Friday, December 13, 2013

சிறையல்ல... கோவையின் நுரையீரல்!


ஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு?. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, பிராணவாயுவாக மாற்றும் பல ஆயிரம் மரங்களைக் கொண்டிருப்பதுதான் இந்த சிறையின் சிறப்பு.
சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள்வெட்டி வீழ்த்தப்பட்ட இந்த நகரின் பசுமைப்பரப்பாக இருப்பது, இந்த சிறை வளாகம் மட்டுமே. தமிழகத்தில் அமைக்கப்பட்ட மிகப்பழமையான சிறைகளில் இதுவும் ஒன்று. 1872ல் இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரபரப்பளவில் கட்டப்பட்டது. இச்சிறையில் ஒரே நேரத்தில் 2,208 பேரை அடைக்கும் இடவசதி உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலர் இச்சிறையில், கடும் சித்ரவதையை அனுபவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழன் என புகழ்பெற்ற வ.உ.சிதம்பரனார் இச்சிறையில் இழுத்த செக்கு, அவர் நினைவாக சிறையின் முன் பகுதியில் பாதுகாக்கப்படுகிறது. இச்சிறையின் கண்காணிப்பாளராக முருகேன் உள்ளார்; சிறைத்துறை டி.ஐ.ஜி.,ஆக இருக்கிறார் கோவிந்தராஜன்.

No comments:

Post a Comment