Tuesday, June 10, 2014

உண்மைக்காகப் போராடிய டார்வின்!

உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரியம் வேண்டும். அந்த தைரியம்  டார்வினுக்கு இருந்தது. அந்த தைரியத்தில்தான், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்கிற உண்மையைச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  

இங்கிலாந்தில் பிறந்த  டார்வின், தன் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல், விலங்குகளையும், பூச்சிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். இதைக் கண்ட அவரது அப்பா, 'நீ இப்படி பூச்சிகளையும் விலங்குகளையும் வளர்த்தால்,  எப்படி உருப்படுவாய்?’ என்று திட்டினார். இதனால் மருத்துவம் படிக்கப்போனார் டார்வின்.ஆனால், அங்கு நடக்கும் அறுவை சிகிச்சைகள், மருந்து பாட்டில்கள், நோயாளிகளின் அவஸ்தை அவரைப் பயமுறுத்தின. மேற்கொண்டு மருத்துவம் படிக்காமல், இயற்கையியல் வல்லுநர் படிப்புக்கு மாறினார்.தென் அமெரிக்காவின் கனிமவளங்களைக் காணச்சென்ற அவர், ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றிப் பார்த்தார். இயற்கையின் பல மாற்றங்களை உற்றுநோக்கினார். பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தவர், அவை குறிப்பிட்ட சில உயிரினங்களின் எலும்புகளோடு பொருந்திப்போவதைக் கண்டார். இதற்கான காரணத்தைத் தேடிய போது, ஒருசில விலங்கிலிருந்து பலவகை  விலங்குகள்  உருமாறி வந்திருப்பதைக் கண்டார். இதுபோல, மனிதனும் குரங்கி லிருந்து  பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்கிற உண்மையை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்ல, அவர் பல ஆண்டு  ஆராய்ச்சி செய்யவேண்டியிருந்தது.  
  
 

என்றாலும், இந்த உண்மையை உலகம் உடனே ஒப்புக்கொள்ள வில்லை. மத அமைப்புகள் டார்வினின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தன. என்றாலும், அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. உண்மையே ஜெயிக்கும் என்றார். 'உலகத்தைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ, அன்றைக்கே நான் இறந்துபோவேன்' என்று கூறினார்.டார்வின் இறந்து பல ஆண்டுகள் கழித்து, அவரது கண்டுபிடிப்பு உண்மை என எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். நீங்கள் சொல்வது உண்மை எனில், உலகம் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீங்கள் அதில் உறுதியாக இருங்கள். அப்படி இருந்தால், நீங்களும் டார்வின் ஆவீர்கள்!

No comments:

Post a Comment