Tuesday, June 24, 2014

Cloud computing

1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.

2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் குரலை எடுத்துத் தரும் பெரிய மெகா போன் உண்டா? இல்லை, ஆனால் இன்டர்நெட் அந்த மெகாபோனைத் தந்துள்ளது. நீங்கள் எது குறித்து வேண்டுமானாலும் உங்கள் கருத்தைப் பதிக்கலாம்; அதனை உலக மக்கள் அனைவராலும் படிக்க முடியும். 
3. வெறும் பேச்சு, கருத்து சுதந்திரம், தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல, வர்த்தகம் மேற்கொள்ளும் மிகப் பெரிய சந்தையாக இன்டர்நெட் மாறி உள்ளது. பல கோடிக் கணக்கான டாலர் அளவில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆப்பிள் ஐ போனுக்கான பாடலாயினும் சரி, நீங்கள் உருவாக்கும் சிறிய படகுக்கான உபரி உபகரணங்களானாலும் சரி, இணையத்தில் உங்களால் வாங்க முடியும்.
4. பதிவு செய்யப்பட்ட வெப்சைட்டுகளின் எண்ணிக்கை தற்போது, நெட்கிராப்ட் அமைப்பின் கணக்குப்படி, 28 கோடியைத் தாண்டியுள்ளது.
5. அடுத்த இன்டர்நெட் புரட்சி கிளவ்ட் கம்ப்யூட்டிங் ஆகும். இணையத்திலேயே சாப்ட்வேர் தொகுப்புகளைப் பெற்று, நமக்கான பைல்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நம் கம்ப்யூட்டரில் அவை தேவையில்லை.

MS Excel Tips

சார்ட்களில் லேபிள் அமைக்க:எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக்காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். 
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும். 
2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். 
3. இதில் உள்ள Data Labels என்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது. 
4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.


அடுத்து, எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும். 
2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இந்த பாக்ஸில் உள்ள Data Labels என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த டயலாக் பாக்ஸ் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும். 
4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம். 
5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT
புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். 
F2 +ALT+SHIFT
அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். 
F3 +ALT+SHIFT
நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். 
F6+ALT+SHIFT
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும். 
F9 +ALT+SHIFT
திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT
ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். 
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 + ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். 

புல்லட் எண்களின் வடிவை மாற்ற:
வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி தானாக எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? சில வேளைகளில் இந்த எண்களின் அளவு, தோற்றம் ஆகியவற்றை மாற்ற முடியவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? கவலை வேண்டாம். இவற்றையும் மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் A அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பி அமைத்தபடி இந்த எண்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

டாகுமெண்ட்டில் எண்களை அமைக்க:
வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். 
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
Click Here

One Drive By Microsoft

இலவசமாக இணைய வெளியில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் OneDrive வசதியை வழங்கியுள்ளது. இது எம்.எஸ். ஆபீஸ் பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. 

1. ஒன் ட்ரைவ் போல்டரை நகர்த்த: தற்போதைய விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை ஒருங்கிணைத்து சேவ் செய்திடலாம். நாம் உருவாக்கும் பைல்கள் நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நமக்கெனத் தரப்பட்ட க்ளவ்ட் ஸ்டோ ரேஜ் ஒன் ட்ரைவிலும் பதியப்படுகின்றன. நம் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், இந்த பைல்கள் (synced files) பயனாளரின் ப்ரபைல் போல்டரில் ஒரு துணை போல்டரில் காட்டப்படுகின்றன. ஆனால், இந்த பைல்களை இன்னொரு போல்டரில் அல்லது இன்னொரு தனி ட்ரைவில் நாம் எடுத்துச் சென்று வைக்கலாம்.
விண்டோஸ் 8.1 இயக்கத்தில், ஒன் ட்ரைவுடன் இணைந்து பைல் சேமிக்கும் வசதி மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. பைல் எக்ஸ்ப்ளோரரில் ரைட் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். பின்னர் இங்கு கிடைக்கும் விண்டோவில் Location டேப் கிளிக் செய்து போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்டோஸ் 7 இயக்கத்தில், இணையத்தில் Onedrive.com சென்று, இந்த ஒருங்கிணைந்த வசதியைப் பெறவும். இதற்கான செட் அப் செய்திடுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள லோக்கல் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதை ஏற்கனவே நீங்கள் அமைத்திருந்தால், சிஸ்டம் ட்ரைவில் உள்ள ஒன் ட்ரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Settings தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அடுத்து Unlink OneDrive என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் புதிய போல்டர் ஒன்றுக்கு மாற்றவும். மீண்டும் செட் அப் இயக்கவும்.
2. டாகுமெண்ட் ஒன்றை இணையத்தில் இணைத்தல்: நம் டாகுமெண்ட் ஒன்றை, ஒன் ட்ரைவ் பயன்படுத்தி நாம் விரும்பும் வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் அமைக்கலாம். ஒன் ட்ரைவில் உள்ள டாகுமெண்ட், படம் அல்லது முழு போல்டரையும் எளிதாகப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களுக்கும், போல்டர்களுக்கும் அவற்றைப் பதிந்து வைக்கும் ஆப்ஷன் இங்கு தரப்படுகிறது. இதன் மூலம் நம் பைல்களுக்கு லிங்க் ஒன்றை வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் ஏற்படுத்தலாம். இதனை எப்படி ஏற்படுத்தலாம்? டாகுமெண்ட்டைத் திறக்க வேண்டாம். டாகுமெண்ட் உள்ள போல்டர் சென்று, அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் Embed என ஓர் ஆப்ஷன் இருப்பதைக் காணலாம். அதனைத் தேர்ந்தெடுத்தால், எச்.டி.எம்.எல். குறியீட்டினை உருவாக்க வழி காட்டப்படும். இதனை வலைமனை அல்லது இணையப்பக்கத்தில் இணைத்து வைக்கலாம்.
3. இணையவெளியில் சர்வே எடுக்க: இணையத்தில் ஒன் ட்ரைவில் நாம் லாக் இன் செய்திடுகையில், அதன் மேலாக Create என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இணைய வெளியில் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட், பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல், ஒன் நோட் பைல் அல்லது டெக்ஸ்ட் பைல் ஒன்றை உருவாக்க வழி காட்டப்படும். 
ஆனால், இங்கு இன்னொரு ஆப்ஷனும் உள்ளது. Excel Survey என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு கேள்விகள் அடங்கிய சர்வே கேள்வி படிவம் ஒன்றை உருவாக்கலாம். உருவாக்கி முடித்த பின்னர், லிங்க் ஒன்றை இதற்கு உருவாக்கி, அதனைப் பார்க்கும் மற்றவர்கள், இதில் பங்கெடுக்கும் வாய்ப்பினைத் தரலாம். இதனைப் பார்த்து இந்த சர்வேயில் பங்கெடுப்பவர்கள், தங்களின் டேட்டாவினை இதில் நிரப்பலாம். ஆனால், முடிவுகள் அனைத்தையும் நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
4. படத்தை முழு திறனுடன் பகிர்ந்து கொள்ள: படம் ஒன்றை ஒன் ட்ரைவில் திறக்கும் போது, அதன் வலது பக்கம், அந்தப் படம் குறித்த தகவல்கள் அடங்கிய கட்டம் ஒன்றைக் காணலாம். இதில்மேலாக உள்ள Share என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கு அனுப்பி, நீங்கள் எப்படி முழு ரெசல்யூசனுடன் இந்தப் படத்தைப் பார்க்கிறீர்களோ, அதே அளவில் மற்றவர்களும் காணும்படி செய்திடலாம். 
அப்படி இல்லாமல், படத்தை பங்கிட மட்டும் விரும்பினால், பகிர்ந்து கொள்வதற்கான லிங்க் உருவாக்கிய பின்னர், View Original என்பதில் கிளிக் செய்திடவும். இது, அந்தப் படத்தினை முழு ரெசல்யூசனுடன் திறக்கும். பிரவுசரின் முகவரிக் கட்டத்திலிருந்து (address bar) இந்த லிங்க்கினை காப்பி செய்திடவும். இதனை குறிப்பிட்ட படத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தவும். 
5. இரண்டு ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்களை பகிர்ந்து கொள்ள: ஒன் ட்ரைவில் நாம் உருவாக்கும் ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் குறைந்த பட்சம் 7 ஜிபி ஆன்லைன் ஸ்டோரேஜ் இடம் தரப்படுகிறது. உங்களுடைய அக்கவுண்ட் ஒன்றுடன் மட்டுமே உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யினை ஒருங்கிணைக்கலாம். ஆனாலும், மற்ற அக்கவுண்ட்களையும் நீங்கள் அணுகலாம். உங்களுக்கு Outlook.com அல்லது Hotmail இருந்தால், பிரவுசரைத் திறந்து (இதனை private /incognito mode எனப்படும் ரகசிய நிலையில் திறக்கவும்.) அந்த அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி, ஒன் ட்ரைவில் லாக் இன் செய்திடவும். இனி புதிய போல்டர் ஒன்றைத் திறந்திடவும். பின் இந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, Share தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்டுடன் தொடர்பு கொண்டுள்ள முகவரியைப் பயன்படுத்தி, Invite People என்ற லிங்க் வழியாக லிங் ஒன்றை உருவாக்கலாம். இந்த இன்வைட் விண்டோவில், செட்டிங்ஸ் மாற்ற, Recipients Can Only View என்று உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடவும். அந்த போல்டரில் உள்ள பைல்களை நீங்கள் மட்டுமே எடிட் செய்திட அனுமதிக்கும் வகையிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக உங்களு டைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் வழி மட்டும் லாக் இன் செய்வதற்காகவும் செட்டிங்ஸ் அமைக்கவும். அமைத்த பின்னர், இந்த லிங்க்கினை உங்களுக்கே அனுப்பவும்.
இனி, இந்த இரண்டாவது அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தி, பிரவுசர் வழி ஒன் ட்ரைவ் செல்லலாம். இதற்கு இடது பக்கம் கிடைக்கும் Shared link இல் கிளிக் செய்து செல்ல வேண்டும்.
6. போல்டருக்கு கவர் இமேஜ் அமைத்தல்: பொதுவாக, ஒரு பிரவுசர் மூலம் ஒன் ட்ரைவினைத் திறந்து, Thumbnails வியுவினைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொரு போல்டரும் அதில் உள்ள அனைத்து படங்களையும் சுழற்சி முறையில் காட்டும். சில போல்டர்களுக்கு, குறிப்பிட்ட கவர் இமேஜ் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து அது மாறாமல் இருக்க விரும்புவீர்கள். அதன் மூலம் அதனை அடையாளம் கண்டு கொள்ள விரும்புவீர்கள். இதற்கு அந்த போல்டரைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் படத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Add As Cover என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான். இனி எத்தனை படங்களை அந்த போல்டரில் போட்டாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த படம் தான் அதன் போல்டர் இமேஜாகக் காட்டப்படும். அதனைக் கொண்டு, அந்த போல்டரை எளிதாக அடையாளம் காண இயலும்.

சம்பாதிக்க ஒன்றும் இல்லை- ஒய்.ஜி. மகேந்திரா



இதோ... இப்ப பாருங்க! ஊழலை எதிர்த்து தைரியமா ஒரு மனுஷன் கிளம்பியிருக்கார், நாங்க அரசியல் பன்ற இந்த நாட்டுல ஊழலே கிடையாது'ன்னு சொல்ல வேண்டிய அரசியல்வாதிங்க.. அன்னா ஹசாரே மட்டும் யோக்கியமா?'ன்னு கேட்கறாங்க? சத்தியமா சொல்றேன்.. நாம உருப்பட போறதில்லை!'' ஒய்.ஜி.எம்...ன் கொதிக்கும் மனதிலிருந்து வெடித்துக் கிளம்பிய இவ்வார்த்தைகள்

"எந்த விஷயத்துக்கு உங்களுக்கு கோபம் வரும்?

விழிகளில் நீர் திரை எழும்ப.. ""நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நினைச்சாலே கண்ணீர்தான். "மறைஞ்சதுக்கு அப்புறம்தான் இந்த உலகம் நிஜமான கலைஞனை கொண்டாடும்ங்கிற உண்மைக்கு சிவாஜியும் சாட்சி! நீங்க சுவாசிக்கறது வெறும் காற்று சார். நான் சுவாசிக்கிறது கணேசன்.. சிவாஜி கணேசன்! (நினைவுகளில் கலங்கினார் ஒய்.ஜி.எம்.)

நீங்க நல்லவரா ? கெட்டவரா? 
மெலிதான புன்னகைக்கு பிறகு "நான் தியாகம் பன்றதில்லை. எங்க அப்பாவுக்கு ஓழுங்கா திவசம் கொடுக்கறதில்லை. ஆனாலும், நான் நல்லவன்! ஏன்னா.. யாருக்கும் நான் கெடுதல் நினைக்கறதில்லை! (மிகச்சுலபமாய் வசீகரிக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.)

வாழ்க்கைங்கற நாடகமேடை திருப்தியா இருக்குதா?
ஏமாற்றங்களை, தோல்விகளை சந்திக்கலைன்னா... மனுஷனா பிறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடும். ஆசைப்படற அத்தனையும், அவ்வளவு சுலபத்துல யாருக்கும் கிடைச்சிடாதுங்க. மனசுக்கு திருப்தி அடையத் தெரியணும்! இந்த வித்தை தெரிஞ்சா மட்டும்தான் சந்தோஷமா வாழ முடியும். என் மனசுக்கு இந்த வித்தை நல்லாவே தெரியும். ஒரு மகனா, நல்ல கணவனா, அன்பான தகப்பனா, ரசிகனோட விருப்பம் அறிஞ்ச கலைஞனா. நான் ரொம்ப மனநிறைவோட இருக்கேறன். வயசுல என்னைவிட சின்னவங்களா இருந்தாலும் என்கிட்டே இல்லாத திறமையோட வந்தாங்கன்னா.. எழுந்து நின்னு வணங்குற அளவுக்கு மனுஷனா இருக்கிறேன். எம்.எஸ். விஸ்வநாதன் இசையையும், முகம்மது ரபி பாடல்களையும் அன்னைக்கு ரசிச்ச மாதிரியே இன்னைக்கும் ரசிக்க மயங்குற மனசு வைச்சிருக்கிறேன் இதுக்கு மேல என்னங்க வேணும்!.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அணு அணுவாக ரசித்து வாழ்ந்தது எந்த வயதில்? 
இப்பவும் அப்படித்தான் இருக்கேறன் ஆனா வாழ்க்கையை நான் ரசிக்க ஆரம்பிச்சது "டான்பாஸ்கோ' பள்ளி நாட்கள் தான். சுற்றுலா போன இடத்துல நாடகம் போட்டதை கேள்விப்பட்டு மறுநாள் வகுப்புல பாடம் நடத்தாம, என்னை நாடகம் போட வைச்சு ரசிச்ச ஆசிரியர் செல்வதுரை. ராமச்சந்திரன், முதல்வர் மேலன்.. இவங்கெல்லாம். இல்லைன்னாநான் இந்த அளவுக்கு வந்திருப்பேனான்னு தெரியலை. அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் மனசுக்குள்ளே பூ பூக்குது வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கணும்னா நல்ல நண்பர்கள் வேணும்னு சொல்வங்க. இந்த வரம் எனக்கு கிடைச்சதும் அப்போதான்! 1965வது வருஷம் என்கூட படிச்ச நண்பர்கள் அத்தனைபேரும்.. இப்பவும் ஒண்ணா இருக்கிறோம். குடும்பத்தோட அடிக்கடி சந்திக்கிறோம். சந்தோஷமா நினைவுகளை பகிர்ந்துக்குறோம் அதனால உங்க கேள்விக்கான பதில் .. என் 15 வயது முதல் இப்போது வரை! இனியும்...

இந்த உலகத்தில் இருக்கற ஆண்களையும் பெண்களையும் தண்டிக்கற வாய்ப்பு! எப்படிப்பட்டவர்களை தண்டீப்பீங்க?
தாய்மை உணர்வோட இருக்கற பெண்மையையும், அந்த பெண்மையை வணங்குற ஆண்மையையும் மதிக்கிறவன் நான். இதுல இருந்து தடம் மாறுறவங்களை நிச்சயம் தண்டிப்பேன். குறிப்பா. பெண்ணோட அனுமதியில்லாம அவளோட மனசையும், உடலையும் காயப்படுத்துற ஆண்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாம மரணதண்டனை கொடுப்பேன். அடுத்து காவலர்கள், கடற்கரையிலேயும், பூங்காக்கள்லேயும் காதலிக்கிறவங்களை விரட்டுற காவலர்கள்! இவங்களுக்கு தண்டனை கிடையாது. ஒரே ஒரு வேண்டுகோள்! காதலிக்கறவன் வேற எங்கே போய் சார் காதலிப்பான்? காதலை வாழ விடுங்க! இல்லேன்னா.. உலகம் ஸ்தம்பிச்சுடும்!'
தமிழர்கள் நல்ல ரசிர்களா? நல்ல மனிதர்களா?
யார் வந்தாலும் வரவேற்று, வாழ்க்கை கொடுத்து "கட்-அவுட்' வைச்சு ஆர்ப்பரிக்கிற அடிப்படையில தமிழர்கர் தீவிர ரசிகர்கள். ஆனா, வந்தவங்களை கடவுளாக்கி கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துறாங்க பாருங்க.. இந்த அடிப்படையில் தகுதி மறந்த. பராம்பரியம் தொலைத்த மனிதர்கள் சார்... புகழுக்கு மயங்குறது தமிழனோட பலவீனம். பாருங்க.. உழைச்சு சம்பாதிக்க வாங்க வேண்டிய பொருளை இலவசமா வாங்குறத்து தயாரா இருக்கறோம். நாம நல்ல மனிதர்களா?

வரலாறு: 

தங்களின் 62 நாடங்களை உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். ஒய்.ஜி.மகேந்திரா. இவரது யு.ஏ.ஏ. நாடகக்குழு 2012ல் தனது 60வது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கிறது. தற்போது அமெரிக்க நாடக கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஒய்.ஜி.எம். 2012ல் அவர்களை தமிழகத்தில் மேடையேற்றவும் திட்டமிட்டிருக்கிறார்.

மின்னல் கேள்விகள்... மின்னும் பதில்கள்.......

ஒரே ஒருநாள் மனதுக்கு பிடித்த இன்னொரு தொழில் செய்யலாம்! என்றால்..

எல்லாவிதமான இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவன் என்ற முறையில். எனது குடும்பத்தினர் மற்றும் நான் ரசிக்கும் எம்.எஸ்.வி.யின் முன்னிலையில் மேடையேறுவன். நாள் முழுக்க அவர்களை மகிழ்விப்பேன்.

சென்னையில் மிகவும் பிடித்த இடம்? விரும்பும் மாற்றம்?
சபையர் திரையரங்கும், வுட்லேண்ட், டிரைவ் இன் ஹோட்டலுமே என் மனதிற்கு நெருக்கமான இடங்கள். இரண்டுமே தற்போது இல்லை. மீண்டும் வந்தால் மகிழ்வேன்!.

2012ல் உலகம் அழியப்போகிறது! இந்த செய்தி உங்களை பயமுறுத்துகிறதா?
(சிரிக்கிறார்) உலகமென நான் நினைக்கும் என் ப்ரியத்துக்குரியவர்கள் மறைந்த பொழுதெல்லாம் என் உலகம் அழிந்திருக்கிறது. இதன்படி. கடைசியாக என் உலகம் அழிந்தது 2009ல் நாகேஷ் மரணத்தில்


ஓய்வு நேரங்களில்.....
சக்தியுள்ள இசையும், சத்துள்ள கதையும் கொண்ட படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பது பிடிக்கும். இந்த வகையில், நான் அதிகம் பார்ப்பது ஆங்கில திரைப்படங்களைத்தான்!.

இதுவரை சம்பாதிக்காத ஒன்று?
அவ்வப்போது கெட்டப்பெயர் உட்பட எல்லாமும் சம்பாதித்து விட்டேன். என் நினைவு புத்தகத்தையும், கனவு பெட்டகத்தையும் புரட்டி பார்த்தவரை.. இனி சம்பாதிக்க ஒன்று இல்லை!.


-துரை கோபால்

தேனியில் 'மரணக்கிணறு


2014 
00:22
தேனி நேரு சிலையில் இருந்து போடி விலக்கு வரையிலான ரோட்டை போலீசார் 'மரணக்கிணறு' என மதிப்பீடு செய்துள்ளனர். இந்த ரோட்டில் விபத்துக்கள் நடக்கின்றன. இந்த ரோட்டில் போலீசார் கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.நேற்று காலை பிளஸ் 1 மாணவர்கள் மூவர், ஒரே டூவீலரில் போடியில் இருந்து க.விலக்கு செல்வதற்காக இந்த ரோட்டில் சென்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் எஸ்.ஐ., பவுன்ராஜ், இவர்களை மடக்கினார். ''எதற்காக விதியை மீறி இத்தனை பேர் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், 'தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வேகமாக செல்கிறோம்' என்றனர்.

''இவ்வளவு வேகமாக சென்றால் உங்களை பார்க்க மற்றவர்கள் வர வேண்டியிருக்கும்; ஒரே டூவீலரில் மூவர் பயணிப்பது தவறு,'' என அறிவுறுத்திய எஸ்.ஐ., பவுன்ராஜ், மாணவர்களை ஒரு கி.மீ., ஓடச்சொன்னார்; பின், நின்ற இடத்திலேயே குதிக்கச் சொன்னார்.அவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் பஸ்சில் செல்ல பணத்தையும் கொடுத்து அனுப்பினார்.

எஸ்.ஐ., பவுன்ராஜ் கூறியதாவது: பிளஸ் 1 படிக்கும் மாணவர்களிடம் ஆபத்தை உணராமல் டூவீலரைகொடுத்து அனுப்பி விடுகின்றனர். அவர்களுக்கு தண்டனைத்தொகை விதித்து கோர்ட்டிற்கு இழுத்தால், கல்வி பாதிக்கும். தவறை நினைவில் நிறுத்தவும், அடுத்து தவறு செய்யாத வகையில் அவர்கள் மனதில் பதிய வைக்கவும், இதுபோன்ற தண்டனை கொடுத்தோம், என்றார்.

'ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சி : இனம் புரியாத காய்ச்சல்



தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், மக்கள் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசான மழை பெய்த நிலையில், சில நாட்களாக, இனம் புரியாத காய்ச்சல் பரவி வருகிறது. எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல் பொதுமக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். காய்ச்சல் மட்டுமின்றி, அதிக அளவில் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துஉள்ளனர்.
தர்மபுரியில்...



தர்மபுரி மாவட்டம், ஜம்புகானாகோட்டை பகுதியில், 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தமிழகம் முழுவதும், இதுபோன்ற பாதிப்பு உள்ளது.

பாதிப்பு ஏன்?



ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், கடந்த, 10௦ ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால், டெங்கு, மூளைக்காய்ச்சல் பாதிப்பு, ஜூன் மாத இறுதியில் தான் தொடங்குகிறது. செப்., மாதத்தில் அதிகமாகி, டிசம்பர் வரை தொடரும்.தற்போது, பருவ மழை சரியாக பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு அளவில் மழை பெய்துள்ளது. இதில் இருந்து உருவான கொசுக்களால், டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பாதிப்பு உள்ளது.ஏப்., மாதத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு, தொடங்கி இருக்க வேண்டும். உத்தரவுகள் போடப்பட்டாலும், கீழ் நிலையில், சரியாக செயல்படுத்தப்படவில்லை. நோய் தடுப்புக்கு போதிய நிதி அளித்தல், தேவையான ஆட்களை தருவதல், கீழ்நிலை அதிகாரிகளுக்கும் அதிகாரம் தருவதும் முக்கியம்.தற்போதைய நிலை தொடருமானால், செப்., மாதத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்போதாவது நோய் தடுப்பு பணிகளில் அரசு அக்கறை காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன. திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

'ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சி:

*முட்டை, கொசுப்புழு, கூட்டுப்புழு, முழுமையான கொசுவாக மாறுதல். 15 நாட்களில் கொசு முழு வளர்ச்சி பெற்று விடும்.
*தட்ப வெப்ப நிலை மாற்றத்தால், தற்போது, 10 நாட்களிலேயே, கொசு முழு வளர்ச்சி பெற்று விடுகிறது.
*வளர்ச்சி வேகம் அதிகரிப்பால், நோய் தோன்றல், பரவுதலும் மிக வேகமாக உள்ளது.

புது தலைமுறை கொசுவாலும் பாதிப்பு!



டெங்கு நோய் பாதித்தவரை கடித்த கொசு, கிருமியை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நோய் பரப்பும் என, நினைப்பது தவறு. நோய் பாதித்த ஒருவரை கொசு கடித்தால் போதும். அதன் மூலம் அடுத்தடுத்து உற்பத்தியாகும் புது தலைமுறை கொசுக்களிலும், டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் இருக்கும்.

'ஏடிஸ்' கொசுக்களை ஈர்க்கும் வியர்வை வாடை


*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு வருகிறது. இதைத் தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கைச் சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.
*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ெவளிர் கலர் உடைகளை அணியலாம்.
*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை, கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளித்தல், வியர்வை வாடை மறைக்க வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.
*வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ் நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
*வீட்டைச்சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற, தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.
*நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நிலவேம்பு கசாயம் சிறந்த தீர்வு.

93 பேர் இறப்பு:



தமிழகத்தில், 2008 முதல், 2014 மே மாதம் வரை, 25,663 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 93 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -
Click Here

சுகர், பிரஷர் மாத்திரைகள் இலவசம்; மோடி அரசின் மெகா தி்ட்டம்

புதுடில்லி : நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள், மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலகட்டத்தில், மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வலி, தொற்றுநோய் பாதிப்பு, நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, அத்துறையின் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக, தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் 75 சதவீத மருந்துகளிலிருந்து, 50 வகையான மருந்துகளை, இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், ஒரே முயற்சியில் அமல்படு்த்தமுடியாது என்ற நிலையில், பல்வேறு கட்டங்களாக, வகைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, குறிப்பிட்ட நகரங்களில், முக்கிய மருத்துவமனைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும், இதன்மூலம் பயன்பெற வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

பாதிப்பை தடுக்கும் மருந்து: இத்திட்டம், முழுமையாக அமல்படுத்தப்படும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரும், தங்களுக்கு அருகில் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனை நிலையங்களிலிருந்து வலி நிவாரண மருந்துகள், தொற்றுநோய் பாதிப்பை தடுக்கும் மருந்துகள், நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 விதமான நோய்களை குணமாக்கும் மருந்துகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை ஏற்படும் என்று அவர் கூறினார்.

1993-98ம் ஆண்டு காலகட்டத்தில், டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹர்ஷவர்தன், மேற்கொண்ட "அத்தியாவசிய மருந்து திட்டம்' என்ற பெயரிலான திட்டம், இந்திய மக்களின் மருத்துவ சேவைகள் மற்றும் சேவைகள் குறித்த முழுத்தகவல்களை கொண்டிருந்ததாக அமைந்திருந்தது. நாட்டு மக்கள், இன்று தங்களது வருமானத்தில், 60 சதவீதத்தை, மருத்துவ தேவைகளுக்காக என்று ஒதுக்குகின்றனர். தங்களது வருமானத்தில், இவ்வாறு அதிக பங்கை, அவர்கள் ஒதுக்க காரணம், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு அதிக விலைமதிப்பை கொண்டதாக இருப்பதே ஆகும். மத்திய அரசு, தற்போது, சுகர் உள்ளிட்ட 50 அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்க இருப்பதன் மூலம், மக்களின் மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, பெருமளவு குறைவதோடு மட்டுமல்லாது, அவர்கள் சீரிய உடல்நலத்துடன் வாழ்ந்து, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகையும் ஏற்படும் என்று மருந்துகள் குறித்த அறிவியல் ஆய்வில் நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளரும், பேராசிரியருமான ரஞ்சத் ராய் சவுத்ரி கூறியுள்ளார். மத்திய அரசு இலவசமாக வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ள 50 அத்தியாவசிய மருந்துகளை தேர்வு செய்த குழுவின் தலைவராக சவுத்ரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹர்ஷவர்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட "டில்லி மாடல்' மருத்துவ திட்டம், 12 மாநிலங்களிலேயே அமல்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது, இதுகுறித்த நடவடிக்கையை, வளர்ந்த நாடுகளும் பின்பற்றுமாறு, அவைகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஃப்ராங்க்ளின் - தடைக்கல்லும் படிக்கல்லே

ஏதாவது ஒரு சின்ன விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டாலே போதும், அதை நான்தான் கண்டுபிடித்தேன் என காப்பி ரைட் வாங்கும் காலமிது. ஆனால், தான் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை வேண்டாம்; அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரட்டும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர்தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். இத்தனை நல்ல உள்ளம் கொண்ட இவரது வாழ்க்கை, சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.

1706-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த இவரது தந்தை மெழுகுவத்தி மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்தார். இவருக்கு மொத்தம் 17 குழந்தைகள். அதில் 15-வது குழந்தைதான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். சிறுவயதிலிருந்தே குடும்பச் சூழ்நிலையால் வறுமையில் வாடிய ஃப்ராங்க்ளினால் ஓர் ஆண்டுக்குமேல், படிப்பை தொடர முடியவில்லை. அதனால் தன் தந்தையோடு இணைந்து மெழுகுவத்தித் தயாரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினார்.

 

இதற்குபின், தன் அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்து பெண்களுக்கான உரிமைகளைப் பற்றிப் புனைப்பெயரில் புரட்சிகரமாக எழுதினார். அதற்காக இவரது அண்ணன் சிறை வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் ஃப்ராங்க்ளினை வெறுத்து ஒதுக்கினர். வீட்டைவிட்டு வெளியேறி தனியாகப் பத்திரிகை நடத்தத் தொடங்கினார் ஃப்ராங்க்ளின். பத்திரிகையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

ஒருநாள் மழையில் நனைந்தபடி பட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படுவதை உணர்ந்தார். இதன் மூலம் பெரிய கட்டடங்கள் இடிமூலம் தாக்கப்படுவதைத் தடுக்கலாம் என்று இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.

அதுமட்டுமின்றி மின்சாரம் தொடர்பான கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை கோரவில்லை. அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதனாலேயே அவர் கண்டுபிடித்த விஷயங்களைத் தனது சொத்தாக அவர் நினைக்கவில்லை.

மக்களின் உரிமை பற்றிப் பத்திரிகையில் எழுதியதற்காக நிந்திக்கப்பட்டார். ஆனால், பிற்காலத்தில் அவரது உருவம் அமெரிக்க டாலரில் இடம்பெறுகிற அளவுக்கு உயர்ந்தார். உண்மையாக உழைப்பவர்கள் இன்று துன்பம் அனுபவித்தாலும், வரலாற்றில் இடம் பெறுவார்கள் என்பதற்கு ஃப்ராங்க்ளினின் வாழ்க்கை ஓர் அற்புதமான உதாரணம்!

How to compare housing loan interest rate?

வீட்டுக் கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்குவோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்ட காலத்தில் சில லட்சம் ரூபாய்  மிச்சமாகும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகித  சதவிகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தில், அது மாறுபடும் வட்டி விகிதமா, நிலையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந்த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்), ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது கடனுக்கான வட்டி உயர்த்தப்படும். இதேபோல், வட்டி விகிதம் குறைக்கப் படும்போது கடனுக்கான வட்டி குறையும்.

நிலையான வட்டி விகிதம் (ஃபிக்ஸட் ரேட்) என்பது கடன் வாங்கும் தேதியில் எந்த வட்டி விகிதம் இருக்கிறதோ, அது அப்படியே சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், குறைத்தாலும் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்துக்கு அப்படியே இருக்கும்.



வீட்டுக் கடன் போன்ற பெரிய கடனை வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வாங்குவோம். இதை வாங்குவதற்குமுன், எந்தவிதமான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருமுறை சரியாக முடிவெடுத்துவிட்டால், பிற்பாடு அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை அல்லவா!

Sunday, June 22, 2014

தென்மேற்குப் பருவமழை 2014

சில ஆண்டுகளாக போதுமான மழையில்லாத நிலையில், 'இந்த ஆண்டு எப்படி இருக்குமோ?’ என்கிற கவலைக்குரிய கேள்வி, விவசாயிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இக்கேள்விக்கான பதிலாக... இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பற்றிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், ''தமிழ்நாடு, மழை மறைவு மாநிலமாக இருந்தாலும்... தென்மேற்குப் பருவமழைக் காலத்தில்தான் (ஜூன்-செப்டம்பர் வரை) ஓர் ஆண்டில் பெறக்கூடிய மொத்த மழையளவில், 32 சதவிகித அளவு மழையைப் பெறுகிறது. இந்தப் பருவத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பெறுகின்றன.

 
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல்பகுதியில் மேற்பரப்பு நீரில் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றைக் கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து பெறப்பட்ட 'மழை மனிதன்’ எனும் கணினிக் கட்டமைப்பைப் (Australian Rainman international V.4.2)  பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலமாக... சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும் மழையைவிட 10% கூடுதலாகவோ அல்லது குறைவாகவோதான் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. 

அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும் சராசரி மழை அளவைக் காட்டிலும், 10% முதல் 20% குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகப் பெய்யும் சராசரி மழை அளவைக் காட்டிலும் 20% குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிஷேல் ஒபாமா Let's move

 'லெட்ஸ் மூவ்’ - அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!

எதற்காக?!

 'சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.

 கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.

 டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.

பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’.


- இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், 'லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!

அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்... வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். '2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்... போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்.... 'லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.

'குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ - இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.

பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்... இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் 'மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி... துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.

'பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.

துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், 'துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்' என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!

Sunday, June 15, 2014

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழி...

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

-தமிழ் தந்த சித்தர்கள்