Friday, December 13, 2013

நெடிய வரலாறுடைய நீதிமன்றம்


கோவை நீதிமன்ற மன்ற வரலாறு 135 ஆண்டு பழமையைக் கொண்டது. இப்போதுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழமையைப் பறை சாற்றிய படி, கம்பீரமாக நிற்கும் செந்நிற கட்டடம், ஆங்கிலேயேரின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் வங்கியும், கோர்ட் அலுவலகமும் செயல்படுகிறது. மேல் தளத்தில் மகளிர் கோர்ட், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் இரண்டு சார்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த நீதிமன்றம் கட்டிய பிறகு குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் சில கோர்ட்கள் செயல்பட்டன. இக்கட்டடத்தின் வரலாறும் 100 ஆண்டுகள் தாண்டியது தான். அரிய பல ஆயிரம் தீர்ப்புகளைக் கூறியதற்கான நினைவுச் சின்னமாக காட்சி அளிக்காமல் இன்று சிதைந்து, புதர் மண்டிக்கிடக்கிறது குதிரை வண்டி கோர்ட் கட்டடம். இந்த வளாகத்தில் 30 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மாவட்ட நீதிபதியாக உள்ளார் சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment