Friday, December 13, 2013

சிறுவாணிக்கு இப்போ வயசு 80

வாழ்ந்தனர். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில், மோசமான தண்ணீர் வசதியுடைய பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது கோவை. இப்படி, தண்ணீருக்காக கஷ்டப்பட்ட கோவைக்கு, சிறுவாணித் தண்ணீர், குடிநீராக கொண்டுவரப்பட்டது, மிகப்பெரிய வரப்பிரசாதம்.
உலகளவில் இரண்டாவது அதிக சுவை கொண்ட தண்ணீர் என்று சிறுவாணிக்கு ஒரு பெருமையுண்டு. சிறுவாணியின் முதன்மையான நீராதாரம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முத்திகுளம் அருவி.
குஞ்சரமலை, எலிவால்முடி ஆகிவற்றுக்கு இடையில், 60 அடி நீளம், 45 அடி அகலம், 22 ஆடி ஆழத்துடன், முக்கோண வடிவத்திலான இடத்தில் முத்திகுளம் அருவி விழுந்து கொண்டிருந்தது. மேலும், மழைநீரை சேமிக்கும் வாய்ப்பும் இருந்தது. கோவைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான சூழல் இருந்ததால், 1889ல் முத்திகுளம் அருவியில் குடிநீர் எடுப்பதற்கு ஆய்வு துவங்கியது.
இடையில், நொய்யல் படுகை நீர்த்திட்டம், சித்திரைச்சாவடி வாய்க்கால் திட்டம், ஆர்ட்டீசியன் ஊற்று, சங்கனூர் பள்ளம், சிங்காநல்லூர் குளம் நீர் என்று பல்வேறு நீர்த்திட்டங்கள் போடப்பட்டன. எதுவும் கதைக்கு ஆகவில்லை; கனமழை, நிலச்சரிவு, குகை பாதை என்று பல தடைகளை கடந்து சிறுவாணி நீர்த்திட்டம் வந்தது.
கடந்த 1927ல் 41 லட்ச ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட பணிகள், 1931ல் முடிவடைந்தன. ஆனால், பணிகள் நிறைவடைவதற்கு முன், 1929லேயே கோவைக்கு சிறுவாணி நீர் கிடைத்துவிட்டது. கடல் மட்டத்தில் இருந்து 863 அடி உயரத்தில் இருக்கும் சிறுவாணி அணையில், நீர்தேக்கி வைக்கும் அதிகபட்ச உயரம் 50.65 அடியாகும்.
அதனால், புவியீர்ப்பு விசையிலேயே தண்ணீர் கொண்டு வருவது, இத்திட்டத்தின் இன்னுமோர் சிறப்பாகும். மரியாதையான பேச்சு, சிறந்த விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளை கொண்ட கோவை மக்களுக்கு, இயற்கை அளித்த நன்கொடை சிறுவாணி. ஊரைக்கொண்டாடும் இந்த நாளில், உயிருக்கு நீரூற்றும் சிறுவாணி அன்னையை நோக்கி சிரம் தாழ்த்தி கரம் குவிப்போம்.


நகரின் தென்பகுதியில் நொய்யல் ஓடினாலும், ஒரு காலத்தில் கிணற்று நீரை நம்பித்தான் கோவை மக்கள் 

No comments:

Post a Comment