Thursday, July 11, 2013

ATM Message Cost (MUST READ)

ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை எடுத்தாலும், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்தாலும், இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் எடுத்தாலும் அடுத்த நிமிஷமே நம் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துவிடும். இத்தனைநாளும் பயன்படுத்தி வந்த இந்த சேவைக்கு இனி கட்டணம் உண்டு என்பது அதிர்ச்சியான தகவல். இலவசமாக தந்துவந்த சேவைக்கு ஏன் கட்டணம் என வங்கி வட்டாரங்களில் கேட்டதில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான செலவு அதிகரித்ததே காரணம் என்றார்கள்.
 
வங்கிகளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.-க்கு 0.02 பைசா என்று இருந்தது, இப்போது ஒரு எஸ்.எம்.எஸ்.-க்கு 0.25 பைசா வசூலிக்கப்படுகிறதாம். இது தனிநபர்களுக்கு மிகக் குறைந்த தொகையாகத் தெரிந்தாலும், வங்கிகளுக்குப்  பெரிய தொகை. அதாவது, ஒரு நாளைக்கு பல லட்சம் எஸ்.எம்எஸ்.களை  வங்கிகள் அனுப்புகின்றன. இதனால் அதிகம் செலவாகிறது.  
 
சில பொதுத் துறை வங்கி களும், தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கிற்கு 60 ரூபாயும், நடப்புக் கணக்கிற்கு 100 ரூபாயும் என எஸ்.எம்.எஸ். அலெர்ட்டுக்கான ஆண்டுக் கட்டணமாக வைத்துள்ளன. ஆனால், சில பொதுத் துறை வங்கிகள் இந்த சேவையை இலவசமாகவே தருகின்றன. ஆனால், இது இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

வருடத்திற்கு 60 ரூபாய் என்பது மாதத்திற்கு 5 ரூபாய். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும்போது நமக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவது கூடுதல் பாதுகாப்புதான்.
 
 
 

No comments:

Post a Comment