரியசாமி "சீல்' வைத்தார்.
அடுத்த குடியிருப்புக்கு "சீல்' வைக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. குடியிருப்பில் இருவர்களிடம் முறையாக ஆவணங்கள் இல்லாததால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
அடுத்த குடியிருப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்குள், ஹவுசிங் யூனிட் அதிகாரிகளுக்கு மேல் இடத்தில் இருந்து மொபைல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய அதிகாரிகள், குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கையை, திடீரென கைவிட்டனர்.
உதவி பொறியாளர் பெரியசாமியிடம் கேட்டபோது, ""நடவடிக்கையை கைவிடுமாறு, உயர்அதிகாரிகள் தெரிவித்ததால், திரும்பி விட்டோம். இதுபற்றி என்ன கேட்பதாக இருந்தாலும், செயற்பொறியாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.
செயற்பொறியாளரின் மொபைல்போன் எண், அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அலுவலக எண்ணான, 0422 2493359 என்ற எண்ணில் தொடர்பு கொண்டபோது, "கண்காணிப்பு பொறியாளர் வந்துள்ளதால், அதிகாரிகள் "மீட்டிங்'கில் உள்ளனர். எந்த செய்தி கேட்பதாக இருந்தாலும், நாளை கேட்டுக்கொள்ளுங்கள்' என, அலுவலக உதவியாளர் தெரிவித்தார்.

கவனிப்பாரா கலெக்டர்?

ஹவுசிங் யூனிட் அதிகாரிகளே குடியிருப்புகளை வெவ்வேறு பெயரில், உள்வாடகைக்கு விட்டுள்ளனர். பொது ஒதுக்கீடு ஹவுசிங் யூனிட் மட்டுமின்றி, அரசு அலுவலர் குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்களும் குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கலெக்டர் தலைமையில் தனிக்குழு அமைத்து, குடியிருப்பு ஒதுக்கீடு, வசிப்பவர்கள் விபரங்களை சேகரித்து, விதிமுறை மீறல் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். குடியிருப்புக்காக பதிவு செய்து காத்திருப்போருக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Endrendrum Vaali...

சென்னை: பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று (18/07/2013) இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று 
(19/07/2013) நடக்கிறது.


கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வாலி இறந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள கற்பகம் அவின்யூ வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகத்தினர், பாடகர்கள், பாடகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.


கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். துவக்கத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, "நேதாஜி' என்ற கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். திரைப் படங்களுக்கு பாடல் எழுத ஆசைப்பட்டு சென்னை வந்தார்; அவர் நினைத்தது நடந்தது. 1958ல், "அழகர் மலை கள்வன்' படத்தில், "நிலவும் தரையும் நீயம்மா...' என்ற பாடலை வாலி எழுத, டி.கோபாலன் இசையில், பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என, பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வெற்றிலை பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார். "அவதார புருஷன்', "அழகிய சிங்கர்' என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

நூல்கள், படங்கள்:

கவிஞர் வாலியின், "அம்மா, அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற்றாண்டும், வாலிப வாலி' ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், "சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்கால் குதிரை' படங்களில் நடித்துள்ளார்.

17 படங்களுக்கு திரைக்கதை:

"கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே' உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, "வடை மாலை' படத்தை இயக்கவும் செய்தார்.

விருதுகள்:

வாலியின் கலைச் சேவையை பாராட்டி, 2007ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். "எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம்' படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார். 1973ல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற "இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு' என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.

மனதை "திருடிய' திரைப்பாடல்கள்





எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில் சில:

* மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா....
* தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...
* நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்......
* காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்...
* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ...
* ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
* அந்த நாள் ஞாபகம் - நெஞ்சிலே வந்தே நண்பனே, நண்பனே...
* மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்...
* ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...
* மல்லிகை... என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ...
* வெற்றி வேண்டுமா... போட்டுப்பாரடா எதிர்நீச்சல்...
* புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக...
* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
* "புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...
* ஏமாற்றாதே ஏமாறாதே...
* கண் போன போக்கிலே கால் போகலாமா...
* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்...
* ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு...
* இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...
* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை...
* அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
* சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
* ரோஜா ரோஜா...

பழைய பாடல்கள் என்று இல்லை, காலத்திற்கேற்ப புதிய படங்களையும் இவரது "வாலிபமான' பாடல்கள் ஆக்கிரமித்தன.
* கொஞ்ச நாள் பொறு தலைவா... அந்த வஞ்சிக்கொடி இங்கு வருவா...
* அடி ஒன் இஞ்ச், டூ இஞ்ச், த்ரி இஞ்ச் கேப் ஏண்டியம்மா...
* மாசி மாசி... காதல் வாசி...
* மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாய்..

இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த "தில்லுமுல்லு', "மரியான்', "உதயம் "என்.எச்., 4', "எதிர்நீச்சல்', "அலெக்ஸ் பாண்டியன்' போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம்பெற்றன.

"காதோடு தான் நான் பாடுவேன்...
மனதோடு தான் நான் பேசுவேன்...''

- இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப்பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, ""வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை'' -நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, "வயசாயிப்போச்சு...' என புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, "வாலி'பராகவே வலம் வந்தவர் வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம்

புத்தகங்கள்:

கவிஞர் வாலி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:


* பாண்டவர் பூமி
* ஆறுமுக அந்தாதி
* பகவத்கீதை கவிதை நடை
* சரவண சதகம்
* இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்
* கம்பன் என்பது
* நானும், இந்த நூற்றாண்டும்
* நினைவு நாடாக்கள் உள்ளிட்ட ஏராளமான பாடல்கள், அழியாத காவியமாகவே விளங்குகின்றன. இது தவிர, "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' உட்பட பல தனி பாடல்களும் வாலியை, பாராட்டு மழையில் நனைய வைத்தன.

பெயர் மாற்றம்:

ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, "மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும்' என்று கூறி, ரங்கராஜனுக்கு, "வாலி' என, பெயர் வைத்தார்.

"சின்னத் தாயவள் தந்த ராசாவே': பின்னணி பாடகி மஹதி



"ஒஸ்தி' பட இசை வெளியீட்டு விழாவிற்கு, வாலி வந்திருந்தார். அந்தப் படத்தில், "நெடுவாலி...' என்ற பாடலை பாடியிருந்தேன். விழாவில், "உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று, நான் கேட்க, அவரோ, "உங்களின் கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்; உங்களோடு நான் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டார். நான் பாடிய, "தீயில்லை... புகையில்லை... ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே...' பாட்டு, அவர் கைப்பட எழுதிய காகிதத்தை, என்னிடம் பாடக் கொடுத்தனர். எனக்கு வாலியின் நினைவாக வைத்துக்கொள்ளத் தோன்றியது. இசையமைப்பாளரிடம் கேட்டு, அந்த கையெழுத்து பிரதியை, என்னிடம் வைத்துக் கொண்டேன். அவர் எழுதியதில் என்னைக் கவர்ந்தது, "சுந்தரி... கண்ணால் ஒரு சேதி மற்றும் சின்னத் தாயவள் தந்த ராசாவே...' பாடல்கள் தான்.

தலைமுறை கவிஞர்:

திண்டுக்கல் லியோனி, பட்டிமன்ற நடுவர்: அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எழுதி, மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி. இலக்கிய கற்பனைகளில் புதுமையை புகுத்தியவர். ""மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே. போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே. இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே'' என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பிட்டு எழுதியவர். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களை தெளிவுபடுத்தியவர்.

தீர்க்கதரிசன கவிஞர்:

கவிஞர் முத்துலிங்கம்: எனது 45 ஆண்டுகால நண்பர். சினிமா பாடல்களைத்தவிர, பத்திரிகைகள், கவியரங்கங்களுக்கு வாலி கவிதை எழுதுவார். அக்கவிதைகளை என்னிடம் வாசித்து காண்பித்தபின், பத்திரிகைகளுக்கு அனுப்புவார்; நான், அவரை விட வயதில் இளையவன். அப்படி இருந்தும், என்னை வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்த நட்புக்கு, தமிழ்தான் காரணம். இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்; பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர். "நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்...,' என தீர்க்கதரிசனமாக, எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதியவர்.

தமிழே உன் தலையெழுத்து:

மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம்: ""பூ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்! புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்! நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே? இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில் மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?'' -இது அண்ணாதுரை இறந்த போது, கவிஞர் வாலி எழுதியது. வாலிக்கும், இது பொருந்தும்.

மனம் மாறிய வாலி:

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக, ஒருமுறை தற்கொலை முடிவை' எடுத்தார். அப்போது கண்ணதாசன் "சுமைதாங்கி' என்ற படத்துக்காக எழுதிய, "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்ற பாடலில் வரும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு...' என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார்.

இதுக்கு மேல் எழுத முடியாது:

"அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக, காதல் தோல்வி தொடர்பாக வாலி பாடல் எழுதினார். அதில் திருப்தி அடையாத நடிகர் கமல், மீண்டும் கேட்டார். இதுமாதிரி ஐந்து முறை பாடலை மாற்றிய வாலி, 5 தடவைக்குப் பின், இதற்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என கூறி, கோபத்துடன் ஒரு பாடலை கமலிடம் கொடுத்தார். அந்த பாடல்தான், "உன்ன நெனச்சேன்... பாட்டு படிச்சேன்... தங்கமே, ஞானத்தங்கமே...' என்ற பாடல்.

வாலியின் வரி:

""அன்று 24 மணி நேரம் இருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் இல்லை. இன்று சாப்பிட அனைத்தும் இருக்குகிறது; ஆனால் நேரம் இல்லை'' என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.

வாலி "1000':

கவிஞர் வாலியின் 80வது பிறந்த தின நிகழ்ச்சியில், ஆயிரம் படங்களுக்கு அவர் பாடல் எழுதியதை பாராட்டி, "பிரம்ம கான சபை' சார்பில், 2010 நவ., 13ல், "வாலி - 1000' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

பிரதிபலித்த வாலி:

எம்.ஜி.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதிபலித்தார். எம்.ஜி.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந்தன. அந்தளவு இருவரது உறவு, நட்பு வட்டத்தை தாண்டி இருந்தது.

எளிதில் புரியும்:

வாலியின் பாடல் வரிகள், சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். அதே வகையில் சில பாடல்களில் பிற மொழி வார்த்தைகளை கலந்தும் பாடல்களை எழுதியுள்ளார். வாலி தத்துவ பாடல்களை மட்டும் எழுதவில்லை.

எம்.ஜி.ஆர்., தந்த கடிகாரம்:

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்: நல்ல ஓவியர். இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது' என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு. நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார். இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி' யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக', புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர். "அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...' பாட்டெழுதியவர், வாலி. ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது' என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம்' படத்தின் "மன்னவனே... அழலாமா... அத்தை மடி மெத்தையடி... பக்கத்து வீட்டு பருவமச்சான்....' பாடல்கள், வெற்றியைத் தந்தது. டி.எம்.எஸ்.,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே உனை மறவேன்'. கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர்., வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன்' என்றார். சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்...' என்றெழுதியதும், எம்.ஜி.ஆர்., கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன். சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்.

வலிமை கவிஞர் வாலி:

கவிஞர் நெல்லை ஜெயந்தா: 1958ம் ஆண்டு முதல் இன்று வரையிலும், திரைத்துறையில் தேடப்படும் ஒரே நபர் வாலி. பாடல்களில் பழமையும், புதுமையையும் தரும் வலிமை, வாலிக்குத் தான் இருந்தது. "டிமாண்ட்' செய்யும் ஒரே பாடலாசிரியர். யாராக இருந்தாலும் இவரிடம் பாடல் கேட்டால் 4 பல்லவி, 4 சரணம் கொடுத்துவிடுவார். சிலர் புதியவர்களுக்கு, சிலவரிகளை கொடுப்பார்கள்; ஆனால், வாலிக்கு அந்த பழக்கமே இல்லை. தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம், தன்னை ஒரு முட்டாள் போல் நினைத்து கேட்பார். ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் பலதை ரசித்தாலும், எனக்கு அவரது பழைய பாடல்களில் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' புதிய பாடல்களில் "என்ன விலை அழகே...' மிகவும் ரசித்துக் கேட்பேன். வாலி, பெரும்பாலும் தனிமையைத் தான் விரும்புவார். நன்கு பழகியவர்களை எந்த இடத்தில் கண்டாலும் அழைத்து பேசுவார். அது போல், ஒருவரை சந்திக்க "அப்பாயின்மென்ட்' கொடுத்த பின், அதைவிட புகழ்பெற்ற அல்லது மிக முக்கியமான நபராக இருந்தாலும், அந்த நேரத்தை மாற்ற மாட்டார்.

வந்ததும் காலி; காரணம் "வாலி':

கவிஞர் வாலியின் வரிகளுக்கு அன்றும், இன்றும் இருக்கும் "மவுசுக்கு', அதை தாங்கி வந்த "கேசட்', "சிடி'களின் விற்பனையே சாட்சி. குறிப்பாக, வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்கள், லட்சக்கணக்கில் விற்றுள்ளன. இன்றும், தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. "நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்', "ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை', "காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்', "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' போன்ற எம்.ஜி.ஆர்., ன் காலத்தால் அழியாத பாடல்களின் அமோக விற்பனையில், வாலியின் வரிகளும் பின்னணியில் அணிவகுத்தன. டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய, "கற்பனை என்றாலும்', "ஓராறு முகமும்... ஈராறு கரமும்...' போன்ற பக்தி பாமாலைகளுக்கும், வரிகளால் பூமாலை கோர்த்தவர், வாலி. எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு அடுத்தபடியாக, அதிக ஆல்பங்கள் விற்பனைக்கு வருவது, வாலியின் பாடல்கள் தான். மதுரை, கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்ட போது, ""எனது 25 ஆண்டு கால ஆடியோ விற்பனையில், துவக்க காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு "டெமோ' காட்ட, வாலியின் வரிகளில், டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய பாடல்களை தான், ஒலிக்கச் செய்து காட்டுவோம். அதை கேட்டதுமே, கேசட் விற்றுவிடும். ஒவ்வொரு சீசனிலும், 30க்கும் மேற்பட்ட ஆல்பங்கள், வாலி பெயரில் விற்பனைக்கு வரும். அடுத்த சீசன் வருவதற்குள், முன்பு வந்தவை விற்றுவிடும். வாலியின் வரிகளை தேடி வரும் ரசிகர்கள், 70வயதிலும் இருக்கிறார்கள், 20லும் இருக்கிறார்கள். வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ் விற்பனையை, வேறு எந்த ஆல்பமும் முறியடிக்க முடியாது,'' என்றார்.
நாம் நல்ல கவிஞரை இழந்துவிட்டோம் ... 
Click Here

Deadly Cool Drinks...

குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள்...


ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம்.  சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று அறிவோம் .

'குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் 'ஜங்க்’ புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.'' 

 

குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. 'டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
 
குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள் :
 
உடல் பருமன்
 
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.

சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில்  படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
 
இதயம் மற்றும் சர்க்கரை நோய்

குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.


அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

பற்கள் / எலும்புகள்

குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.

சிறுநீரகம்

தினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.