Monday, June 9, 2014

Don't Drink And drive true story....

மது

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் 
சில நிமிடங்கள் எடுத்து கொண்டு 
இந்த பதிவை முழுதும் படிக்கும் படி கேட்டுகொள்கிறேன் 

I REQUEST ALL OF YOU TO PLEASE GIVE YOUR 10 MINUTES IN READING THIS 
ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம்செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் 
பணம் பெறுபவர்உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையானபணம் இல்லை என்று சொன்னார்அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்றுவினவினான்.
அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்ல டா செல்லம் குறைவாகஉள்ளது என்றார் 
எந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். 
நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்றுகேட்டேன்.
அதற்க்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள்பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான் 
மேலும் அவன் தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன் 
அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள்என் தங்கையிடம் கொத்து விடுவார்கள்என் தங்கை கடவுளிடம் சென்றுவிட்டால்என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். 
நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மாகடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும்அம்மா கடவுளிடம்செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன்அனால் அம்மா கடவுளிடம்செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார்.
மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதைகொடுப்பார்கள்அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பால் என்றும்கூறினான் 
நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்தபணத்துடன் சேர்த்துமீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன்.
அவனும் இசைந்தான்நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல்இருந்தது 
அவன் கடவுளுக்கு நன்றி கூறினான் 
நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் 
பின்னர் உள்ளூர் தினசரி ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது, 
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த தாய் மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்குவண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர் குடித்துஇருந்ததாலேயே விபத்து நிகழ்த்து என்றும் வந்த அந்த செய்தி 
மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய(coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி 
இந்த சிறுவன் அவர்கள் மகனா?
இரண்டு நாள் கழித்து தினசரியில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்துவிட்டால் என்றுநான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன் 
அந்த பெண் சடலமாக இருந்தால் கையில் சிறுவனின் புகைப்படமும் அந்தபொம்மையும் இருந்தது.
அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் 
அந்த சிறுவனின் தன் அன்னையிடமும் தங்கையிடம் வைத்து இருந்த அன்பும்பாசமும்
அப்படியே உள்ளது.
அனால் ஒரு குடிகாரன் போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில்அந்த குடும்பம் சிதைந்து விட்டது 


தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் 
உங்கள் இதயத்தை இது தைத்து இருந்தால் பகிருங்கள்

No comments:

Post a Comment