Monday, June 9, 2014

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்அவனுக்குப்பசியெடுத்ததுஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்கண்டான்மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப்பறித்துத் தின்றான். 
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனதுபாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டுதொங்க ஆரம்பித்தான்குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக்கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்என்று திரும்பத் திரும்ப அலறஆரம்பித்தான்உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்துவிட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்மரத்தில்தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்அவன் மேல் ஒரு சிறிய கல்லைவிட்டு எறிந்தார்கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம்வந்தது. "பெரியவரேஉதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே.அறிவில்லையா உமக்குஎன்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல்எறிந்தார்மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசிமேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால்உம்மைச் சும்மா விட மாட்டேன்என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்இளைஞன் இப்போதுஇன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்விடுவிடுவெனஇறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்அவரை சரமாரியாகத்திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்உம்மை நான் உதவிதானே கேட்டேன்?"என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான்செய்தேன்என்றார்இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால்உறைந்து போயிருந்தாய்உன் மூளை வேலை செய்யவில்லைநான் கல்லைவிட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்றுயோசிக்க ஆரம்பித்தாய்யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக்காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்உன்னை உன்னாலேயேகாப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்ததுஅதிலிருந்து உன்னைநான் திசை திருப்பினேன்என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய்விட்டார்.
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

No comments:

Post a Comment