Friday, December 13, 2013

பளிங்கினால் ஒரு ஆலயம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் அழகிய சமண ஆலயம் உள்ளது. கோவையில் உள்ள சுவேதாம்பர சமண சங்கத்தினரால், சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக 1981ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பளிங்கினால் ஆன மாளிகையாக பளிச்சிடுகிறது.
இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பார்சுவநாதர், மகாவீரர், சாந்தி நாதர், சுமதி நாதர், ஆதி நாதர் முதலிய சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும். இவை பளிங்கினால் ஆனவை . கட்டடத்திற்கு வேண்டிய இதர பளிங்குக் கற்களும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
ஆலயத் தூண்களுக்காக, அரத்தினால் அறுக்கக்கூடிய அளவிற்கு மென்மையான கற்கள், காந்தி பிறந்த மண்ணான போர்பந்தரிலிருந்து கொண்டு வரப்பட்டன. 
சமணர் கட்டட சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமணர் ஆலயத்தை விட சிறப்பு மிக்கதாய் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment