இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பார்சுவநாதர், மகாவீரர், சாந்தி நாதர், சுமதி நாதர், ஆதி நாதர் முதலிய சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும். இவை பளிங்கினால் ஆனவை . கட்டடத்திற்கு வேண்டிய இதர பளிங்குக் கற்களும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
ஆலயத் தூண்களுக்காக, அரத்தினால் அறுக்கக்கூடிய அளவிற்கு மென்மையான கற்கள், காந்தி பிறந்த மண்ணான போர்பந்தரிலிருந்து கொண்டு வரப்பட்டன.
சமணர் கட்டட சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமணர் ஆலயத்தை விட சிறப்பு மிக்கதாய் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment